ஜோதிடம் காட்டும் சூட்சும உண்மைகள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜாதக பலன் அளிக்க முற்படும் போது மனதை கழட்டி வைத்து விட்டு ஜாதகத்தில் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்.
இறைவனால் இப்பிறப்பில் ஜாதக பலன் அளிக்க பணிக்கப்பட்ட நாம் விருப்பு ,வெறுப்புகள் அற்று வேண்டியவர் , வேண்டாதவர் மற்றும் தெரிந்தவர் ,தெரியாதவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நமது வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டு நமக்கு இன்னல்கள் பல தந்தவராக இருந்தாலும் அவரே நம்மிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்தால் அந்த தருணத்தில் நாம் முழு ஜோதிட ஆலோசகராக நின்று மட்டுமே பலன் அளிக்க வேண்டும்.
ஜாதக கட்டத்தில் கிரக அமைப்பை இறை அருளால் ஆராய்ந்து நடந்ததை மற்றும் நடக்க இருப்பதை நடுநிலையாக ஆய்வு செய்து பலனை அளிக்க வேண்டும்.
சிலரது ஜாதகங்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக பலன் சொல்வதற்கு ஆசையாக இருக்கும்.சிலரது ஜாதகத்தை கணித்து கொண்டு இருக்கும் போது மனதின் அடியாழத்தில் வருத்தம் நிலவும்.வேறு வழியின்றி நடந்ததையும் பிறகு நடக்க இருப்பதையும் மன வருத்தத்துடன் பலன் சொல்ல வேண்டி இருக்கும்.
சிலருக்கு ஜாதகரை பற்றியும் மற்றும் அவருக்கு நடந்த வாழ்வியல் சம்பவங்களையும் தசா புக்தி மற்றும் கோச்சார அடிப்படையில் ஆராய்ந்து பலன் சொல்லும் போது பலன் கேட்பவர் கண்ணில் சாரை சாரையாக கண்ணீர் வந்ததை எல்லாம் பார்க்கும் போது ஜாதகம் எந்த அளவுக்கு துல்லியமானது என்று எண்ணி அவர்களுக்காக மற்றும் அவரது கர்ம பலனிற்காக மனதார பிரார்த்தனை செய்வதை விட வேறு வழியில்லை.எல்லாம் அவரது கர்ம பலன் அனுபவிக்க வேண்டியதாக உள்ளது.
நாம் சொல்லும் பலனை கண்டு ஜாதகம் பார்த்து முடித்த பிறகு அவர் வயதில் மூத்தவர்களாக இருந்தும் அவர்கள் கை எடுத்து கும்பிடும் போது இந்த ஜோதிட கலையின் உன்னதம் புரிகிறது.அப்பொழுது அவர் கொடுக்கும் மரியாதை நமக்கு அல்ல.நாம் கணித்து சொல்லப்படும் ஜாதக பலனிற்கே அவர் கொடுக்கும் ஆத்மார்த்த மரியாதை என்று புரிகிறது.
ஆதலால் இன்னும் துல்லியமாக கணித்து பலன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது. எனவே இன்னும் கூடுதலாக பயிற்சி எடுத்து நம்மை இன்னும் பட்டை தீட்டி கொள்ள வேண்டும் என்ற தணியாத ஆவல் பிறக்கிறது.
இது போன்ற நபர்களுக்காக இறைவனிடம் கூடுதலாக பிரார்த்திக்க தூண்டுகிறது.
சில நேரங்களில் மனதுக்குள் எண்ண தோன்றுகிறது இறைவன் மட்டும் ஏன் ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையில் கூடுதலாக கஷ்டபடுத்தி பார்க்கிறார் .ஏன் இந்த ஓரவஞ்சனை என கேள்வி கேட்க தூண்டுகிறது.இதற்கு ஜோதிடத்திலே விடை கிடைக்கிறது."ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் " என்ற விடையையே ஜோதிடம் நமக்கு தருகிறது.
"எல்லாம் கடந்து போகும் "
இந்நிலையும் மாறும் "
என்ற தத்துவார்த்த வார்த்தைகளை வாயில் ஆலோசனையாக உதிர்த்து விடலாம். ஆனால் அந்த நிலையை கடக்க அவர் என்ன பாடு பட வேண்டியதாக இருக்கிறது என்பதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.
"கெட்ட பின்பு ஞானி" என்ற வகையில் இந்த கஷ்டத்தை தாண்டி வந்தவர்கள் கூறிய அந்த வார்த்தைகள் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்களால் ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் சவாலாக மற்றும் கஷ்டமாகத்தான் இருக்கும்.
வாழ்வில் கஷ்டத்தால் தடம் மாற நினைப்பவர்களுக்கும் தடம் மாறி செல்வபர்களுக்கும் இதமான வழிகாட்டலை தருவது தான் சோதிடம் ஆகும். இந்தப் பணியைச் செய்யக்கூடிய ஜோதிடராகிய நமக்கு இறைவன் நமக்கு அளித்த கொடையாகும்.
"எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றோ "அல்லது "விதிப்படி நடக்காது என்றோ" இரண்டையும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.
விதி என்பது அவர் பிறக்கக்கூடிய காலகட்டத்தில் வான வீதியில் சுற்றி வரும் கிரக அமைப்பைக் கொண்டு முடிவு செய்து விடுகிறது. அந்த விதியை சில நேரங்களில் மாற்றிவிடும் சிறப்பு தகுதி விதிவிலக்குகளுக்கு உண்டு விதிவிலக்குகள் என்பது இப்பிறப்பில் நாம் கொண்ட நல்ல எண்ணம் செயல்கள் மற்றும் முழு மனதுடன் செய்யப்படும் பரிகாரம் தரும் செயல்கள் ஆகும்.
பரிகாரம் என்பது இறைவனுக்கு செய்வது மட்டுமல்லாமல்.நம்மை சுற்றியுள்ள சக உயிர்களை நேசிக்கும் செயல்களுமே அடங்கும்.
உடலால் மற்றும் மனதால் பலமிழந்த நபர்களுக்கு செய்யும் உதவியும் மற்றும் "அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் "என்னும் பாரதியார் கூற்றுப்படி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தலும் பரிகார வகையில் அடங்கும்.
விதி என்பது முற்பிறவியில் நாம் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப அமைகிறது.
ஜாதகம் பார்ப்பதால் கஷ்டமான தருணங்களில் நமக்கு நடக்கும் கஷ்டங்களின் மூலம் நமக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று மனம் உழண்டு போய் விடாமல் கர்ம பலன் காரணம் என்ற உண்மை தெரிய வரும் போது சற்று ஆறுதலாக இருக்கும்.வேறு வழியின்றி நம்மால் மாற்ற இயலாத கஷ்டத்தை எதிர் கொள்ள மனம் தயாராகி விடும்.இதற்கான வழி காட்டலாக ஜோதிடம் உதவுகிறது.
நன்றி.
செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி.
Astro Ravichandran Sevvai
No comments:
Post a Comment