தாம்பத்திய சுகத்தையும் மற்றும் சொகுசு வாழ்க்கையையும் தருபவர் யார்?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஆடம்பர பங்களா, விதவிதமான சொகுசு கார்கள் மற்றும் புதிய ரக அலைபேசி முதலியவற்றை பயன்படுத்தும் யோகத்தை உங்களுக்கு வாரி வழங்கும் தன்மை கொண்டது சுக்கிரன் பகவான் ஆவார்.
ஒருவர் சமூக ஊடகங்களில் அதிக நாட்டம் உடையவராக இருப்பதற்கும் மற்றும் சினிமா உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் update செய்து கொள்ளும் நபராக இருப்பதற்கும் சுக்கிரன் பகவான் காரண கார்த்தாவாக திகழ்கிறார்.
சுக்கிரன் பகவான் ஆடம்பர காரகன் ஆவார்.ஒருவர் அனைத்து விதமான ஆடம்பர பொருட்கனை பயன்படுத்தி வாழும் வாழ்க்கை என்பது சுக்கிரன் பகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி உள்ளது என்பதையும் பொறுத்து அமைகிறது.
ஒருவர் எப்பொழுதும் ஆடம்பரமான மற்றும் நவீன ரக பொருட்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் உடையவராக இருத்தல்.ஒருவர் தனது நடை ,உடை மற்றும் பாவனை போன்ற விஷயங்களில் அதிக அக்கறை எடுத்து கொண்டு மற்றவரை கவரும் வகையில் உடை அலங்காரம்,சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் போன்றவற்றை மாறுபட்ட வகையில் செய்து கொள்ளும் ஆர்வம் உடையவராக இருத்தல் போன்ற பண்பு நலன்களுக்கு சுக்கிரன் பகவானே காரண கார்த்தாவாக திகழ்கிறார்.
சிலர் கவர்ச்சியாக மற்றவரை கவரும் வண்ணம் போட்டோசூட் நடத்தி அதை சமூக ஊடகங்களில் விட்டு அதன் மூலம் சின்ன திரை மற்றும் பெரிய திரையில் நடனம், நடிப்பு போன்ற வகைகளில் வாய்ப்பை பெற்று சினிமா நட்சத்திரமாக ஜொலிப்பதற்கும் சுக்கிரன் பகவானே காரணமாக அமைகிறது.
ஒருவருக்கு திருமண யோகத்தை தரும் ஸ்தானமான ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சுக்கிரன் பகவான் காரகன் என்பதால் சுக்கிரன் பகவானை "களத்திர காரகன் " என அழைக்கப்படுகிறார்.
சுக்கிரன் பகவான் நீசம் பெற்றால் கூட கட்டாயம் ஒரு வாழ்க்கை துணையை தந்து விடுவார்.ஆனால் பாவத்துவம் அடைய கூடாது.
சுக்கிரன் பகவானை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் ஒருவர் பெண் சுகம்/ஆண் சுகத்தை தன் வாழ்க்கை துணையுடன் மட்டுமே பெற்று இருக்கிறாரா ? பலருடன் இன்ப சுகத்தை ஈடுபட்டு இருக்கிறாரா ? போன்ற பல விவரங்களை பெறலாம்.
ஒரு சிலர் மன்மதனாக பலருக்கு பிடித்த நபராக இருப்பதற்கு சுக்கிரன் பகவானே காரணமாக அமைகிறது.ஒருவர் அதிக நேரம் காம களியாட்டங்களில் ஈடுபட்டு தனது இணையை திருப்தி படுத்தும் தன்மைக்கும் மற்றும் ஒரு சிலர் தனது இணையை திருப்தி படுத்த இயலாத சோர்வடைந்த நிலையை அடைவதற்கும் சுக்கிரன் பகவானின் பலத்தை பொறுத்து அமைகிறது.
ஒருவர் தனது மனைவி உடனான உறவு நிலைகளை சுக்கிரன் பகவான் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஒருவர் முறையாக திருமணம் புரிந்து முறையாக சமூகம் ஏற்கும் படியான தாம்பத்திய சுகத்தை பெறுவாரா ? அல்லது முறையற்ற வழிகளில் சென்று தன்னை கெடுத்து கொள்வானா ? போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்க்க சுக்கிரன் பகவான் உதவுகிறார்.
ஒருவர் கட்டான மற்றும் கவர்ச்சியான உடல் வாகு உடையவராக திகழ்வதற்கும் சுக்கிரன் பகவானே காரண கர்த்தா ஆவார்.சிலர் அங்க அவயங்களை கவர்ச்சிகரமான உடை அணிந்து மற்றவர் பார்த்து கவரும் படியாக தன்மை கொண்டதற்கும் ,பாலியல் தொழில் புரியும் நபராக மாறுவதற்கும் சுக்கிரன் பகவானின் பாவத்துவ நிலையே காரணமாக அமைகிறது.
ஒருவர் ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் போன்ற நிலைகளில் பலம் இழந்து காமகாரகன் செவ்வாய்,சனி ,ராகு போன்ற மூவரின் தாக்குதல் ஒருவருக்கு ஏற்பட்டு காம திரிகோண ஸ்தானமான மூன்று,ஏழு மற்றும் பன்னிரெண்டாம் இடத்தில் ஏற்படின் பலருடன் காம சுகத்தை பகிர்ந்து கொள்ள ஆசை உடையவராக திகழ்வார்.
ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடம் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய இரு நிலைகளில் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பு ஏற்பட்டு பலம் பெற்ற அமைப்பை பெற்றவர்கள் நல்ல அழகிய வாழ்க்கை துணை (கணவன்/மனைவி) ஏற்பட்டு அவர் மூலமாக மட்டுமே முறையான இல்லற சுகத்தை அனுபவித்து நல்ல புதல்வரை பெற்று எடுத்து சீரான மற்றும் சிறப்பான வாழ்க்கை நீடோடி வாழ்வார்கள்.
கணிப்பொறி, நடனம்,ஆடை , ஆபரணங்கள்,நகைக்கடை , ஃபேன்ஸி, பைனான்ஸ்,வட்டி கடை ,பல சரக்கு கடை ,கொடுக்கல்-வாங்கல்,, டிரான்ஸ்போர்ட், டூரிஸ்ட் பஸ், டிராவல்ஸ்,ஹோட்டல் , பரதநாட்டியம், பியூட்டி பார்லர்,சிகை அலங்காரம் போன்ற வகையான தொழில்களில் ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட்டு அவை சார்ந்த தொழில் நடத்துபவராக இருந்தால் அவரது ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் சுக்கிரன் சுபத்துவமான நிலையில் தொடர்பு கொண்டிருக்கும்.
ஒருவர் முறையான தாம்பத்திய சுகத்தை எப்பொழுது அனுபவிப்பார் என்பதை கண்டறிவதன் மூலம் ஒருவருக்கு திருமணத்திற்கு உகந்த காலத்தை எளிதாக கணிக்க இயலும்.
சுக்கிரன் பகவானை பலமாக பெற்றவர்கள் வண்டி வாகன யோகம் பெற்றவராக திகழ்வார்.எனவே தான் சுக்கிரன் பகவான் வாகன காரகன் என்று அழைக்கப்படுகிறது.
ஒருவர் வாகன யோகம் பற்றிய ஆராய்ச்சிக்கு நான்காம் இடம், அதன் அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
ஒருவர் எப்படிப்பட்ட வீடு அமையும் மற்றும் எப்பொழுது அமையும் போன்ற விவரங்களை பெற அவரது ஜாதகத்தில் நான்காம் இடம் , அதன் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரையும் ஆராய்ந்து பார்த்து கண்டறிய இயலும்.
சுக்கிரன் பகவான் பொருள் அணியை சேர்ந்த நவ கிரகம் ஆகும்.சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகமாக புதன் மற்றும் சனி பகவான் திகழ்கிறார்.
சுக்கிரன் ரிஷபத்தை ஆட்சி வீடாகவும் மற்றும் துலாம் சுக்கிர பகவானுக்கு மூல திரிகோணம் மற்றும் ஆட்சி வீடாக கருதப்படுகிறது.மீனத்தில் சுக்கிரன் உச்சம் மற்றும் கன்னியில் நீசம் ஆகும்.சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சுக்கிரன் பகவான் விளங்குகிறார்.இருபது ஆண்டுகள் சுக்கிரன் தனது தசை காலமாக கொண்டு உள்ளது.
சுக்கிரன் பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் காலம் வாசம் செய்கிறார்.சுக்கிரன் சூரியனை எட்டு பாகை அளவில் நெருங்கும் போது அஸ்தமனம் அடைகிறார்.சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வரும் போது வக்கிரம் அடைகிறார்.
சுக்கிரன் பகவான் சூரியன் உடன் அல்லது சூரியன் இருக்கும் இடத்திற்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குளாகவே இருப்பார்.சுக்கிரன் ஒரு உள் வட்ட கிரகம் ஆகும்.
சுக்கிரன் பகவானை உடன் செவ்வாய் இணைந்து பாவத்துவ நிலையில் காதல் என்ற பெயரில் கற்பை இழக்க நேரிடும்.அதே நேரத்தில் சுபத்துவமான நிலையில் இருந்தால் அவர்கள் காதல் பெற்றோர்களால் முறையாக அங்கிகரிக்கப்பட்டு முறைப்படியான திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடக்கும்.
சுக்கிரன் பகவானுக்கு குரு எதிர் அணியை சேர்ந்த கிரகம் ஆகும்.சூரியன் மற்றும் சந்திரன் பகவான் முழுமையான பகை கிரகம் ஆகும்.
சுக்கிரன் பகவான் இயற்கை சுப கிரகம் என்பதால் எந்த இடத்தில் இருந்தாலும் நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.சுக்கிரன் பகவானுக்கு மறைவிட ஸ்தானங்களில் ஆறு மற்றும் பன்னிரெண்டாம் இடம் மறைவிடம் கிடையாது..
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
E-mail: masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment