சந்திரன் பகவான் தரும் சக்தி மிகு செயல்கள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சந்திரன் பகவான் ஒளி கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் இயற்கை சுப கிரகமாகவும் மற்றும் தேய்பிறை சந்திரன் இயற்கை பாவ கிரகமாகவும் அழைக்கப்படுகிறது.
சந்திரன் பகவான் நாள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.ஒரு ராசியில் இரண்டேகால் நாள் தங்கும்.மாதத்தில் பதினைந்து நாட்கள் வளர்பிறை சந்திரன்
ஆகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறை சந்திரன் ஆகவும் செயல்படுகிறது.
சந்திரன் பகவான் சூரிய பகவானை பன்னிரெண்டு பாகைக்கு உள்ளாக நெருங்கும் போது அமாவாசை உருவாகிறது.இந்த நிலையில் சந்திரன் பகவான் தனது ஒளி நிலையினை முற்றிலும் இழக்கிறது.
அமாவாசையினை விட்டு விலகும் சந்திரன் வளர்பிறை சந்திரன் ஆக கருதப்பட்டாலும் ஐந்தாம் திதியான பஞ்சமி திதியிலிருந்து மட்டுமே வளர்பிறை சந்திரன் ஆக கருதப்பட வேண்டும்.
சூரியனை விட்டு 180 பாகை அளவில் சம சப்தமாக சந்திக்கும் போது பொளர்ணமி உருவாகிறது.பொளர்ணமியை விட்டு விலகும் சந்திரன் தேய்பிறை சந்திரன் என்றாலும் ஐந்தாம் திதியான பஞ்சமி திதி வரை வளர்பிறை சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக் கொள்ள பட வேண்டும்.
எப்பொழுதும் பொளர்ணமி சந்திரன் ,பொளர்ணமியை நெருங்கும் சந்திரன் அல்லது பொளர்ணமியை விட்டு விலகும் சந்திரன் ஆகிய மூன்றையும் ஒளி மிகுந்த சந்திரனாக கருதப்பட வேண்டும்.
ஜாதக பலன் எடுக்கும் போது உயிர் என்று அழைக்கப்படும் லக்கனத்திற்கு அடுத்தப்படியாக உடல் என அழைக்கப்படும் ராசி மிக முக்கியமான ஒன்றாகும்.
ஜாதக கட்டத்தில் சந்திரன் பகவான் இருக்கும் இடத்தையே ஜென்ம ராசி என்று அழைக்கப்படுகிறது.
வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் உள்ள இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு , புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் சந்திர அதி யோகம் பெறுகிறது.இதன் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகர் அனுபவிக்க இயலும்.
சந்திரன் உடன் சனி அல்லது ராகு பகவான் மிகவும் நெருக்கமாக இணையும் போது சந்திரன் மிகவும் பலவீனமான அமைப்பை அடைவார்.
அமாவாசை அமைப்புடன் சனி அல்லது ராகு அல்லது இருவரும் இணைவு நிலையில் அல்லது சனி பார்வை செய்யும் அமைப்பில் இருப்பின் சூரியன் மற்றும் சந்திரன் மிகுந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.தாய் மற்றும் தந்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை தாய் , ஸ்தானமான நான்கு , ஒன்பதாம் இடமும் மற்றும் அதன் அதிபதியின் நிலையினை கொண்டு முடிவு செய்கிறது.
மேற்கண்ட அமைப்பு ஒருவருடைய ஜாதகத்தில் சுபர் பார்வை இன்றி எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் ஜாதகர் மனதளவில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாவார்கள்.அரசாங்க வேலை மற்றும் அரசியல் ஈடுபாடு போன்றவற்றில் பாதிப்பை அடைகிறது.
இதேபோல பொளர்ணமி யோகம் தரும் நிலையில் சந்திரன் உடன் இருள் கிரகமான சனி அல்லது நிழல் கிரகமான ராகு இணைவு சந்திர கிரகண தோஷத்தை தருகிறது.இந்நிலையில் வளர்பிறை அமைப்பில் முழுமதி இருந்தாலும் சந்திரன் பகவானால் கிடைக்கும் யோகத்திற்கு பங்கம் அடைந்து பலம் இழக்கிறது. இதே போல சனி இணைவு அல்லது பார்வை அமைப்பும் சந்திரனை பலமாக பாதிக்கிறது.
சந்திரன் பகவான் நிழல் கிரகமான ராகு , கேது மற்றும் இருள் கிரகமான சனி பகவான் உடனான தொடர்பு வளர்பிறை சந்திரன் ஆக இருந்தாலும் பாதிப்பை அடைகிறது.ஆனால் அது அமாவாசை சந்திரன் தரும் கெடு பலனை விட குறைவாக தருகிறது.
சந்திரன் மிகவும் நட்பு கிரகமாக விளங்குவது சூரியன்,குரு, செவ்வாய் ஆகும். சந்திரன் குருவுடன் இணைவு குரு சந்திரன் யோகமாகும் சந்திரன் பகவான் செவ்வாய் உடன் இணைந்தால் சசி மங்கள யோகமாகும்.
சந்திரன் இருக்கும் இடமான ஜென்ம ராசியினை அடிப்படையாக கொண்டு கோச்சார பலன்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரத்திற்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வரும் காலத்தை சந்திராஷ்டமம் என்று அழைக்கிறோம். இந்த காலங்களில் சுப காரியங்கள், சுப விஷயங்கள் செய்தலும் மற்றும் வெளியூர் புறப்படுதல் போன்றவை தவிர்த்தல் நல்லது ஆகும்.
சந்திரன் பகவான் இருக்கும் இடத்திற்கு நான்கு கேந்திரத்தில குரு பகவான் இருப்பது கஜகேசரி யோகம் ஆகும்.எதிரிமை வெல்லும் யோகம் உண்டாகும்.
சந்திரன் பகவான் வக்ரம், அஸ்தங்கம் தோஷம் கிடையாது. ராகு மற்றும் கேது பகவானை தவிர சந்திரன் பகவானுக்கு எல்லா கிரகங்களும் நட்பு கிரகங்களாக கருதப்படுகிறது.
நன்றி!
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Astro Ravichandran Sevvai
No comments:
Post a Comment