"கோள்கள் நடத்தும் கோளாட்டம் "
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் தமது வாழ்நாளில் தொடர்ந்து கஷ்டபட்டுக் கொண்டே இருப்பதற்கும் அல்லது தொடர்ந்து தனது வாழ்நாளில் உயர்ந்து கொண்டே செல்வதற்கும் அவரது ஜாதகத்தில் உள்ள கிரக சஞ்சார நிலை ,லக்கன அதிபதியின் வலிமை,தசா பலன்கள் மற்றும் கோச்சார பலன்கள் போன்றவை காரணமாக அமைகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் என்னதான் கிரகங்கள் வலிமை பெற்றதாக இருப்பினும், அந்த கிரகங்கள் ஜாதகருக்கு யோகம் தரக்கூடிய கிரகமாக அமைந்து சுபத்துவம் பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.
இவை மட்டுமல்லாது அந்த யோகத்தை தரக்கூடிய சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தசை நடப்பில் இருக்க வேண்டும்.
என்னதான் யோகம் பெற்ற சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தாலும் ,
"லக்கனாதிபதி பலமடைந்து" இருந்தால்தான் அந்த யோகத்தை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.
ஒரு சிலருக்கு பிறப்பிலிருந்து,
மகிழ்ச்சியை அனுபவித்து
வாழக்கூடிய காலகட்டத்தில் அவயோக கிரகங்கள் பாவர்களின் பிடியில் அகப்பட்டு அதன் தசைகள் தொடர்ந்து நடைபெற்று, லக்கனாதிபதியும் பலம் இழந்து உள்ள அமைப்பை பெற்றவர்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகிறது.
ஒருவருக்கு சுபத்துவம் பெறாத நிலையில் லக்கன அவயோகிகள் திசைகள் நடப்பில் இருந்தாலும் அல்லது மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதிகளின் தசை நடந்தாலும் அல்லது யோகத்தை தரக்கூடிய கேந்திர மற்றும் கோணாதிபதிகள் பாவத்துவம் அல்லது பலம் இழந்த நிலையில் தசை நடப்பில் இருந்தாலும் சாதகர் இன்னல் பல அனுபவிக்க கூடிய காலமாக அமைகிறது.
மேஷம் மற்றும் விருச்சிகம் லக்கனங்களுக்கு புதன் மற்றும் சனி தசையும், ரிஷபம் துலாம் லக்னங்களுக்கு குரு, சூரிய மற்றும் சந்திர தசையும்,
மிதுனம் மற்றும் கன்னி லக்கினத்திற்கு செவ்வாய் தசையும்,
கடகம் மற்றும் சிம்ம லக்கனங்களுக்கு சனி மற்றும் சுக்கிர தசையும்,
தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு சுக்கிர தசையும்,
மகரம் மற்றும் கும்ப லக்கனங்களுக்கு சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் தசையும் அவயோக தசைகள் ஆகும்.
ஒரு சில நேரங்களில் இலக்கன அவயோக கிரகங்கள்,
ராசி நாதனாகவோ அல்லது வேறு வகையில் பலம் இழந்து உள்ள நிலையில் மட்டுமே யோக பலனை சாதகருக்கு தருகிறது.
ஒருவரது ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு அல்லது மறைவிட ஸ்தான அதிபதி தொடர்பு பெறும் பொழுது அவை பலம் இழந்து அதன் தசை நடைபெறும் காலங்களிலும் இன்னல்களை அனுபவிக்க கூடிய காலமாக அமைகிறது.
சுபத்துவம் பெற்ற நிலையில் மறைவிட ஸ்தானத்தில் நின்ற கிரகங்களாக இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை பெற்ற கிரகங்களாக இருந்தாலும் அல்லது பலம் இழந்த நிலையில் உள்ள கிரகங்களாக இருந்தாலும் அதன் தசை காலங்களில் யோக பலனை ஜாதகருக்கு வழங்குகிறது.
ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதிகளை சுப கிரகங்கள் பார்வை செய்ய அக்கிரகங்கள் பலம் பெற்று இருந்தால் அந்த ஸ்தான ஆதிபத்தியம் வழியாக கெடுபலன்களை அதிகம் தருகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்று அஷ்டம ஸ்தானமான ஆயுள் ஸ்தானமும் பலமடைந்து நிற்பின், பாதக மற்றும் மாரகாதிபதிகள் தசைகள் மாரகத்தினை தந்து விடுவதில்லை.
ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதி தசை காலத்தில் கடன்,பிணி மற்றும் எதிரிகளால் தொல்லை போன்ற கஷ்டங்களை தன் தசை காலங்களில் சாதகருக்கு தரும்.
நன்றி.
+தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
என்றும் அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment