Tuesday, 10 October 2023

குரு பகவான் தரும் குண்டிக்கு செயல்கள்

 குரு பகவான் தரும் குணமிகு செயல்கள்.




 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 குரு பகவான் ஆனவர் தனுசு மற்றும் மீன லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். குருபகவான் இயற்கை சுப கிரகம் ஆகும். குரு பகவான் தான் இருக்கும் இடத்தையும் மற்றும் தன்னால் பார்க்கப்படும் இடத்தையும் சுப தன்மை அடைய வைப்பார்.


  எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தை பார்வை செய்யும் . அதேபோல குரு பகவானும் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தை பார்வை செய்வதை தவிர ஐந்து மற்றும் ஒன்பது ஆகிய சிறப்பு பார்வைகளை கொண்டுள்ளது.


 குருபகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை அதிகமாக சுபத் தன்மை அடைய வைப்பார். எனவே தான் "குரு பார்த்தால் கோடி நன்மை" என்று சொல்லப்படுகிறது.


 குரு பகவானால் பார்க்கப்படும் லக்கன அவயோக கிரகங்களும் மற்றும் இயற்கை பாவ கிரகங்களும் 

சுப தன்மையை அடைந்து அவை மறைவிடங்களில் இருந்தாலும் சாதருக்கு அதன் தசை காலங்களில் நல்ல பலனை தர வைக்கிறது.


  குரு பகவானால் பார்க்கப்பட்ட சனி, ராகு ஆகிய கிரகங்கள் அதன் தசைகளில் அதன் ஆதிபத்தியத்தை ஏற்றார் போல் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் மாறுகிறது.


 பாவ கிரகங்களுடைய சேர்க்கையால் பாவத்தன்மை அடைந்த கிரகங்களையும் குரு பார்வை படும் பொழுது அவை சுப தன்மையை அடைந்து அதன் தசைகளில் நல்ல பலனை தரக்கூடிய நிலையை உண்டாக்கி விடுகிறது.


உதாரணமாக சுக்கிரன் உடன் சனி மற்றும் ராகு ஆகிய இரு கிரகங்கள் இணையும்போது தாம்பத்திய சுகத்தையும் மற்றும் திருமண யோகத்தையும் தரக்கூடிய சுக்கிர பகவான் மிகுந்த பாவ நிலையை அடைந்திருப்பார். இந்த பாவத்தன்மையை ஒற்றை குரு பகவான் உடைய பார்வை சுப தன்மையை அடைய வைத்து அவருக்கு நேரிய நல்ல பலனை தர வைக்கக்கூடிய நிலையை உருவாக்குவார்.


குரு பகவான் ஆனவர் சனி பகவானை சம சப்தமாக பார்க்கும் போதும் மற்றும் குரு பகவான் ஆனவர் சனி பகவான் உடன் எட்டு பாகைக்கு உள்ளாக நெருக்கமாக இணைந்து நிற்கும் போதும் குரு பகவான் ஆனவார் சனியின் பாவ நிலையினை தான் எடுத்துக் கொண்டு சனி பகவானை சுப நிலையினை அடைய வைப்பார்.இந்த நிலையில் சனி பகவான் ஆனவர் சுப தன்மையை அடைந்து விடுவார்.குரு பார்வை செய்த சனி பகவான் பார்க்கும் மற்றும் சேர்ந்த கிரகங்களுக்கு நல்ல பலனைத் தராவிட்டாலும் கெடு பலனை தரமாட்டார்.


குரு பகவான் சந்திரன் உடன் சேரும்பொழுது குரு சந்திர யோகத்தையும் மற்றும் குருபகவான் செவ்வாயுடன் சேரும்பொழுது 

குரு மங்கள யோகத்தையும் தருவார்.

சந்திர கேந்திரத்தில் குரு பகவான் நிற்பது கஜ-கேசரி யோகம் ஆகும்.


 கஜ கேசரி யோகம் என்பது எதிரியை வெல்வார் என்று பொருள். இதிலிருந்து சாதகருக்கு எதிரி இருப்பார் என்ற உண்மை புலனாகிறது.


குரு பகவான் பார்வை பெற்ற புதன் பகவான் வித்தையில் சாதுரியத்தை உடையவராக திகழ்வார். கற்ற வித்தையை நேரிய வழியில் பயன்படுத்துவார் .கணிப்பொறி கணித அறிவு மிக்கவராக திகழ்வார்.


 தேவகுருவான குரு பகவான் மற்றும் அசுரகுருவான சுக்கிரனும் இணைந்து இருப்பதும் மற்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும் கொண்ட அமைப்பு ஒருவருக்கு இருப்பின் குரு தசை சுக்கிர புத்தி மற்றும் சுக்கிர தசையில் குரு புத்தி வரும் காலங்களில் தாம்பத்திய சுகத்தை தடைபட செய்யும் நிலை உருவாகும்.


சனி பகவான் பார்வை செய்த குரு பகவான் தனது சுய தன்மையை இழந்து பாவ தன்மையை அடைவார்.சனி பகவான் பார்வையை பெற்ற குரு பகவான் பங்கமடைந்த குரு பகவான் ஆவார்.


  குரு பகவானுடன் சனி மற்றும் ராகு நெருக்கமாக 8 பாகுக்குள் இணையும் பொழுது குரு சண்டாள யோகத்தை தருகிறார் .இந்த முறையில் குரு பகவான் பலவீனம் அடைகிறார்.


குருபகவான் சூரியனுடன் இணையும் போது அல்லது குருவும் ,சூரியனும் பார்த்துக் கொள்ளும் அமைப்பு 

சிவ ராஜ யோகம் என்று போற்றப்படுகிறது. குருபகவான் பார்த்த சூரியன் ஆட்சி அதிகாரத்தில் உயரிய இடத்தில் அல்லது ஆன்மீகத்தில் உயரிய ஸ்தானதங அமர வைக்கிறது.


  குரு பகவான் சிம்மம் வீட்டையும்,

 அந்த வீட்டின் அதிபதி சூரியனையும் பார்த்த சாதக அமைப்பை பெற்றவர்கள் அரசாங்கத்தின் உயரிய பதவிகளில் அதற்குரிய தசை வரும் காலங்களில் அமர்வார்.


 குருபகவான் கேதுடன் இணைந்து இருப்பது கேள யோகம் ஆகும் .இது ஒரு விதமான கோடீஸ்வர யோகம் என்று அழைக்கப்படுகிறது.


குரு பகவான் சனி மற்றும் கேதுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் அல்லது சனி பகவான் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு பெற்று நிற்கின்ற அமைப்பில் குரு பார்வை செய்த அமைப்பைப் பெற்றவர்களும் ஆன்மீகத் தேடல் மிக்கவராக இருப்பார்கள்.


 குரு பகவான் பார்வையை பெற்ற எந்த கிரகமும் எந்த ஸ்தானத்தில் அல்லது எந்த நிலையில் இருந்தாலும் அந்த கிரகம் சுப நிலை அடைந்து அதன் தசைகளில் நல்ல பலனை தரும்.


 குரு பகவான் சுப நிலை அடைந்து ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள ஆசிரியர் தொழில் புரிவார்.


 குரு பகவான் நீதி வழங்குபவர் ஆவார்.நீதி துறை மற்றும் நிதி துறை போன்றவற்றில் வேலை பார்க்க வைப்பார்.


குரு பகவான் பிரசாங்கம்,மேடை பேச்சாளர்,தத்துவ விசாரணை புரிபவர் ஆவார்.மொத்தத்தில் white colour job ஐ தருபவர் ஆவார்.


குரு பகவான் லக்கனத்தில் இருக்கும் போது திக் பலம் போன்ற அமைப்பை பெறுகிறார்.ஏழாம் இடத்தில் நிஷ் பலம்‌பெறுகிறார்.


குரு பகவான் உயிர் காரணியான புத்திர பாக்கியத்திற்கு காரகன் ஆவார்.ஜட காரணியான தனம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு காரகன் ஆவார்.


ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் வலுப்பெற்று நின்று தன-பாக்கிய -லாப அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று குரு பகவான் பார்வை பெற்று 2,9,11 ஆகியவற்றில் ஏதாவது ஒரு தசை நடக்கும் போது ஜாதகர் மிகுந்த தன யோகம் பெற்றவராக திகழ்வார்.


குரு பகவான் லக்கனத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள ஜாதகர் நல்ல உள்ளம் படைத்தவராகவும், நேர்மையான எண்ணம் கொண்டவராகவும், பிறரை வஞ்சித்து ஏமாற்றி பிழைக்கத் தெரியாதவராகவும் மற்றும் அதே நேரத்தில் அநியாயத்துக்கு ஏமாளி ஆகவும் தோன்றுவார்.


  குரு பகவான் இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ள கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும், நல்ல கல்வி கேள்விகள் வல்லவராகவும் திகழ்வார் . குடும்ப வாழ்வில் சிறப்பாக செயல்படுவார் . நேரிய வழியில் தனம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்.


குரு பகவான் மூன்றாம் இடத்துடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள கீர்த்தி புகழுடையவராகவும், இளைய சகோதரத்தால் ஆதரவு பெற்றவராகவும், வீரிய மிக்கவராகவும், ஏதாவது ஒரு நல்ல முயற்சியை செய்து அதன் மூலம் முன்னேறுபவராகவும் இருப்பார்.


குரு பகவான் கல்வி ஸ்தானமான நான்காம் இடத்துடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் உடையவராக திகழ்வார்.


குரு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள நல்ல புத்திரபாக்கியம் உடையவனாகவும், புத்திரத்தால் பலன் தரக்கூடியவனாகவும், பூர்வ புண்ணிய சொத்துகளால் ஆதாயம் பெற்றவனாகவும், பூர்வீகத்தில் நல்ல பெயர் உடையதாகவும் மற்றும் நல்ல சான்றோர் ஆகவும் திகழ்வான்.


குரு பகவான் ஆறாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கடன், பிணி எதிர்ப்புகள் இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும்.


குருபகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்துடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள மனைவி மூலம் ஆதாயம் உடையவராகவும், நல்ல மதியுக மந்திரியாக மனைவி திகழ்வார். மனைவி மூலம் நல்ல காம இன்பத்தை அனுபவிக்க கூடிய தகுதி படைத்தவளாகவும் இருப்பார்.மனைவியால் புகழ் அடைபவனாகவும் திகழ்வார்.


எட்டாம் இடத்தை குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள எட்டாம் இடம் சுபத்துவமாகி வெளிநாடு சென்று பொருளீட்டக்கூடிய தன்மை படைத்தவளாகவும் மற்றும் நீடித்த ஆயுளை உடையவனாகவும் திகழ்வான்.மறைபொருள் உண்மைகளை அறியக் கூடியவராக இருப்பார்.


குரு பகவான் ஒன்பதாம் இடத்துடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள நல்ல மேல்நிலைக் கல்வி படைத்தவளாகவும் , தான தர்ம குணம் படைத்தவனாகவும் ,தந்தை மூலம் ஆதரவு பெற்றவனாகவும் விளங்குவார்.

புகழுடைய தந்தையாக இருப்பார். தர்ம சத்திரங்கள் வைத்து நடத்துபவராகவும் இருப்பான்.


குரு பகவான் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள போதகராக பிறருக்கு எடுத்து உரைக்கும் ஆசிரியராக ,வழிகாட்டியாக திகழ்வார். மற்றவர் போற்றும் படியான தொழில் புரிந்து அதன் மூலம் பொருள் ஈட்டுவார்.


லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் குரு பகவான் தொடர்பு கொள்ள மூத்த சகோதரத்தால் ஆதரவும் மற்றும் தாம் மேற்கொண்ட தொழில் மூலம் நல்ல லாபத்தை அடைபவனாகவும் திகழ்வார்.


குரு பகவான் 12ஆம் இடத்துடன் பார்வை மற்றும் சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சாதகர் அந்நிய தேசம் சென்று பொருளீட்டும் யோகம் உண்டாகும்.. நல்லா படியாக சம்பாதித்து நன்றாக செலவழிக்க கூடியவராக விளங்குவார்.சுப விரயம் செய்பவராக விளங்குவார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Astro Ravichandran Sevvai

No comments: