Monday, 28 October 2024

ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் தரும் பலன்கள்

 ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் தரும் பலன்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படுவது சூரியன் பகவான் ஆவார். தலைவியாக விளங்குவது சந்திரன் பகவான் ஆவார். சூரியனை அப்பன் என்றும் சந்திரனை அம்மை என்றும் அழைக்கப்படுகிறது.


 சூரியன் முழு ஒளி கிரகம் ஆகும்.சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் கிரகம் சந்திரன் ஆகும்.


   ஒருவர் ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் வலிமையுடன் இருந்தாலே அரசு , அரசியல், அரசாங்கம் மற்றும் ஆட்சி செய்யும் அமைப்புகள் போன்றவற்றில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்..


 இதேபோல் தாய் மற்றும் தந்தை மூலமாக நல்ல அன்பும் மற்றும் அரவணைப்பும் கிடைக்க சூரியன் மற்றும் சந்திரன் பகவான் அருளாசி மிகவும் அவசியமான ஒன்றாகும்.


  சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் மற்றும் சந்திரனுக்கு கேந்திரத்தில் சூரியனும் அமரப்பட்ட ஜாதகம் மிகவும் நல்ல ஜாதக அமைப்பு ஆகும்.


   ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து அமாவாசை அமைப்பில் இத்துடன் ராகு சேர்ந்த சூரிய கிரகணம் தோன்றும் ஜாதகம் அமைப்பில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பிறந்தவுடன் அந்த குடும்பமே நாசமாக சொத்துக்கள் விரயம் ஆகி தாய் மற்றும் தந்தையர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லாமல் வசிக்கக் கூடிய நிலைகளில் கொண்டு சேர்க்கும்.


        அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் சம சப்தமாக சந்தித்து இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வையைப் பெற்ற நிலையில் இருந்தால் அந்த அமைப்பில் பிறந்த தாய் மற்றும் தந்தைகள் புகழுடைய தந்தைகளாக இந்த குழந்தையின் பெயரைச் சொல்வதைவிட இன்னாருடைய பிள்ளை என்று சொல்லும் அளவுக்கு புகழ் படைத்த பெற்றோர்களாக இருப்பார்கள்.


       ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் உடன் சனி அல்லது ராகு இணைந்து அல்லது சனி பார்வையை பெற்ற நிலையில் நல்ல தாய் மற்றும் தந்தைகளாக இல்லாத நிலை ஏற்படும்.


       சில நேரங்களில் சூரியன் உடன் சனி அல்லது ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்ற நிலையில் அதன் தசை வரும் காலங்களில் தந்தை மரணிக்க கூடிய நிலையில் இருக்கலாம் அல்லது உங்களை விட்டு பிரிந்த நிலை ஏற்படும். அப்படி பிரிந்த நிலை என்பது சுப பிரிவாக சம்பாதிக்கும் பொருட்டு வெளி நாடு சென்று இருப்பது அல்லது எதற்கும் உபயோகபடாத பெற்றோராக இருப்பது போன்றவை உண்டாகும்.


     எவ்விதமான பலனை தரும் என்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த இடத்தில் உள்ள சுபத்தன்மை அல்லது பாவ தன்மையை பொறுத்தது. ஆகும்.

இருப்பினும் ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை பொறுத்து பலனில் சற்று மாற்றம் ஏற்படும்.


   இதே போல சந்திரன் உடன் சனி அல்லது ராகு பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு அதன் தசை வரக்கூடிய காலங்களில் தாய்க்கு மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான தொல்லைகளை கொடுக்கலாம் அல்லது தாய் பிரிந்து வாழக்கூடிய நிலை அல்லது பயனில்லா தாயாக இருக்கக்கூடிய நிலை. இவ்வகை நிவைகளை முடிவு செய்யவதற்கு நான்காம் இடங்களை‌ அல்லது அதன் அதிபதியையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


பௌர்ணமி நெருங்குகின்ற சந்திரன் பௌர்ணமி சந்திரன் அல்லது பெளர்ணமியை விட்டு விலகுகின்ற சந்திரன் ஆகிய சந்திரன் வலிமை மிகுந்த சந்திரன் ஆகும். இத்தகைய நிலையில் சூரியனும் வலுப்பெற்று அதன் தசை காலங்களில் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பு உருவாக்குகிறது. இத்தகைய நிலையில் சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் உள்ள இயற்கை சுப கிரகமான சுக்கிரன், தனித்த புதன் மற்றும் குரு பகவான் நிற்க சந்திராதி யோகம் பெற்று அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


    இயற்கை சுப கிரகமான வளர்பிறைச் சந்திரனுக்கு இருபுறமும் இயற்கை சுப கிரகம் நிற்க சாமரை யோகம் ஆகும்.எந்த ஒரு கிரகம் ஆனாலும் கடக வீட்டில் நிற்கும் போது அந்த வீட்டின் அதிபதி சந்திரன் பகவான் வளர்பிறை சந்திரன் ஆக இருப்பின் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.தேய்பிறை சந்திரனாக இருந்தால் அதன் தசை காலங்களில் யோக பலனை தராது.


  சூரியன் பகவானை சந்திரன் பகவான் பன்னிரெண்டு பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை உண்டாகிறது.சூரியன் பகவான் நிற்கும் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு சந்திரன் பகவான் வரும் பொழுது பெளர்ணமி உண்டாகிறது.


சூரியன் பகவான் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடம் வரை வரும் சந்திரன் வளர்பிறை சந்திரன் ஆகவும், ஏழாம் இடத்திலிருந்து சூரியன் இருக்கும் இடம் நோக்கி செல்லும் சந்திரனை தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: