குழந்தையின் பிறந்த நேரம் குறித்தல்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
முற்காலத்தில் திருமணமான பெண்கள் எல்லா வேலைகளையும், மின்சாதன உதவியின்றி தானே செய்யவேண்டிய கால கட்டாயம் இருந்ததாலும் மற்றும் ஆரோக்கியமான விஞ்ஞான கலப்பில்லாத உணவு முறைகள் இருந்ததாலும் மங்கையர்கள் ஆரோக்கியம் மற்றும் வீரியம் மிக்கவர்களாகவும் திகழ்ந்தார்கள். இதனால் ஒரு பெண் ஏழு ,எட்டு குழந்தைகளை கூட தொடர்ந்து பிரசவிக்கும் வலிமை மிக்கவர்களாகவும் அதே நேரத்தில் எல்லா குழந்தைகளையுமே வீட்டிலேயே சுகப்பிரசவமாக பிறக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலும் அமைந்திருந்தது.
ஆனால் இக்காலகட்டத்தில் உடலுழைப்பு இன்றி பெண்களும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும் காலம் வந்ததாலும் அவர்கள் தேவையில்லா மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாலும் பெரும்பாலானோருக்கு ஒரு குழந்தை பெறுவதே கஷ்டமான காரியமாக வந்துவிட்டது. அவ்வாறு பிறக்கும் ஒரு குழந்தையும் சுகப்பிரசவம் ஆக பிறக்கும் சூழல் அரிதாகவே காணப்படுகிறது.அதிலும் பெரும்பாலான குழந்தைகளை அறுவைசிகிச்சை செய்தே எடுக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இதுபோன்ற அறுவைச் சிகிச்சை செய்து குழந்தைகளை பெற்று எடுக்கக்கூடிய கூடிய சூழல் வந்த தருணம் இக்காலகட்டத்தில் அதிகமாக இருப்பதால் பிறக்கும் நேரத்தில் வானவீதியில் உள்ள கிரக நிலைகள் சிறப்பாக இருக்கும் நிலையில் உள்ள ஒரு நல்ல நேரத்தை சோதிடரிடம் சென்று குறிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
சோதிடர்கள் ஒரு குழந்தை பிறக்கும் நேரம் குறித்து கேட்கும் பொழுது அன்றைய காலகட்டத்தில் காலண்டரில் உள்ள நல்ல நேரத்தை குறித்து கொடுக்கக்கூடாது.
காலண்டர் மற்றும் பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ள அந்த நல்ல நேரம் என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு செயலைச் செய்ய உகந்த காலமாகும்.
குழந்தை பிறக்கும் நேரத்தை முடிவு செய்ய அவரது ஜாதக கட்டத்தில் பிறக்கும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளையும் , ஜென்ம நட்சத்திரம் மற்றும்
தசாபுத்திகளையும் ஆராய்ச்சி செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் குறிக்கும் போது அந்த கிரகத்தின் சஞ்சார நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு ஜாதக கட்டத்தில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு வீதமும், குருபகவான் ஒரு ராசியில் ஓராண்டு வீதமும், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒன்றரை ஆண்டுகள் வீதமும் சஞ்சாரம் செய்வார்கள்.
அடுத்தபடியாக செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் வீதம் வாசம் செய்வார்.
எனவே குழந்தை பிறக்கும் நேரத்தை உள்ள கிரக நிலைகளை ஆய்வு செய்து நேரம் குறிப்பது என்பது குறைந்தபட்சம் ஒரு பதினைந்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் இருக்கும். எனவே மேற்கண்ட காலங்களில் மேற்கண்ட கிரகங்கள் ஒரே இடத்தில் தான் இருக்கும்.மாற்றி அமைக்க இயலாத ஒன்று ஆகும்.
ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரம் வீதம் இலக்கனம் மாறுபடும்.
அதேபோல ராசி என்று அழைக்கப்படும் சந்திரன் பகவான் வாசம் செய்யும் காலம் ஒரு ராசியில் இரண்டேகால் நாள் வீதம் ஆகும்.
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய முக்கூட்டு கிரகங்கள் ஒரு ராசியில் ஒரு மாதம் வாசம் செய்வார்கள்.
சித்திரை மாதத்தில் சூரியன் பகவான் மேஷ ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப ராசியிலும்... இவ்வாறாக பங்குனி மாதத்தில் சூரிய பகவான் மீன ராசியில் வாசம் செய்வார்.
குழந்தை ஜெனிக்கும் நேரத்தில் ஒரு ஜாதக கட்டத்தில் நல்ல கிரக அமைப்பு வரும்படி அமைக்க இலக்கனம், ராசி மற்றும் ஒரு மாதம் மட்டும் இடம்பெயரக்கூடிய சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றை ஆராய்ந்து பிறக்கும் நேரத்தினை குறித்து கொடுக்கப்பட வேண்டும்.
கிரகங்கள் கட்டத்தில் இடம்பெறும் போது பாவ கிரகங்கள் மற்றும் பகை கிரகங்கள் வலிமை இழந்த அமைப்பில் இருக்கும்படியும் மற்றும் சுபகிரகங்கள் மற்றும் நட்பு கிரகங்கள் வலிமை பெற்றும் அமைந்திருக்கும் படி பார்க்கப்பட வேண்டும்.
ஒரு ராசியில் கிரக சேர்க்கை மற்றும் பார்வை போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டும்.
குழந்தை பிறக்கும் நேரத்தில் இருந்து அவருடைய தசை அமைப்பு நல்லபடியாக யாருக்கும் ஓரளவு பாதிப்பு இல்லாமல் வருவதற்கு உகந்த ஜென்ம நட்சத்திரத்தை தேர்வு செய்யப்பட வேண்டும்.
யாராலும் 100% நல்ல அமைப்புடைய நேரத்தை தேர்வு செய்து கொடுக்க இயலாது. ஏதாவது ஒன்றை சரிசெய்ய மற்றொன்று வந்து அங்கே இடிக்கும்.
ஏதோ ஒரு சில குழந்தைகள் மட்டும் அந்த அமைப்பு வரும்படி கோடியில் அல்லது லட்சத்தில் ஒருவர் பிறக்கிறார்கள்.
நாம் என்னதான் பிறந்த நேரத்தை நம் மதிநுட்பம் கொண்டு கணித்தாலும் ஒரு குழந்தை தன்னுடைய பிறந்த நேரத்தை முன்பே முடிவு செய்து இந்த ஊரில் எந்த பெற்றோருக்கு, எந்த நாளில் ,எந்த நேரத்தில் மற்றும் எப்படி பிறக்க வேண்டும் என்பதை அவர்களது ஊழ்வினைப் பயன்கொண்டு முன்பே முடிவு செய்துகொண்டு பிறப்பு எடுக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.
நன்றி.
My website
www.astroravichandransevvai.in
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment