ஒருவரின் குணநலன்களை கண்டறிவது எப்படி?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
திருமண முயற்சியில் இறங்கியிருக்கும் இளைஞர்களும் மற்றும் கூட்டாக பிறருடன் சேர்ந்து தொழில் தொடங்க இருக்கும் நபர்களும் கட்டாயம் தன்னுடன் இணைய இருக்கும் நபர்களது குணநலன்களை ஆராய்ந்து அறிவது அவசியமான ஒன்றாகும்.
சமுதாய நிர்பந்த அடிப்படையில் தன்னுடன் இணையக்கூடிய நபரின் குணநலன்களை பொறுத்தே "இல்லறமாக இருந்தாலும் அல்லது தொழில் தொடங்கும் இடமாக இருந்தாலும் சிறப்படையும்".
ஒரு மனிதரை நல்லவரா? கெட்டவரா? என தீர்மானிப்பது அவரிடம் உள்ள குண நலன்களே ஆகும்.
ஒருவரின் குண நலன்களுக்கும் அவரது நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நல்ல குணநலம் உடையவர் நல்ல நடத்தை உடையவராக இருப்பார்.
ஒருவரின் குண நலம் அதிக சதவீதம் அவரது அகம் சார்ந்ததாகவே உள்ளது. நல்ல சூழல் அவனைச்சுற்றி அமையும்போது அவரது குணநலன்களில் சிறிது மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஒருவரது குணநலம் பெரும்பாலும் உளவியல் சார்ந்த ஒன்றாகும்.
ஜோதிட அடிப்படையில் ஒருவரது குணநலம் பற்றி ஆராய
"லக்கனம், லக்கனத்தில் உள்ள கிரகம் மற்றும் லக்கனாதிபதி " ஆகிய மூன்றையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும். இதேபோல ராசி ,
ராசியில் இடம் பெறும் கிரகம் மற்றும் ராசிநாதன் ஆகிய மூன்றையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்
லக்னத்தில் உள்ள கிரகம், லக்னத்தை பார்க்கும் கிரகம், லக்கினாதிபதி இருக்கும் வீடு மற்றும் அதனுடன் தொடர்பு கொள்ள கூடிய கிரகங்கள் மற்றும் லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ளும் கிரகங்கள் அதாவது லக்னாதிபதியுடன் பார்வை, சேர்க்கை மற்றும் நட்சத்திர சாரம் பெறும் கிரகம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒருவரது குணநலன்களை ஆராய்ந்து அறிய வேண்டும்.இதேபோல மேற்கண்ட அடிப்படையில் ராசியினையும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து , லக்கனத்தில் அல்லது ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் , இயற்கை சுப கிரகங்களால் தொடர்பு பெற்ற நிலையில் ஜாதகர் "குணம் என்னும் விளக்கில் குன்றிலிட்ட 🔥 தீபமாய் நல்ல குணநலன்களுடன் மிளிர்வார்கள்".
லக்கனாதிபதி அல்லது ராசி அதிபதி பாவக்கிரகமாக இருக்கக் கூடிய பட்சத்தில் லக்னத்திலேயே ஆட்சி பெற்று நிற்பது உகந்தது அல்ல.
நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானும் மற்றும் இருள் கிரகமான சனிபகவானும் லக்னத்தில் அல்லது ராசியில் இடம் பெறுவது நல்லதல்ல.
எவ்வித பங்கப்படாத நிலையில் லக்கனத்திலே அல்லது ராசியிலோ குரு பகவான் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து திக் பலம் பெற்ற நிலையில் ♐ தனுசு மற்றும் மீனம் லக்கனங்களில் பிறந்தவர்கள் நல்ல
குணநலம் படைத்தவர்களாக வலம் வருவார்கள்.
குருபகவான் இலக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதியை பார்வை செய்யக்கூடிய அமைப்பு பெற்றவர்கள் நல்ல குணம் படைத்தவர்களாக நேரிய வழியில் நடப்பவர்களாக அதே நேரத்தில் மற்றவர்கள் வஞ்சித்து பொருள் சேர்க்கும் எண்ணம் இல்லாதவர்களாக மொத்தத்தில் சொல்லப்போனால் ஏமாளிகளாக இருப்பார்கள்.
லக்னத்தில் அல்லது ராசியில் பாவத்துவம் பெறாத நிலையில் புதன் பகவான் அல்லது லக்னாதிபதி புதனாகவோ அல்லது லக்கினாதிபதியுடன் புதன் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும் சாதகர் எதையும் கணக்குப்போட்டு செய்பவராக திகழ்வார். எதையும் பார்த்தவுடன் எளிதாக கற்றுக் கொள்ளும் நுண்கலைத் திறன் மிக்கவராகவும் காணப்படுவார். மனதளவில் என்றும் இளமைத்தன்மை மிக்கவராகவும் மற்றும் தன்னுடைய அறிவை எப்பொழுதும் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபாடு உடையவராகவும் திகழ்வார்.
பேச்சு திறன் மிக்கவராகவும், கல்வியில் ஆர்வம் உடையவராகவும் மற்றும் வித்தையில் சாதுரியம் மிக்கவராகவும் காணப்படுவார்.
எந்த ஒரு செய்தியையும் புள்ளிவிவரங்களுடனும், தகுந்த சாட்சியங்களுடன் விளக்க கூடியவராகவும் மற்றும் நேரிய வழியில் நடக்க கூடியவராகவும் இருப்பார்.
இசையில் நாட்டம் உடையவராகவும், கதை, கவிதை ,கட்டுரை இலக்கண , இலக்கிய நூல்களைப் படிக்கக் கூடிய ஆர்வம் உடையவராகவும் மற்றும் புராண நூல்களை தேடி படிக்கும் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்.
லக்னத்தில் பாவத்துவம் பெறாத நிலையில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது லக்னாதிபதி சுக்கிரனாகவே இருந்தாலும் அல்லது லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்திருந்தாலும் சாதகர் எதையும் ரசித்து பார்க்கும் குணநலன் மிக்கவராக காணப்படுவார்.
நடனம், நாட்டியம் மற்றும் சினிமா போன்றவற்றின் மீது அதிக நாட்டம் மிக்கவராகவும், தன்னை அலங்கார பிரியர் ஆக மாற்றிக் கொள்ளக்கூடிய குணாதிசயம் மிக்கவராகவும், அனைத்து ஆடம்பர வசதிகளை அனுபவிக்க கூடிய ஆசை மிக்கவராகவும் காணப்படுவார்.
விதவிதமான மோட்டார் வாகனங்களை பயன்படுத்தக்கூடிய ஆசை மிக்கவராகவும், மற்றவரை வஞ்சித்தாவது பொருளீட்டி வசதி படைத்தவராக வாழக்கூடிய குணநலன் உடையவராகவும் காணப்படுவார்.
லக்கனத்தில் அல்லது ராசியில் வளர்பிறைச் சந்திரன் அமர்ந்து இருந்தாலும் அல்லது லக்னாதிபதி சந்திரனாக இருந்து லக்கனத்தில் ஆட்சிபெற்று நின்றாலும் அல்லது லக்கினாதிபதி உடன் சந்திர பகவான் சேர்ந்து நின்றாலும் அழகு வதனம் படைத்தவராக இருப்பார்.
சந்திரனுடன் எவ்வித பாவக்கிரகங்கள் சேராமல் வளர்பிறைச் சந்திரனாக இருக்கக்கூடிய பட்சத்தில் உறுதியான மனநிலை உடையவராகவும், எடுக்கக்கூடிய முடிவில் திடமாக நம்பிக்கை உடையவராகவும் இருப்பார். மாறாக பாவ கிரகங்களான சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு இருப்பின் உறுதியான மனநிலை அற்றவராகவும் மற்றும் அடிக்கடி தன்னை குழப்பிக் கொள்ளும் மனநிலை உடையவராகவும் காணப்படுவார்.
பொதுவாக ஒருவர் நல்ல குணம் உடையவராக திகழ இலக்கனம் மற்றும் ராசி மற்றும் அதன் அதிபதி , இலக்கனத்தை அல்லது ராசியினை பார்க்கக் கூடிய கிரகங்கள் ஆகியவை எவ்வித பாதிப்பும் இல்லாத சூழலில் நல்ல குணம் உடையவராக திகழ்வார்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
Teacher & Astrologer
Omsakthi online astro consulting centre,
Karambakkudi.
என்றும் அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்.
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment