புதன் பகவான் காட்டும் புதிய பரிமாணம்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிடத்தில் புதன் பகவான் என்பது அறிவு காரக கிரகம் ஆகும்.வித்தைக்கு காரகன் ஆகும். மாமன் போன்ற உறவுகளுக்கு காரக கிரகம் ஆகும்.
அறிவு ,திறமை ,நுண்ணறிவு
,படைப்பாற்றல், பேச்சு,எழுத்து , கண்டுபிடிப்பு,இசை , இலக்கிய ரசனை,, கணினி அறிவு , கணிதம்,
மேடை பேச்சு,செஸ் விளையாட்டு, போன்ற அனைத்து துறைகளிலும் ஒருவர் சிறந்து விளங்க வேண்டும் எனில் புதன் பகவான் வலிமை அடைந்த நிலையில் இருக்க வேண்டும்.
பட்டறிவு மற்றும் படிப்பறிவு ஆகிய இரண்டிலும் ஒருவர் சிறந்த நிலையில் விளங்க புதன் பகவான் வலிமை அடைந்த நிலையில் இருக்க வேண்டும்.
ஆடிட்டர்,புள்ளியலார்,நிதி துறை, வங்கி துறை பேட்டி காணுபவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,தொகுப்பாளார்,, சமூக ஊடகங்களை சிறப்பாக பயன் தரும் வகையில் பயன்படுத்துபவர், பிரச்சினையை தீர்த்து வைப்பவர் போன்றவற்றில் ஒருவர் சிறந்த நிலையில் விளங்க புதன் பகவான் வலிமை அடைந்த நிலையில் இருக்க வேண்டும்.
இசை,எழுத்து,கதை, கவிதை,பாடல் , கட்டுரை,செய்தியை சேகரிப்பவர், தலையங்கம் எழுதுபவர் , ஜோதிடம் போன்ற அனைத்து கலைகளிலும் ஒருவர் புகழ் பெற்று விளங்க புதன் பகவான் பலமடைந்து இருக்க வேண்டும்.
உடல் பலம் தேவைப்படாத அதே நேரத்தில் யூகித்து கணிக்கும் விளையாட்டு போட்டியில் செஸ் முதலிடம் வகிக்கிறது.
செஸ் போன்ற விளையாட்டு போட்டியில் தலைசிறந்து விளங்க புதன் பகவான் உங்கள் ஜாதகத்தில் பலமடைந்து தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.
புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் அதிக சுபத்துவ நிலையில் ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டுள்ள அமைப்பை பெற்றவர்கள் ஐடி பீல்டில் கொடி கட்டி பறப்பார்கள்.
வலிமை அடைந்த புதன் பகவானை பெற்றவர்கள் நமக்கு நடக்கும் பிரச்சினைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய திறமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.
எல்லோரும் ஒரு நிலையில் சிந்திக்க இவர்களுடைய சிந்தனை சற்று மாற்றி அமைக்கப்பட்ட நிலையிலிருக்கும்.எந்த ஒரு துறையில் ஈடுபட்டாலும் தனக்கென ஒரு தனி இடத்தை இவர்கள் தக்க வைத்துக் கொள்வார்கள்.
விண்வெளி ஆராய்ச்சி , இந்த உலகத்திற்கு புதிய ஒன்றை கண்டுபிடித்து வெளியிடுவது ,
தான் பெற்ற ஞானத்தால் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஏதாவது ஒன்றை படைப்பது அதன் மூலம் உயர்ந்த தன்னம்பிக்கையை பெற்று விளங்குவது.
எந்த ஒன்றிலும் தனக்கென உள்ள திறமையை கனகச்சிதமாக பயன்படுத்தி அந்தத் துறையில் அவர்கள் தலைசிறந்த நபராக விளங்குவதும் புதனுடைய அருள் ஆகும்.
சிலர் முறையாக இலக்கண இலக்கியங்களையோ அல்லது முறையான சங்கீதங்களையோ கற்காமலே கேள்வி ஞானத்தின் மூலமாக இலக்கண, இலக்கிய, கதை ,கவிதை மற்றும் கட்டுரைகள் படைப்பது, இசை ,பாடலில் தனி சிறப்பு உடையவராக விளங்குவது போன்றவை அனைத்தும் புதன் பகவனுடைய அருள் ஆசியால் ஆகும்.
பள்ளி சென்று படிக்காமலே டிவி ரேடியோ போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை சரியாக ரிப்பேர் செய்வது இவையும் வித்தை காரகன் புதன் பகவானே காரணமாக அமைகிறது.
குரு பார்த்த புதன் அல்லது வளர்பிறை சந்திர கேந்திரத்தில் உள்ள புதன் வலிமையடைந்த புதனாக கருதப்படுகிறது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்
7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment