பலன் எடுப்பதில் மறைமுக வலுவை கொடுக்கும் கேது பகவான்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நிழல் கிரகங்களில் கேது பகவான் என்பது செம் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. கேது பகவான் மனித தலையும் ,பாம்பு உடலையும் கொண்டது ஆகும்.
கேது பகவான் பின்னோக்கி நகரும் கிரகம் என்பதால் இவற்றிற்கு வக்ர கதி கிடையாது. ராகு பகவானுக்கு சம சப்தமாக ஏழாம் இடத்தில் 180 பாகை வித்தியாசத்தில் கேது பகவான் பின்னோக்கி நகர்ந்து செல்கிறார்.
ஒரு ராசியில் கேது பகவான் பதினெட்டு மாதங்கள் சஞ்சாரம் செய்கிறார்.
அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஒரே ராசியில் இருப்பார்.
கேது பகவான் தான் இருக்கும் ஸ்தானத்தையும் மற்றும் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனையும் அதிகரித்து தர வைப்பார்.ராகு பகவானை போல தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை பாதிப்படைய செய்ய மாட்டார்.
இவை மட்டும் அல்லாமல் பாவ கிரகங்கள் ஆன சனி மற்றும் செவ்வாய் உடன் இணையும் போது மறைமுக வலுவை தந்து பலம் அடைய செய்வார்.
கேது பகவான் உடன் சனி மற்றும் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை போன்ற வகைகளில் தொடர்பு கொள்ள ஆன்மீக வழிகளில் சாதகரை ஈடுபட வைப்பார்.
கேது பகவான் லக்னத்தில் இருக்க முன்கூட்டியே யூகிக்கும் தன்மை படைத்தவராக இருப்பார்.
வாக்கு ஸ்தானத்தில் இருக்க வாக்கு பலிக்கும் தன்மை உண்டாகும்.ஐந்தாம் இடத்தில் கேது கடவுள் சிந்தனையை கொடுப்பார்.ஒன்பதாம் இடத்தில் கேது
தான தர்ம குணம்,சாஸ்திர ஞானம் பெற்று திகழ்வார்.கர்ம ஸ்தானமான பத்தாம் இடத்தில் கேது பகவான் தெய்வீக தொழில் புரிபவராக இருப்பார்.அதாவது குறி சொல்லுதல், பூசாரி போன்ற வகைகளில் பொருள் ஈட்டுவார்.பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் முக்தி யோகத்தை ஜாதகருக்கு வழங்குவார்.
சூரியன் கேது இணைவு ஆன்மிக தலைவராக திகழ்வார் .ஆன்மீக ஸ்தானங்கள் வைத்து வழி நடத்துவராக ஆன்மிக குருவாக திகழ்வார்.
குரு பகவானுடன் கேது இணைவு
"கேள யோகம் "என்னும் கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு அள்ளித் தரும்.
"வல்லரவு தனித்து நின்று மறைவனோடு இசைஞானி மருககானில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என்று இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும்"
இங்கு
(வல்லரவு -ராகு பகவான்
மறையவன் -குரு பகவான்
இசைஞானி -கேது பகவான்)
அஸ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகிய நட்சத்திரத்துக்கு நாதனாக கேது பகவான் திகழ்கிறார். கேது தசை ஏழு ஆண்டுகள் ஆகும்.
கேது பகவான் தரும் இன்னல்களில் இருந்து விடுபட கீழபெரும்பள்ளம் சென்று வழிபடலாம்.ஆந்திரவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வழிபாடு நடத்தலாம்.கேது பகவான் பாவ கிரகங்களில் செவ்வாய் பகவானை போல செயல்படுகிறார்.ஆதலால் செவ்வாய் கிழமை சென்று வழிபாடு நடத்துங்கள்.
கேது பகவான் சுபத்துவமான நிலையில் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் நல்ல பலனை தருவார்.
ஒருவருக்கு கேது பகவான் உடன் சனி இணைந்து செவ்வாய் பார்வை பெற்ற நிலையில் அல்லது கேது பகவான் உடன் செவ்வாய் இணைந்து சனி பகவான் பார்வை செய்த நிலையில் கேது தசை நடந்தால் அந்த ஏழு ஆண்டுகள் எந்த லக்கனமாக இருந்தாலும் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.லக்கனாதிபதி வலுவாக இருந்தால் அந்த ஏழு ஆண்டுகள் கேது பகவான் தரும் கஷ்டங்களை தாங்கி எதிர் நீச்சல் போடும் திராணி ஜாதகருக்கு இருக்கும்.
குரு அணியைச் சேர்ந்த தனுசு ,மீனம், மேஷம் ,விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு கேது பகவான் இந்த ஆறு லக்னங்களிலேயே இருந்து தசை நடத்தினால் ஜாதகருக்கு நல்ல பலனை கொடுக்கும்.
சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம் ,மிதுனம் ,கன்னி ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு கேது பகவான் இந்த ஆறு லக்னங்களில் ஏதாவது ஒரு வீட்டில் இருந்து தசை நடத்தினால் அந்த கேது திசை ஜாதகருக்கு யோகத்தை கொடுக்கும்.
கேது பகவானுக்கு என்று தனி வீடு கிடையாது. அது இருக்கும் வீட்டையே தனது சொந்த வீடாக கொள்ளும் .உதாரணமாக மீனம் வீட்டில் கேது பகவான் இருந்தால் கேது பகவான் குரு பகவான் போல் செயல்பட்டு அதன் தசையில் பலனை தரும்.
கேது பகவானுக்கு பலன் எடுக்கும் போது கேது பகவானுக்கு வீடு கொடுத்தவன் கிரக வலு ,கேது பகவானை பார்வை செய்த மற்றும் சேர்க்கை பெற்ற கிரகங்களுடைய பலம் மற்றும் கேது பெற்ற நட்சத்திர சாரம் ஆகிய அனைத்தையும் சார்ந்தே ஜாதக பலன் கொடுக்கும்.
கேது பகவான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் அதன் தசையில் ஜாதகருக்கு நல்ல யோகத்தை தருகிறது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment