Tuesday, 10 October 2023

பலன் கணிக்க பார்க்க வேண்டியவை

 பலன் கணிக்க பார்க்க வேண்டியவை .

   


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை  என்பது மிக முக்கியமானது என்றாலும் இயற்கை பாவ கிரகம் லக்கனாதிபதியாக  வந்தால் அவை மறைவிடங்களில் நின்றாலும் அல்லது மறைமுக வலு பெற்று நின்றால் தான் நல்ல பலனைத் தரக்கூடிய நிலையில் இருக்கும்.


 ஜாதகத்தில் தன அதிபதியும் மற்றும் தன காரகணும் ஆன குரு பகவானும்  நீசம் பெற்று இருந்தாலும் பரிவர்த்தனை போன்ற முறைகளில் இழந்த வலுவை மீண்டும் பெறும் அமைப்பில் இருந்தால் மிகுந்த தன யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் மற்றும் ராகு பகவான் இணைந்து நின்று அந்த வீட்டின் அதிபதி சூரியன்  பகவான்  ஆனவர் 

குரு பகவான் பார்வை பெற்றால் ரசவாதம் அதாவது மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை பார்த்து பெரும் தனம் ஈட்டும் யோகம் உண்டாகும்.


 ஒருவர் விருச்சிகம் லக்கினத்தில் பிறந்து  ஏழாம் இடத்தை சனி மற்றும் செவ்வாய் இருவரும் தனித்தனியாக பார்வை செய்த நிலையில் இயற்கை சுப கிரகமான குரு பகவானும் மகரத்தில் இருந்து நீசம் பெற்று பார்வை செய்கிறது.

சனி மற்றும் செவ்வாய் பார்வைக்கு முன் நீசம் பெற்ற குரு பார்வை பெரிய அளவுக்கு எடுபட வில்லை.ஏழாம் அதிபதியும் மற்றும் களத்திர காரகனுமான சுக்கிரன் பகை வீடு ஏறி ராகு பகவான் உடன் நெருக்கமாக பாவத்துவ நிலையில் இருக்கிறது .


கன்னி ராசியான இவருக்கு ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி இருந்து லக்கனத்திற்கு ஏழாம் இடம் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்கிறது.

ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்து லக்கனத்திற்கு ஏழாம் இடத்தை பார்வை செய்கிறது.


மேற்கண்ட அமைப்பால் ஒரு பெண் நன்கு கல்வி பயின்று வெளிநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேல் மாத சம்பளம் பெறும் நிலையில் இருந்தாலும் திருமணம் கால தாமதமாகி கொண்டு உள்ளது.


என்னதான் வசதி வாய்ப்புகள்,அழகு அந்தஸ்து மற்றும் படிப்பு இருந்தும் 26 வயது வரை திருமணம் நடை பெறாமல் தள்ளிக்கொண்டே சென்றதற்கு கிரக அமைப்புகளே காரணமாக அமைகிறது.


 ஜாதக கட்டத்தில் யோகம் தரும் அமைப்புகள் இருந்தாலும் திருமணம் மற்றும் குழந்தை பெறும் அமைப்பு ஆகியவை பலவீனம் அடைந்து இருப்பதால் தள்ளி கொண்டு செல்கிறது.


 இது போன்ற பலவீனமான அமைப்புகளில் இருந்து மீண்டு வர அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்று இருப்பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வெளியேறி வெற்றி பெற்று விடலாம்.அதேநிலையில் லக்னாதிபதியும் பலவீனமாக இருந்தால் அந்த கஷ்டத்திலிருந்து மீண்டு வர இயலாது போய்விடும்.


  துலாம் லக்கனம் மற்றும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 

இரண்டாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் மகரத்தில் குரு மற்றும் மீனத்தில் சனி .


 ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் களத்திர காரகன் சுக்கிரன் உடன் இணைந்து சுக்கிரன் பாவ நிலை அடைந்து உள்ளது.குடும்ப ஸ்தானத்தில் தனது சம சப்தம பார்வையால் மாங்கல்ய ஸ்தானத்தை பார்வை செய்கிறது.சனி தனது மூன்றாவது பார்வையால் எட்டாம் இடத்தில் பார்வை.சனி மற்றும் செவ்வாய் பார்வையால் மாங்கல்ய ஸ்தானம் கெட்டு இருக்கின்ற நிலையில் குரு பார்வையும் அந்த இடத்தில் விழவில்லை எனில் பெரிய அளவில் பாதிப்பை தந்து இருக்கும். எட்டாம் இடத்தில் சனி செவ்வாய் பார்வை செய்ததால் திருமணம் கால தாமதமாகி கொண்டு சென்றாலும் குரு பார்வையால் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.


 இருபத்தாறு வயதை கடந்த இந்த பெண்ணிற்கு தற்போது சனி தசையில் சனி புத்தி என்பதால் சுய புத்தி முடியும் வரை திருமணம் தடைபடும் என்று பலன் சொல்லி அனுப்பினேன்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Astro Ravichandran Sevvai 


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)

         


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEdஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்




No comments: