Tuesday, 10 October 2023

செவ்வாய் பகவான் புதிய பார்வை

 செவ்வாய் பகவான் புதிய பார்வை




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   செவ்வாய் பகவான் பாவ கிரகங்களில் சனி பகவானுக்கு அடுத்து முக்கால் பாலர் என்று அழைக்கப்படுகிறது.


    செவ்வாய் பகவான் முக்கால் பாவர் என்றாலே கால் பங்கு நல்ல பலனைத் தரும் என்று அர்த்தம்.


  சனி பகவானை போல பார்வை செய்யும் அல்லது சேர்க்கை செய்யும் கிரகங்கள் அனைத்தையும் கெடுதலை தந்து விடுவதில்லை.செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான சூரியன், சந்திரன் மற்றும் குரு பகவான் ஆகியவற்றுடன் சேர்க்கை அல்லது பார்வை செய்யும் கிரகங்களை செவ்வாய் பகவான் பாவத்துவ நிலைக்கு உட்படுவதில்லை.


 செவ்வாய் உடன்  புதன்,சனி மற்றும் ராகு சேர்க்கை பெற்ற நிலையில் கூடுதலான பாவ நிலையை அடைகிறது. புதன்-செவ்-சனி-ராகு ஆகிய நான்கு கிரகங்களும் எந்த ஸ்தானத்தில் நின்றாலும் அல்லது பார்வை செய்தாலும் இருக்கும் அல்லது பார்க்கும் இடங்களை கடுமையான பாதிப்புக்கு உட்படுத்தி விடுகிறது.இந்த நான்கு கிரகங்களுக்கும் சுபர் பார்வை பெறாத நிலையில் கடுமையான இன்னல்களை அதன் தசையில் கொடுக்கிறது.


செவ்வாய் பகவான் ஆனவர்  குரு  பகவான் உடன் இணையும் போது குரு மங்கள யோகத்தை தருகிறது.

செவ்வாய் பகவான் ஆனவர் சந்திரன் உடன் இணையும் பொழுது சசி மங்கள யோகத்தையும் மற்றும் சுக்கிரன் உடன் செவ்வாய் பகவான் பிருகு மங்கள யோகத்தை தருகிறது.


செவ்வாய் பகவான் ஆனவர் கேது பகவான் உடன் இணையும் போது சூட்சும வலுவை பெறுகிறார்.


இந்த சேர்க்கை குறிப்பாக காம திரிகோண ஸ்தானமான  3,7,12  ஆம் இடங்களில் 

இடம் பெறும் போது ஜாதகர் மாறுபட்ட காம எண்ணம் உடையவராக இருப்பார்.


 செவ்வாய் பகவான் தனது ஏழாவது பார்வையை தவிர நான்கு மற்றும் எட்டாம்  இட  சிறப்பு பார்வையை கொண்டுள்ளது.


 செவ்வாய் பகவான் திருமண ஸ்தானமான லக்னம் என்னும் ஒன்றாம் இடம்,  குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் எனும் எட்டாமிடம் ஆகிய இடங்களில் செவ்வாய் இடம் பெறுவதோ அல்லது இந்த ஸ்தானங்களை செவ்வாய் பார்வை செய்வது அல்லது இந்த ஸ்தான அதிபதிகளை செவ்வாய் பார்ப்பது அல்லது சேர்க்கை பெறுவது  அல்லது களத்திரக்காரர்கள் சுக்கிரன் உடன் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பதும் திருமண தடையை உருவாக்குகிறது.


  செவ்வாய் பகவான் லக்னத்திற்கு அல்லது ராசிக்கு அல்லது சுக்கிர பகவானுக்கு 2,4,7,8,12 ஆம் இடத்தில் நிற்பது செவ்வாய் தோஷம் என அழைக்கப்படுகிறது.


செவ்வாய் தோஷம் என்பது உயிரைக் கொல்லும் அளவிற்கு பயப்பட வேண்டிய தோஷமில்லை குறிப்பாக செவ்வாய்  1,2,7,8 ஆம் இடத்தில் நிற்பது கால தாமத திருமணத்தை  கொடுக்கிறது.


 லக்கனத்தில் இருக்கும் போது களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தையும் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்வை செய்கிறது.ஏழாம் இடத்தில் நிற்பது லக்கனத்தையும் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும் பார்வை செய்து திருமண தடையை உண்டாக்குகிறது.


 செவ்வாய் பகவான் பார்வை அல்லது சேர்க்கை தரும் கெடு பலனை அல்லது தடையை இயற்கை சுப கிரகமான குரு  அல்லது வளர்பிறை சந்திரன் உடைய பார்வை அல்லது சேர்க்கை தடுத்து சுபத்துவ நிலையினை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


 செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை சுபத்துவ நிலையில் ஒரு ஸ்தானத்தில் இருந்தால் நல்ல பலனைத் தருகிறது.அதே நேரத்தில் சனி அல்லது ராகு தொடர்பு பாவத்துவ நிலையினை ஜாதகரை கெட்ட வழியில் தடம் மாறி செல்ல வைத்து விடுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 

மற்றொரு செல்

  740 2570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: