பகவான் ஓஷோவின் பார்வையில் ஜோதிடம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
பகவான் ஓஷோ எழுதிய "மறைந்திருக்கும் உண்மைகள்" என்ற நூலிலிருந்து ஜோதிடம் அறிவியல் பூர்வமானது.
காரண காரியத்தை ஆராய்வது தான் அறிவியலின் அடிப்படை ஆகும். பூமியில் காரணமின்றி எதுவும் நிகழ்வதில்லை என்று தான் சோதிடம் கூறுகின்றது.
நமக்கு அது தெரியாமல் போனாலும் உண்மை என்னவோ அதுதான். வருங்காலத்தில் உருவாகப் போவது எதுவும் இறந்த காலத்தில் இருந்து தொடர்பற்று நின்றுவிடாது. இரண்டும் பிணைக்கப்பட்டிருக்கும். நாளைக்கு நீ என்னவாக ஆக போகிறாயோ, அது இன்று நீ எப்படி இருக்கிறாயோ, இதனோடு தொடர்பு கொண்டிருக்கும். இதுவரை இன்றுவரை,
நீ என்னவாக இருக்கிறாயோ,
இது நாளை நீ ஆகப்போகும் நிலையோடு தொடர்பு கொண்டே இருக்கும்.
ஜோதிடம் அறிவியல் பூர்வமான சிந்தனை போக்கு . இறந்த காலத்தில் இருந்துதே எதிர்காலம் தோன்றுகிறது என்கிறது அது. உன்னுடைய நிகழ் காலமும் இறந்த காலத்தில் இருந்தே தோன்றியது.
நாளை நிகழப்போவது எதுவாக இருந்தாலும் அது சூக்கும வடிவில் இன்று இருக்கவே செய்யும் என்கிறது ஜோதிடம்.
இதை இன்னும் சற்று நன்றாக புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நிகழ்காலத்தின் சாளரத்தை திறந்து பார்த்தால் எதிர்காலம் வெளியே அருகில் தெரியும். நம் அறியாமையில் தான் எதிர்காலம் நமக்கு தெரிவதில்லை என்று சோதிடம் சொல்கிறது. அதனால்தான் அதை "எதிர்காலம்" என்று சொல்கிறோம் அதை பார்க்க முடியும். அதைப் பார்க்க முடியுமானால் , எதிர்காலம் இப்போது இங்கே இருப்பதை உணரலாம்.
பார்வை குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம். இறந்த காலம் முன்னே தள்ளி எதிர்காலம் அதை இழுக்க ஒரு சம்பவம் நிகழ்கிறது.
மொக்கு மலராவது மட்டும் நிகழ்ச்சியன்று. மொக்கு மலராகும்படி மலர் தான் முன்னே இழுக்கிறது. இறந்த காலம் பின்னால் நிற்க, எதிர்காலம் முன்னால் நிற்கிறது.
நிகழ்காலம் அரும்பாக இருக்கிறது. இறந்த காலம் அதை மலராகும்படி முன்னே தள்ள , எதிர்காலம் அதை மலராகும் படி முன்னே அழைக்க அது நிகழ்கிறது.
எதிர்காலத்திற்கு ஒரு இடம் வேண்டும். அந்த இடத்தை கொடுத்தால்தான் மொக்கு மலராகும். எதிர்காலம் இல்லை என்றால் இறந்தகாலம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், எவ்வளவுதான் பலமாக தள்ளினாலும், எதுவும் நிகழாது.
உங்கள் முன்னால் இடம் எதுவும் இல்லாமல் ஒரு சுவர் நிற்கும்போது நான் எவ்வளவுதான் பலமாக உங்களை முன்னே தள்ளினாலும் உங்களை முன்னே நகர்த்த முடியாது. முன்னே நகர, முன்னால் இடம் வேண்டும். நான் முனே தள்ளும்போது உங்கள் முன்னால் உள்ள இடம் வா, என விருந்தினராக வா என்று வரவேற்கும். அப்போதுதான் எனது தள்ளல் செயல்படும், விளைவு ஏற்படும், இறந்த காலம் செயல்படும், எதிர்காலம் அதற்கு இடம் ஒதுக்கிக் கொடுக்கும்.
சோதிடம் இறந்த காலத்தில் இருந்து மட்டும் பார்த்தால் அது அரைகுறை பார்வை, அது அரைகுறை விஞ்ஞானம், எதிர்காலம் நம்மை எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கிறது. இழுத்துக்கொண்டே இருக்கிறது. இதை நாம் உணர்வதில்லை. நமது பார்வையின் பலவீனம் இதுதான். இது நமது கிட்டப்பார்வை. இது நமக்கு தொலைநோக்கு இல்லை. அதனால் எதிர்காலம் நமக்கு வெளிப்படாமல் போய்விடுகிறது.
ஜே கிருஷ்ணமூர்த்தியின் ஜாதகக் குறிப்பை பார்த்தால் வியப்பாக இருக்கும். அன்னி பெசண்ட், லீட் பீட்டரும் அதை கவனித்து இருந்தால், அவரோடு பணியாற்றுவது தவறு என்பதை உணர்ந்திருப்பார்கள். "எந்த நிறுவனம் அமைப்போடு அவர் சம்பந்தப்பட்டு இருந்தாலும், அதை அவர் அழித்து விடுவார் என்று அவர் ஜாதகம் கூறுகிறது!. அவரது தொடர்பு கொண்ட அமைப்பு எதுவும் அழிந்தே போகும்!. ஆனால் அன்னிபெசன்ட் அதை ஏற்கத் தயாராக இல்லை. யாரும் அப்படி எதிர்பார்க்கவும் மாட்டார்கள். ஆனால் நடந்தது என்னவோ அதுதான்.
பிரம்மஞான சங்கம் அவரை தலைவராக உருவாக்க முயன்றது. அதனால் அந்த இயக்கமே அழிந்து விட்டது. கிருஷ்ணமூர்த்திக்காக "கிழக்கத்திய நட்சத்திரம்" என்ற பெரிய அமைப்பை அன்னி பெசண்ட் ஆரம்பித்தார். ஒருநாள் அவர் அதை விட்டு விலகினார். அன்னி பெசண்டின் வாழ்நாள் முயற்சி அது. கிருஷ்ணமூர்த்திக்காக உருவாக்கப்பட்டதால் அது அழிந்தது. கிருஷ்ணமூர்த்தியை குற்றம்சாட்டி பயனில்லை. எந்த அமைப்பையும் தகர்க்கும் சாதகம் அது. அவரது ராசி அப்படி!
எதிர்காலம் நிச்சயம் அற்றதாக இருக்கவில்லை. நமது அறிவுதான் தெளிவாக இல்லை. கனமாக இல்லை. எதிர்காலம் எதையும் நமக்கு காட்ட வில்லை என்றால் நாம் பார்வை இழந்தவர் என்று பொருள். அதனால்தான் நமக்கு தடுமாற்றம் நிச்சயமின்மை.
எதிர்காலத்தில் ஒரு பகுதி வெளிப்படவே செய்கிறது ஜோதிடம் என்பது நாளும் கோளும் கிரகம் சொல்வது மட்டுமல்ல. அவற்றின் கணக்கு முக்கியமல்ல. இவையெல்லாம் சோதிடத்தில் ஒரு பரிணாமம் மட்டுமே.
ஓஷோ இன்னொரு துறையிலும் அவர் ஆராய்ந்தார் இந்த துறைக்கு சரியான பெயர் சூட்டவில்லை என்றாலும் தற்காலிகமாக அதை "கிரக மரபு" என்று குறிப்பிட்டார்கள். இதற்கு ஆங்கிலத்தில் வேறு பெயர் இருக்கிறது.சாதகம்-"Horoscope" என்பது இந்தச் சொல் கிரேக்கச் சொல்லான "Horoscopos" என்பதிலிருந்து பிறந்தது.
இந்த கிரேக்கச் சொல்லின் பொருள் "கிரகங்களை நான் கவனிக்கிறேன்" என்பது ஆகும்.
ஒரு குழந்தை பிறந்த நாளில் ஒரு நட்சத்திரம் பூமியின் தொடுவானத்தில் தோன்றுகிறது. கதிரவன் உதயம் ,மறைவு போல் பல விண்மீன்கள் தோன்றி மறைகின்றன. இருபத்துநான்கு மணி நேர இடைவெளியில்.
குழந்தை காலையில் ஆறு மணிக்கு பிறந்தது என்றால் அது உதய காலம். அதே சமயம் ஒரு விண்மீனும் அடிவானத்தில் உதயமாகும். மற்ற விண்மீன்கள் மறையும். சில விண்மீன்கள் கூட்டம் எழும். சில மறையும். வானில் தோன்றும் அந்த விண்மீன் அமைப்பிற்கு ஏற்ற படியே ஒரு குழந்தை பிறக்கிறது.
இதுவரை நமக்கு சந்தேகமாகவே இருந்து வந்தது. இன்னும் பலருக்கு அப்படித்தான். மனிதனுக்கும் வானத்து விண்மீன்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற சந்தேகம். பிரபஞ்சவெளியில் நெடுந்தொலைவில் இருக்கும் ஒரு விண்மீன் பூமியில் எங்கோ ஒரு சிற்றூரில் பிறக்கும் ஒரு குழந்தையோடு எப்படி தொடர்பு கொண்டிருக்கும்?!.
அந்த நேரத்தில் ஒரு குழந்தை மட்டுமா பிறக்கும்?. பல்லாயிரம் குழந்தைகள் பிறந்து இருக்கும். அவற்றில் ஒன்று நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகலாம், இன்னொன்று அவ்வாறு ஆகாது. ஒன்று நூறாண்டு வாழ்ந்திருக்கும், இன்னொன்று இரண்டே நாளில் இறந்துவிடலாம். ஒன்று மேதை ஆக , மற்றொன்று முட்டாள் ஆகலாம்.
வானத்து விண்மீனின் அன்றைய நிலைக்கும், அன்று பிறக்கும் ஒரு குழந்தைக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும் என்று மேலோட்டமாக கேட்கலாம்.
இந்த வினா தர்க்கரீதியாகவும், தெளிவாகவும் இருப்பது போல் தோன்றுகிறது. பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், வானத்து விண்மீனுக்கும் தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது .ஆனால் பிரவுன், பிக்கார்டி, டமாட்டோ போன்ற பலரின் ஆய்வுகளிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகிறது விண்மீன்கள் மனிதனின் முழு வாழ்வையும் பாதிக்கின்றன என்று தோன்றுகிறது. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு தனிமனிதனும், விண்மீனின் பாதிப்புக்கு உள்ளாகிறான் என்பதை அறிவோம்.
இன்னொன்று ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் .இது மிக புராதனமாக இருப்பதால் வளர்ச்சி பெறவில்லை என்று நினைக்கிறோம். ஆனால் என் கருத்து இதற்கு நேர்மாறானது. சில வளர்ச்சி பெற்ற நாகரீக சமுதாயங்களில் இந்த விஞ்ஞானம் எல்லையற்ற வளர்ச்சியை பெற்றிருந்தது. ஆனால் அந்த சமுதாயங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஜோதிடக் கலையின் துண்டு துணுக்குகள் நம்மிடம் மிஞ்சி இருக்கின்றன.
சோதிடம் வளர்ச்சி பெற வேண்டிய புதிய கலை அன்று .அறிவியலாக ஒரு காலத்தில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதை வளர்த்த சமுதாயங்கள் அழித்துவிட்டன. எத்தனையோ சமுதாயங்கள் வரும், போகும் அதனால் அவர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்க பெரும் அடிப்படைகள் அழிந்துவிடுகின்றன. இன்று விஞ்ஞான அதை அணுகி ஆராய முன்வந்திருக்கிறது.
பிறக்கும் போது ஒரு குழந்தையின் நிலை மிகுந்த துடிப்புள்ள மிக நுட்பமாக புகைப்படச் சுருள் போலிருக்கிறது. விண்மீன்கள் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிய இரண்டு மூன்று விஷயங்களை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது .விண்மீன்கள் மனித வாழ்வை பாதித்ததால் தானே சோதிடமே இருக்க முடியும்.
இரட்டைக் குழந்தைகளைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. ஒரே கருமுட்டை இரண்டாகப் பிரிந்தால் உருவாகி பிறந்த இரட்டையர் ஒருபக்கம் , இதனை ஒரு கரு இரட்டையர் என்கிறோம்.
இன்னொரு பக்கம் தாயின் கருப்பையில் இரண்டு தனித்தனி கருக்கள் ஒரே சமயத்தில் தோன்றி வளர்ந்து பிறந்த இரட்டையர். இதனை இரு கரு இரட்டையர் என்கிறோம்.
முதல் வகை அபூர்வமாகவே தோன்றுகிறது. அதாவது ஒரே கருவிலிருந்து இரட்டையர் பிறப்பது இவர்கள் ஒரே சமயத்தில் பிறப்பதால் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியே முக்கியமானது. மற்ற வகை இரட்டையரின் பிறப்பு நேரம் சற்றே மாறுபடுகிறது.
பிறப்பு என்பது நிச்சயமற்றதோர் அம்சம் கர்ப்பம் தரித்தாலே இதன் முதல் காலகட்டம். சரியான பிறப்பு என்பதே இந்த தருணம் தான்.
தாய் வயிற்றில் கரு தோன்றுதலே உண்மையான பிறப்பு. தாயின் வயிற்றிலிருந்து குழந்தை வெளியே வருவதை நாம் பிறப்பு என்கிறோம் .ஆனால் அது இரண்டாம் பிறப்பு.
இந்துக்கள் சோதிடத்தையும் மிக ஆழமாக ஆராய்ந்து இருக்கிறார்கள். நாம் இப்போது அதில் ஆராயப் புகுந்தால் பிறப்பு என்பது கரு தோன்றிய நேரமே என்பதை உணர்வோம். குழந்தை வெளியே வரும் நேரம் அல்ல.
அந்தக் கரு தோன்றுவதற்கான கூடலும், கர்ப்பம் தரித்தலும் நிகழும் காலத்தில் விண்மீன்களின் அமைப்பு குறிப்பிட்ட நிலையில் இருந்திருக்கும். அந்த அமைப்புதான் குறிப்பிட்ட வகை குழந்தை பிறக்க காரணமாகிறது.
இதன் பின்னணியை நான் மேலும் விளக்க விரும்புகிறேன். அப்போதுதான் இந்த துறையில் நிகழ்ந்துள்ள பல ஆராய்ச்சி முடிவுகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட நாளில் காலை ஆறு மணிக்கு பிறந்தால் அந்த நேரத்தில் வானில் உள்ள விண்மீன்களின் அமைப்பு அந்த குழந்தையின் வாழ்வை பாதிக்கும் என்று பொதுவாக நினைக்கிறோம்.
ஆனால் சோதிடத்தை ஆழமாக அறிந்தவர்கள் இந்த கருத்து சரி இல்லை என்கிறார்கள். உண்மை இதற்கு மாறானது. ஒரு குழந்தை தான் பிறக்கும் நேரத்தை தானே முடிவு செய்கிறது .கிரகங்கள் எங்கே இருக்கும் போது பிறக்க வேண்டும் என்பதை அதுவே தீர்மானிக்கிறது. இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் கரு கொள்ளும் காலத்தையே அதுவே தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு உயிரும் தான் எந்த வயிற்றில், எந்த நேரத்தில் கருவாகி, எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை முன்பே முடிவு எடுத்து விடுகிறது . கரு உதிக்கும் நேரம் மிக முக்கியமானது அந்த கண நேரத்தின் போது இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பது முக்கியமானது. அந்தக் கணத்தில் பிரபஞ்ச வாயில் திறப்பதற்கான சாத்தியக்கூறு என்ன என்பது மிக முக்கியமான வினா.
ஒரே கருமுட்டையில் இருந்து இரண்டு கருக்கள் தோன்றினால் அவற்றின் கர்ப்பம் நேரம் ஒன்றே. அவை பிறக்கும் நேரமும் ஒன்றே .அவர்களின் வாழ்வும் ஒன்று போலவே இருக்கும். அதனால் பிறந்த காலம் முக்கியம் இல்லை என்று சொல்வது கடினம்.
அப்படி பிறக்கும் இரட்டையரின் அறிவுக்கூர்மை ஒன்றுபோலவே இருக்கும். சிறு வேறுபாடு தோன்றினால் அது நமக்கும் குறைபாட்டினால் ஏற்படுவது தான் .இன்றும் கூட அறிவை துல்லியமாக அளக்கும் முறையை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே.
ஒரே கருவில் உதித்த இரட்டையர் வேறு வேறு இடத்தில் வளர்க்கப்பட்டாலும் ,அவை அறிவுக்கூர்மையின் வேறுபடுவதில்லை. ஒன்றை இந்தியாவிலும், மற்றொன்றை சீனாவிலும் வளர்த்தாலும் சரி, ஒரு சகோதரன் இருப்பது, மற்றொன்றிற்கு தெரியாமல் இருந்தாலும் சரி, அவை ஒரே புத்தி கூர்மையுடன் இருக்கும். பிறக்கும் காலத்தில் ஏற்பட்ட சக்தியுடன் அதன் அறிவுக்கூர்மை சம்பந்தப்பட்டிருப்பது ஆச்சரியமான அம்சம்தான்.
சீனாவில் வாழும் குழந்தைக்கு சளி பிடித்தால் அதே சமயத்தில் இந்தியாவில் வளரும் அதன் இரட்டைக்கும் சளி பிடிக்கும். அவர்கள் இறப்பும் கூட பொதுவாக ஒரே நாளில் இருக்கும். அதிகப்படியாக மூன்று ஆண்டுகள் இடைவெளி இருக்கலாம். அதற்கு மேல் இருக்காது.
இரண்டில் ஒன்று இறந்தால் மூன்று நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் மற்றொன்றும் இறந்துவிடும். இரண்டின் பழக்கவழக்கங்கள், உணர்வுகள் எல்லாம் ஒன்று போலவே இருக்கும். மற்றவற்றிலும் ஒற்றுமை காணப்படும். ஒருவர் மற்றவரின் பிரதி(ஜெராக்ஸ்) போலவே செயல்படுவார்.
ஒவ்வொரு மனிதரின் தோளும் தனித்தன்மை கொண்டது. என் கை சிதைந்தால் மேலே தோல் வைத்து பழுது பார்ப்பதற்கு உங்கள் தோல் உதவாது. என் உடலின் தோல் தான் எனக்கு பொருந்தும். இந்த உலகில் வேறு யாருடைய தோலும் எனக்கு பொருந்தாது. மற்றவர்கள் தோலை என் உடல் ஏற்றுக் கொள்ளாது.
ஆனால் ஒரே கருமுட்டையில் இருந்து பிறந்த இரட்டையரை ஒருவர் தோல் மற்றவருக்கும் பொருந்தும். அதை அவர் உடல் ஏற்றுக்கொள்ளும். ஏன் அப்படி? காரணம் என்ன ? ஒரே பெற்றோர் என்பதால் அல்ல. ஒரே பெற்றோரின் இரண்டு சகோதரர்கள் என்றாலும் ஒருவர் தோல் மற்றவருக்கு பொருந்தாது. ஒரே கருவில் உதித்த அவருக்கே அது பொருந்தும். கரு உருவாகிய காலமே அந்த ஒருமைப்பாட்டை நிர்ணயிக்கிறது. பண்புகள், அறிவுக்கூர்மை, வாழ்நாள், மரணம், எல்லாவற்றையும் அதுதான் நிர்ணயிக்கிறது. ஒருவர் நோயுற்றால் மற்றவரும் நோய் அடைவார் அவ்வளவு முக்கியமானது கரு உருவாகும் காலம்.
அதைவிட பிறக்கும் காலமே முக்கியமானது என்று ஜோதிடம் சொல்கிறது. இது நாள் வரை அறிவியல் சோதிடத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது ஒப்புக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. இந்த சூழல் வளர, வளர புதிய சோதனைகள் செய்யப்பட்டு நமக்கு உதவும்.
நாம் செயற்கைக் கோள்களை விண்வெளியில் மிதக்க வைத்திருக்கிறோம். விண்மீன்கள் எரிகற்கள் பூமியை தாக்கிக் கொண்டே இருக்கின்றன. பலவிதமான கதிர்கள் பூமியின் மீது பாய்ந்து கொண்டே இருக்கின்றன. செயற்கைக்கோள்களால் இதையெல்லாம் நாம் கண்டுபிடித்து இருக்கிறோம். இவற்றால் பாதிக்கப் படாத பொருள் பூமியில் எதுவும் இல்லை.
நிலாவினால் கடல் பாதிக்கப்படுவது நமக்குத் தெரியும். கடல் நீரில் தண்ணீரும், உப்பும் எந்த விதிதத்தில் உள்ளனவோ, அதே விகிதத்தில் நம் உடலிலும் இருப்பதை நாம் கவனிப்பதே இல்லை. நம் உடலின் எழுபது சதவிகிதம் தண்ணீர்தான். இந்த நீரில் உள்ள உப்பின் விகிதம்தான் அரபிக் கடல் நீரிலும் இருக்கின்றது. கடல் நீர் நிலாவினால் பாதிப்படைந்தால் நம் உடலில் உள்ள நீரும் பாதிப்பு அடையாதா?
இது தொடர்பாக அண்மையில் கண்டறியப்பட்ட இரண்டு, மூன்று உண்மைகளை மனதில் வைப்பது நல்லது. முழுநிலா நாளில் உலகில் பைத்திய தன்மை கூடுதலாகிறது. மற்ற வளர்பிறை, தேய்பிறை நாட்களில் அது குறைவு. அதிகம் பைத்தியமாவது பொளர்ணமி நாட்களில்தான், பைத்தியக்கார விடுதிகளில் பௌர்ணமி நாட்களில் அதிகம்பேர் சேர்க்கப்படுகிறார்கள். அமாவாசை நாட்களிலேயே அதிகம் பேர் அங்கிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன.
ஆங்கிலத்தில் மனநலம் சிதைந்தவரை குறிக்கும் சொல் " லூனாடிக்" இந்தியில் "சாந்த்மா .
சாந்தன் -நிலாவை குறிக்கும் .ஹிந்தி சொல் -லூனா நிலாவை குறிக்கும்.
சாந்த்மார,லூனாடிக் இரண்டுமே 3000 ஆண்டுகள் பழமை கொண்ட சொற்கள். வான் மதிக்கும் மதி இறந்தவருக்கு தொடர்புண்டு என்பதை அந்த காலத்து மக்களுக்கு தெரிந்திருக்கிறது.
முழு மதி , மதி இழந்தவரை பாதிக்கும் என்றால், அறிவுமதி படைத்தவரை ஏன் பாதிக்காது.
மூளையின் அமைப்பும், உடலின் கட்டமைப்பும் எல்லாருக்கும் ஒன்று போலவே இருக்கிறது என்றாலும் வான்மதி மதிநலம் சிதைந்தவரை அதிகமாகவும்,
நிலைத்த மதி படைத்த வரை குறைவாகவும் பாதிக்கிறது. அளவு வித்தியாசம் அவ்வளவுதான் .புத்தி நிலையாக இருப்பவரை நிலா பாதிக்காமல் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. அது சாத்தியம் என்றால் யாருக்குமே பைத்தியம் பிடிக்காது மதிகெட்ட மனிதரும் ஒரு காலத்தில் மனநிலை சரியாக இருந்தவர் தானே. அவர்தானே பாதிக்கப்பட்டு பைத்தியமாய் இருக்க வேண்டும்.
சோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லாத பேராசிரியர் பிரவுன் செய்த ஆராய்ச்சி மிகவும் சுவையானது .அவர் நாத்திகர். சோதிடத்தை ஏளனம் செய்து வந்தவர். இருந்தாலும் ஒரு ஆய்வு நடத்தி பார்ப்போம் என்று அதில் இறங்கினார். தளபதிகள் ,மருத்துவர்கள், மற்ற திறமைசாலிகள் பலரது குறிப்புகள் பலவற்றை அவர் சேகரித்தார்.
அவருக்கு மிகவும் சிக்கல் ஏற்பட ஆரம்பித்தது. குறிப்பிட்ட கிரகங்களின் அமைப்பில், குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட தொழிலில் இருந்தார்கள். பிரகாசித்தார்கள். செவ்வாயின் ஆதிக்கத்தில் இருந்தவர்களே தளபதிகளாக இருந்தார்கள். கல்வியாளர்களுக்கு செவ்வாயின் பாதிப்பே இல்லை.
ஐம்பதாயிரம் பேரை ஆராய்ந்ததில் செவ்வாயில் பாதிப்பு உள்ளவர்கள் ராணுவத்தில் இருப்பது தெரிந்தது. படைத்தளபதிகள் பிறக்கும்போது செவ்வாய் உச்சத்தில் இருந்திருக்கிறது.போர் எதிர்ப்பாளர்கள் செவ்வாய் உச்சத்தில் இருக்கும்போது பிறந்தவர்கள் அல்லர். எங்கோ அங்கொன்றும், இங்கொன்றும் விதிவிலக்குகள் காணப்பட்டன.
கணித மேதைகள் வேறு ராசியில் பிறந்தார்கள். கவிஞர்கள் வேறு ராசியில் ,விதிவிலக்கு அரிதாகவே காணப்பட்டது. கணித நிபுணர்கள் பிறந்த ராசியில், கவிஞர்கள் பிறக்கவே இல்லை.
கவிஞர்கள், கணிதமேதைகள், போர் வெறியர்கள், தளபதிகள் சமாதான வாதிகள் போன்ற பலருக்கும் குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள் வெவ்வேறு தான் .அதே சமயம் கணிதமேதை பெர்ட்ரண்ட் ரசல் உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்று சொல்லலாம், ஞானி நீட்சே போரே இல்லாமல் போய்விடும் நாள், உலகம் அர்த்தம் இழந்துவிடும் நாள் என்றும் சொல்லலாம், அது அறிவுப்பூர்வமான வாதம் மட்டுமே அல்லது நட்சத்திரங்களின் மோதலோ? அவர்களுக்குள் ஏற்படும் அறிவு வாதமோ? அல்லது பிற நேரங்களில் முரண்பாடா?
நிறைய ஆய்வுகள் நடைபெற்றன. ஒருவருடைய திறமை பிறக்கும் நேரத்திற்கேற்ப அமைந்தது இதனை கிரகங்களின் அமைப்பு என்று சோதிடம் சொல்கிறது .ஆனால் எப்போது பிறப்பது என்பதை அவரவரே நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் என்றுதான் கூற விரும்புகிறேன்.
ஒருவரின் நோக்கம், சாத்தியம், விருப்பம், ஆசை முதலியவற்றிற்கு ஏற்பவே அவர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பிறப்பு எடுக்கிறார். கருத்தரிக்கும் நேரத்தை அந்த குழந்தையை முடிவு செய்து கொள்கிறது.
கடல்நீர் பாதிக்கப்படுவது பற்றி சொன்னேன். எல்லாம் நீரிலிருந்து படைக்கப்படுகின்றன. "நீரின்றி அமையாது உலகு". நீரிலிருந்தே உயிரினம் தோன்றியதாக பண்டைய கிரேக்க ஞானிகள் கூறினார்கள். நீரே உயிர். இந்தியர்கள் சீனர்கள் போன்ற புராதான சமூகத்தவர்கள் இப்படியே சொல்லி இருக்கிறார்கள்.
கடலில் மிதப்பது போல் குழந்தை தாயின் கருப்பையில் நடக்கிறது என்பது வியப்பான உண்மை. தாயின் கருப்பை நீரில் கலந்து உள்ள அதே அளவு உப்பு இருக்கின்றது. தாயின் உடலில் ஏற்படும் பாதிப்பு நேரடியாக குழந்தையை அடைவதில்லை. கருப்பை குழந்தைக்கும், தாய்க்கும் நேரடி தொடர்பில்லை.
ஊடகம் தண்ணீர்தான். தாயையும், கருப்பை குழந்தையையும் இணைப்பது தண்ணீர் தான். பிறந்த பின் வாழ்நாள் முழுவதும் நம்முள் இருக்கும் நீர் கடல் நீர் போலவே செயல்படுகின்றது.
கடல் மீன்கள் பற்றிய நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடலின் அலைகள் பின்வாங்கும் காலங்களில் மீன்கள் கரையோரம் வந்து முட்டையிடுவது கண்டறியப்பட்டது. பிறகு அவை கடலுக்கு திரும்பி விடுகின்றன. ஏற்ற அலைகள் கரையில் குறிப்பிட்ட காலத்தில் வீசுகின்றன. மீன் முட்டைகள் குஞ்சு விடுகின்றன. பேரலைகள் வரும் காலத்தில் மீன்குஞ்சுகள் அவற்றோடு கடலுக்குப் போய் விடுகின்றன.
பேரலை வீசாத காலத்தில் மட்டும் மீன்கள் கரைக்கு வந்து முட்டையிடுவது வியப்பான ஒன்றுதான். பேரலை வீசும் காலங்களில் கரையில் முட்டைகள் இட்டு அவற்றை அலைகள் அடித்துப் போய்விடும். அவை குஞ்சு பொரிக்க வாய்ப்பில்லை .அப்புறம் மீன் வம்சமே இல்லாமல் போய்விடும்
ஏற்ற, வற்ற அலைகளின் காலத்தை மீன்கள் எவ்வாறு தெரிந்து கொள்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்கே புதிராகவே இருந்தது. மீன்களின் காலக்கணிப்பின் ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் முட்டைகள் அழிந்து போகும்.
ஆனால் பல கோடி ஆண்டுகளாக மீன்களின் கணக்கு தப்பவில்லை. அப்படியானால் காலத்தைக் கணிக்க அதனிடம் என்ன கருவி இருக்கிறது .மேலும் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான மீன்கள் முட்டையிடத் கூட்டமாக வருகின்றன. அவை கருத்தை பரிமாறிக்கொள்ள ஏதாவது ஒளிபரப்பு அமைப்பை பெற்று இருக்கின்றனவா?
ஆய்வுகள் மேற்கொண்டதில் நிலாவை தவிர அவர்களுக்கு வேறு துணை இருப்பதாக தெரியவில்லை. நிலாவை கொண்டே ஏற்ற, வற்ற(high or low wave) அலைகளின் காலங்களை அவை உள்ளுணர்வால் அறிந்து கொள்கின்றன.
இன்னொரு வாய்ப்பும் உண்டு .கடல் அலைகளை வைத்தும் அறிய வாய்ப்பு உண்டு. அதனால் விஞ்ஞானிகள் அலை வீசாத பெரிய தொட்டி நீரில் இருளில் மீன்களைப் போட்டு சோதித்தார்கள். வானில் நிலா எந்த நிலை வரும்போது அவை கடலில் முட்டையிடுமோ, அதே காலத்தில் தொட்டியிலும் அவை முட்டையிட்டன!. அதனால் அலைகள் கொண்டு அவை காலத்தை கணிக்கவில்லை என்பது தெளிவாயிற்று.
மீன்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்று சிலர் கருதலாம். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. மீன்களை தனித்தனியே பிரித்து வைத்தார்கள். மூளையை பல விதங்களிலும் பரிசோதித்தார்கள். இரவு,பகல் அறியாதவாறு இருளிலே வைத்தார்கள். பிறகு 24 மணி நேரமும் ஒளியிலே வைத்தார்கள்.
செயற்கை விளக்குகள், கொண்டும் நிலா வெளிச்சம் போல் ஏற்படுத்தி நிலா தேய்வதும், வளர்வதும் போல ஒளியை குறைக்கவும், கூட்டவும் செய்தார்கள். ஆனால் மீன்களை ஏமாற்ற முடியவில்லை. உண்மை நிலாவின் குறிப்பிட்ட நாளன்று தான் மீன்கள் முட்டையிட்டன. எந்தச் சூழலிலும் குறிப்பிட்ட நாளன்றே முட்டைகள் இட்டது அது நிலாவினை சார்ந்ததாகவே இருந்தது.
ஆண்டுதோறும் பல்லாயிரம் பறவைகள், பல்லாயிரம் மைல்கள் கடந்து "வலசை போகின்றன".பனி பெய்யப்போவதை தெரிந்து கொண்டு சரியாக ஒரு மாதம் புறப்படுகின்றன. புறப்படும்போது பனி இல்லை .அந்த ஆண்டு பத்து நாள் தாமதமாகவே அல்லது பத்து நாள் முன்னதாகவே
பனிக்காலம் பிறக்கும் என்றாலும் அதை அறிந்து மிகச் சரியாக ஒரு மாதம் முன்பே அவை புறப்படுகின்றன.
வானிலை ஆராய்ச்சி நிலையம் அமைத்து பருவ நிலைகளை நாம் அறிவிக்கிறோம் என்றாலும் நமது வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருப்பதில்லை .ஆனால் பறவைகள் மிகத்துல்லியமாக ஒரு மாதம் முன்பே கணித்து விடுகின்றன .அது எப்படி?
யாரோ ஒரு வானிலை ஆராய்ச்சியாளர், தெருவோரம் உட்கார்ந்திருந்த சோதிடரை'- இன்று மழை வருமா? என்று கேட்டாராம் நமது நிலை இப்படி இருக்கிறது.
மனித ஏற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. பறவைகளோ பனி விழப் போகும் நாளை முன்கூட்டியே திட்டவட்டமாக அறிந்து கொள்கின்றன. பல்வேறு விதமான பறவைகளும் அந்த நாளை சரியாக முன்னறிகின்றன என்பது பல்லாயிரம் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
ஜப்பான் நகரத்தில் வாழும் ஒருவகை சாதாரண பறவையினம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் அதை தெரிந்து கொண்டு ஊரை விட்டு ஓடிப் போய் விடுகின்றன.
நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை இன்றைய விஞ்ஞானிகளால் சரியாக கணிக்க முடியவில்லை. சுமாராக சொல்லலாமே தவிர இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கூட தெளிவாக சொல்ல முடியாது. வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடியும்.
ஆனால் ஜப்பான் மக்கள் 24 மணி நேரம் முன்பே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.
ஊர் பறவைகள் பறந்து போவதை வைத்து ஒரு பறவை கூட பின்தங்கி நின்றுவிடுவதில்லை. அவை எப்படி அறிகின்றன. ஒவ்வொரு உயிரும் பிரபஞ்சத்தை உணரும் உணர்வு மையத்தை பெற்றிருக்கிறது என்னும் புதிய தகவலை 10 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். மனிதனுக்கும் இருக்கும் ஆனால் அதை உணரும் விழிப்புணர்வை அவன் இழந்து விட்டான்.
புத்திசாலித்தனம் என்று சொல்லிக் கொள்கின்றானே அதனால் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் ஆதியில் பெற்றிருந்த எத்தனையோ ஆற்றல்களை இன்று இழந்து விட்டான். முன்பு அவனிடமிருந்து இருந்திராத, எத்தனையோ பொருள்களை அவன் கண்டு பிடித்துக் கொண்டு விட்டான். ஆனால் பயன் என்ன? ஆபத்திலும், சுய அழிவிலும் அவன் அகப்பட்டுக் கொண்டது மட்டுமே.
பெற்றிருந்ததை இழந்தான் ,பெற்றுக் கொண்டதோ அவனிடம் இல்லை.
நாம் தனித்து இல்லை பிரபஞ்சம் கட்ட அமைப்பில் இணைந்து இருக்கிறோம் என்பது புரிந்தால் சோதிடத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம் என்பதை கூறவே இத்தனை விளக்கம் எல்லாம் என்றார்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment