ஜாதகத்தில் கிரகங்கள் காட்டும் உறவு நிலை
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நவக்கிரகங்களை உறவுகளோடு தொடர்புபடுத்தி பார்க்கும் உன்னத கலை ஜோதிடவியல் ஆகும்.
ஒரு குடும்பத்தின் தலைவன் தந்தையைப் போல,
நவகிரகங்களின் தலைவன் சூரியன் ஆகும்.
சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும், புதனை மாமன் வர்க்கமாகவும், செவ்வாய் பகவானை
சகோதரனாகவும், சுக்கிரனை மனைவியாகவும் கருதப்பட்டு அக்கிரகங்களின் வழியாக அவ்வுறவுகளை பற்றி அறிந்து கொள்ள உதவியது.
அதேபோல சாதக கட்டத்தில் இலக்கனத்தைக் கொண்டு சாதகரை பற்றியும் , மூன்றாம் மற்றும் பதினொன்றாம் இடங்களை கொண்டு சகோதரனையும், நான்காம் இடத்தைக் கொண்டு தாயையும், மற்றும் ஐந்தாம் இடங்களைக் கொண்டு மாமன் வர்க்கங்களையும் மற்றும் அவனுக்கு பிறக்கும் புத்திரரை பற்றியும், ஏழாம் இடத்தை கொண்டு மனைவியையும் மற்றும் ஒன்பதாம் இடத்தைக் கொண்டு தந்தையையும் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.
மூன்றாம் இட அதிபதியினை சகோதர ஸ்தானாதிபதியாகவும், நான்காம் இட அதிபதி மாதுர் ஸ்தானாதிபதியாகவும், ஐந்தாம் இட அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாகவும், ஏழாம் இட அதிபதி களத்திர ஸ்தானாதிபதி ஆகவும், ஒன்பதாம் இட அதிபதியை பிதுர் ஸ்தானாதிபதியாகவும் கருதப்படுகிறது.
ஒருவரது ஆயுளை கணிக்க எட்டாமிடம் அதன் அதிபதி மற்றும் நவகிரங்களில் சனிபகவான் ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ந்து அறியப்படுகிறது.
ஒருவர் தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை பற்றிய இலக்கனம் ,
இரண்டாம் இடமான குடும்பஸ்தானம்,
ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான ஆயுள் ஸ்தானம் அதனதனுடைய அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒருவன் தன் வாழ்க்கையில் பொருள் ஈட்டக்கூடிய நிலை பற்றி அறிய தன ஸ்தானமான 2-ஆம் இடம், பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடம், லாப ஸ்தானமான 11-ஆம் இடம் மற்றும் லக்கினாதிபதியின் நிலையை கொண்டும் ஆராய்ந்து அறியப்படுகிறது.
ஒருவர் கடல் கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பற்றி அறிய மறைவு ஸ்தானமான எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களை அறிய வேண்டும்.
ஒருவர் வாழ்வில்
எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவமான அமைப்பைப் பெற்றவர்கள் கடல் கடந்து வெளிநாடு சென்று பொருளீட்டி பெரும் செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உரிய தசையில் அமையும்.
ஒருவரது தொழில் நிலை பற்றி அறிய அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தும் தொடர்பில் இருக்கிறதோ,
அதன் தொழில் அமையும் அந்த தொழிலானது அதற்குரிய தசையில் மட்டும் சிறப்பாக இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருந்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறதோ, அது சார்ந்த தொழில் அவரது வாழ்வில் அமையும்.
ஒருவருக்கு ஒரு தொழில் அமைய சுபத்துவம் அடைந்த அந்த கிரகத்தின் சுபத்துவ வலிமையின் படிநிலையை பொருத்தே அந்த துறை சார்ந்த தொழிலில் உயரிய நிலையில் அமையுமா ? அல்லது கடைநிலையில் அமையுமா? என்பதை கண்டறிய முடியும்.
அதேபோல ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமாயின், அவரது ஜாதகத்தில் சிம்ம லக்கினமும் அதன் அதிபதியும் மற்றும் சூரியனும் வலுப்பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு பெற்று இருப்பின் அதற்குரிய தசையில் அரசு வேலை அமையும்.
ஒருவர் தனக்கு பிறக்கும் புத்திர பாக்கியம் பற்றி அறிய புத்திர ஸ்தானமான 5-ஆம் இடம், புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திரகாரகன் குரு ஆகியவற்றை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
ஒருவர் தன் வாழ்வில் கடன், பிணி, எதிர்ப்பு போன்ற நிலைகளை ஆராய்ந்து அறிய அவரது ஜாதக கட்டத்தில் சத்ரு ஸ்தானம் என்றழைக்கப்படும் ஆறாம் இடத்தினை கொண்டு ஆராயப்பட வேண்டும்.
ஒருவர் தான் வாழ்வில் அடையக்கூடிய லாபத்தை பற்றி அறிய 11-ஆம் இடத்தையும், விரயத்தை பற்றி அறிய 12-ஆம் இடத்தையும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
ஒருவர் தன் வாழ்வில் அடையக்கூடிய அயன, சயன, படுக்கை சுகங்களை அறிய மோட்ச ஸ்தானமான 12-ஆம் இடத்தை ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
ஒருவரது ஆன்மீக நிலை பற்றி அறிய அவரது ஜாதகத்தில் சனி, குரு கேது ஆகிய மூன்று கிரகங்களை ஆராய்ந்து அறிய வேண்டும்.ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சனி அல்லது கேதுவோடு தொடர்புகொள்ள ஆன்மிகத்தின் உயரிய நிலையை அவர் அடைய முடியும்.
ஜோதிடத்தில் சிறந்து விளங்க அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமும், புதன் பகவானும் பலம் பெற்றிருக்க வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திர கேந்திரத்தில் புதன் பலமடைந்து இருக்கிறதோ அவர்கள் புகழ்மிக்க சோதிடர் ஆவார்.
ஒருவர் மருத்துவத் துறையில் சிறந்து விளங்க செவ்வாய் பகவான் பலம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பலம் பெற்று தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் அதன் தசை நடப்பில் வரவேண்டும் செவ்வாய் பகவானது சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப மருத்துவரா, போலீஸ் ,ராணுவம், கசாப்பு கடைக்காரரா, நடுத்தெருவில் நின்று சுடும் ரவுடியா என்பது முடிவு செய்யப்படும்.
மருத்துவம், விவசாயம்,காவல் மற்றும் கட்டிட கலை ஆகிய இத்துறையில் செவ்வாய் பகவானது சுபத்துவ படிநிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது.
ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க அவரது ஜாதக கட்டத்தில் 2,4, 5 9ஆம் இடங்களையும், நவக்கிரங்களில் கல்விக்கான காரகரான குரு மற்றும் புதன் பகவானையும் ஆய்ந்து அறிய வேண்டும். அதன் உரிய தசை நடப்பில் இருக்கும் காலங்களில் மட்டும் நன்றாக படிக்கக்கூடிய யோக பாக்கியம் அமையும் கோச்சார பலனும் ஒத்துழைப்பு அளிக்கப்படவேண்டும்.
இரண்டாமிடம் ஆரம்பக் கல்வியையும், நான்காமிடம் உயர் கல்வியையும் மற்றும் ஒன்பதாமிடம் மேல்நிலை கல்வி நிலைகளை குறிக்கிறது.
ஒருவர் கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உடையவரா என்பதை இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தை கொண்டும் மற்றும் அதன் அதிபதியை கொண்டு ஆய்ந்து அறியப்படுகிறது.
ஒருவர் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகனம் சுகம்,வீட்டு சுகம் போன்றவற்றை அறிய
சுக ஸ்தானமான 4-ஆம் இடத்தையும் மற்றும் அதன் அதிபதியையும் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.
ஒருவர் தனக்கு பிறக்கப்போகும் புத்திரத்தை பற்றி அறிய புத்திர ஸ்தானமான 5-ஆம் இடம் புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திர காரகனாகிய குருபகவான் ஆகியவற்றை ஆய்ந்து அறியப்பட வேண்டும்.
ஒருவரது வீர, தீர பராக்கிரமங்களை அறிய மூன்றாம் இடமும், வெற்றி நிலையை அறிய ஆறாம் இடமும், மறைமுக மறைபொருளை அறிய எட்டாம் இடமும்,ஒருவரது வாழ்வின் படுக்கை சுகம் மற்றும் ஞான நிலையை அறிய 12-ஆம் இடமும் உதவுகிறது.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment