பலன் எடுப்பதில் மிகுந்த கஷ்டத்தை தரும் ஶ்ரீ ராகு பகவான்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
நிழல் கிரகங்களில் ராகு பகவானை கரும்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது பாம்பு தலையும் மற்றும் மனித உடம்பும் கொண்டதாகும்.
ராகு பகவான் உட் கூடு அற்ற மற்றும் திடப்பொருள் அற்ற கிரகம் என்பதால் இவற்றிற்கு பார்வை பலம் கிடையாது.சொந்த வீடு கிடையாது.எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டையே தனது சொந்த வீடாக கருத்தில் எடுத்துக் கொள்கிறது.
எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தை பார்வை செய்கிறது.குரு , சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு சிறப்பு பார்வைகளை கொண்டுள்ளது.ஆனால் ராகு பகவானுக்கு எவ்வித பார்வை பலன் கிடையாது.
ராகு பகவானுக்கு உச்சம், ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது.
ராகு பகவானுக்கு பலன் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.எனவே பலன் எடுக்கும் போது பின்வரும் வகையில் கவனிக்க பட வேண்டும்.
ராகு பகவானை எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி போல கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ராகு பகவான் உடன் பார்வை அல்லது சேர்க்கை மூலமாக தொடர்பு கொண்ட கிரக பலன்கள் மற்றும் ராகு பெற்ற சாரம் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து கணித்து பலன் அளிக்க பழக்க பட வேண்டும்.எனவே ஏனைய கிரகங்களளை விட ராகு மற்றும் கேது பகவானுக்கு பலன் எடுப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது.
ராகு பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் என்பதால் நல்லவர்களோடு இணையும் போது நல்லவராகவும் மற்றும் பாவாருடைய வீட்டில் இருக்கும் பொழுது கெட்டவர் ஆகவும் செயல்படுவார்.
வார கிழமைகளில் கூட ராகு பகவானுக்கு கிழமை கிடையாது.ஓரை கிடையாது.ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வீதம் ராகு காலம் மட்டுமே உள்ளது.
ராகு பகவான் கடுமையான பாவ கிரகம் ஆகும்.இவை தன்னுடன் இணைந்த சுப கிரகத்தின் சுப தன்மையை குறைத்து தான் மட்டும் சுப நிலை அடைந்து விடுகிறது.
ராகு பகவான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நின்றாலும் மற்றும் ராகு பகவான் உடன் கேந்திர அல்லது கோண அதிபதிகள் தொடர்பு பெற்று நின்றாலும் அல்லது குரு பகவான் உடன் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து அல்லது பார்வை பெறும் அமைப்பில் அல்லது சுக்கிரன் 'புதன் போன்ற சுப கிரகங்கள் உடன் இணைந்த நிலையில் நல்ல பலனை ஜாதகருக்கு ராகு தசை கொடுக்கிறது.
ராகு பகவான் மேஷம், ரிஷபம், மகரம் கடகம் மற்றும் கன்னி ஆகிய ஆறு வீடுகளில் நின்று அந்த வீடு ராகு பகவானுக்கு 3, 6 ,10, 11 ஆக இருந்தால் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது அதாவது எதிர்பாராத அதிர்ஷ்டத்தை, எதிர்பாராத பண வரவு, ஷேர் மார்க்கெட் அன்னிய தேச ,அந்நிய மொழி மற்றும் அந்நிய நாட்டோட தொடர்பு இது போன்ற வகையில் பொருள் ஈட்டும் யோகம் உண்டாகும்.
ராகு பகவான் தசை நடக்கும் காலங்களில் ஒரு மனிதனை பெரிய அளவிற்கு உயர்த்தி அழகு பார்ப்பதும் உண்டு.அதே நேரத்தில் கோபுரத்தில் இருந்தவனை குப்பைக்கு கொண்டு வந்து விடுவது உண்டு.
எனவே தான் ராகுவை "கொடுத்து கெடுப்பார் "என்றும் சில நேரங்களில் "கெடுத்து கொடுப்பார்" என்றும் அழைக்கப்படுகிறது.
ராகு தசை தொடக்கத்தில் யோகத்தை தருமாயின் கடைசி புத்திகளான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் புக்தி கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க தந்து விடும்.தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தால் கடைசியில் குறிப்பிட்ட சூரிய,சந்திர மற்றும் செவ்வாய் புக்திகள் ஜாதகருக்கு நல்ல பலனை அள்ளித் தரும்.
லக்னத்தில் ராகு பகவான் இருந்தால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஜாதகருக்கு உருவாகும். திருமண தடை உருவாக்கும். மெல்லிய தேகம் கொண்ட நபராக ஜாதகர் இருப்பார். சுப கிரகங்கள் பார்வை பெற்றால் பலன் மாறுபடும்.
இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருந்தால் குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பது குடும்பத்தை விட்டு தள்ளி இருக்க வைக்கும். குடும்பம் அமைப்பதில் காலதாமதம் ஆகும் .சூழ்ச்சியாக கபட தன்மையாக பேசக்கூடிய தன்மை இருக்கும்.
மூன்றாம் இடத்தில் ராகு பகவான் சகோதர தோஷத்தை கொடுக்கும்.அந்த வீட்டின் அதிபதி மற்றும் சகோதர காரகன் செவ்வாய் ஆகியவற்றை பொறுத்து சகோதர தோஷம் அமையும்.
நான்காம் இடத்தில் ராகு பகவான் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் போன்றவற்றில் பாதிப்பை உண்டாக்கும்.சுபர் பார்வை செய்வதை பொறுத்தும் மற்றும் அந்த வீட்டின் அதிபதியின் தன்மையை பொறுத்து பலன் மாறுபடும்.
ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் புத்திர தோஷத்தை தரும்., பூர்வீக சொத்தில் வசிக்க இயலாத தன்மை ஆகியவை உண்டாகும்.புத்திர காரகன் குரு மற்றும் புத்திர ஸ்தானாதிபதி அல்லது ஐந்தாம் இட சுபர் பார்வை ஆகியவற்றை பொறுத்து பலனில் மாறுபாடு உண்டாகும்
ஆறாம் இடத்தில் ராகு பகவான் எதிரியை வெல்வார்.அதே நேரத்தில் அந்த ராகு பகவானை பாவ கிரகமான சனி அல்லது செவ்வாய் பார்வை செய்தால் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுக்கும்.
ஏழாம் இடத்தில் ராகு களத்திர தோஷத்தை கொடுக்கும். திருமண தடையை உண்டாக்கும். சுபர் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள தோஷம் விலகி நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
எட்டாம் இடத்தில் ராகு பகவான் மாங்கல்ய தோஷத்தை கொடுக்கும்.திருண தடையை உண்டாக்கும்.
.சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற மாங்கல்ய தடை விலகும்.
ஒன்பதாம் இடத்தில் ராகு கஞ்சத்தனம்,தந்தை வழி உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.மேல்நிலை கல்வி பாதிப்பை ஏற்படுத்தும்.
பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் அந்த வகையில் பத்தாம் இட ராகு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
பதினொன்றாம் இட ராகு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.மூத்த சகோதரர் மற்றும் இளைய தாரம் போன்றவற்றை பாதிக்கும்.சுப கிரக தொடர்பு பலனை மாற்றி கொடுக்கும்.
பன்னிரெண்டாம் இட ராகு கஞ்சத்தனம்,கருமி தனம் உண்டாகும்.
ஒளிக்கிரகமான சூரியனுடன் ராகு சேர தந்தை மற்றும் அரசாங்க வேலை கிடைப்பதை தாமதம் போன்றவை உண்டாகும் .சந்திரனுடன் ராகு சேரும்பொழுது மன சஞ்சலம், தாய்க்கு பாதிப்பை கொடுக்கும் .செவ்வாயுடன் ராகு சேரும்போது சகோதரர்கள் பாதிக்கும். குருவோடு ராகு சேரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை உண்டாக்கும் . சுக்கிரன் உடன் ராகு திருமண தடை உருவாக்கும்.சனியுடன் ராகு கடுமையான கஷ்டங்கள் நஷ்டங்கள் கொடுக்கும் .செவ்வாயோட ராகு காம எண்ணங்களை கொடுக்கும்.இவை அனைத்தும் சுமார் பார்வை மற்றும் சேர்க்கை பெற பலனில் மாற்றம் உண்டாகும். மேற்குறிப்பிட்ட ஒவ்வொறு காரக பலனும் அந்த வீடு மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றை பொறுத்து பலனில் மாறுபாடு உண்டாகும்.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment