Tuesday, 10 October 2023

ஜாதகத்தில் ஒருவருக்கு யோகம் தரும் காலம்

 ஜாதகத்தில் ஒருவருக்கு யோகம் தரும் காலம்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் யோகம் தரும் காலத்தை கணிப்பது  என்பது  மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஒருவருக்கு யோகம் தரும் காலத்தை கணித்து தெரிந்து கொண்டால் அது ஜாதகருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.


  ஒருவர் யோகம் தரும் காலத்தை கணித்து தெரிந்து கொண்டால் அந்த யோகமான தருணங்களில் செய்யப்படும் எதுவுமே மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் லாபகரமாகவும் இருக்கும் உதவிகரமாக இருக்கும்.


‌ யோகம் மற்றும் அவ யோகம் தரும் பாவகங்களை சரியாக கணித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


 உங்கள் ஜாதகத்தில் யோகம் தரும் அமைப்பானது உங்களது லக்கனத்தை பொறுத்து மாறுபடக்கூடிய ஒன்றாக உள்ளது.


      லக்கனம், கேந்திர ஸ்தானம் மற்றும் திரிகோண ஸ்தானம் ஆகிய மூன்று நிலைகளில் உள்ள ஸ்தானங்களையும் மற்றும் அதன் அதிபதிகள் ஆகியவற்றை நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலனிற்கு ஏற்றார் போல் ஆராய்ந்து பார்ப்பதன்  மூலம் ஒருவருக்கு யோகம் தரும் காலத்தை நிர்ணயிக்க இயலும்.அதேபோல மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதி தசை மற்றும் லக்கன அவயோகத்தை தரும் கிரகங்களின் தசை காலங்களிலும் மற்றும் கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களிலும் அவ யோகத்தை அனுபவிக்க கூடிய காலமாகவே இருக்கும்.


சில நேரங்களில் விதிவிலக்காக லக்கன அவ யோகத்தை தரும் கிரக தசைகள் மற்றும் பாவ கிரகங்கள் தசை கூட சில நேரங்களில் நல்ல பலனைத் தந்து விடுவதும் மற்றும் லக்கன யோக தசைகள் சில நேரங்களில் கடுமையான கஷ்டங்களை தந்து விடுவதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் சுப தன்மையை அடைய வைப்பது அல்லது பாவ தன்மையை அடைய வைப்பது ஆகிய இரண்டில் ஒன்றே காரணமாக இருக்கும்.


நீங்கள் குரு அணியை சேர்ந்த நபராக இருந்தால் மேஷம், விருச்சிகம் தனுசு மீனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு பகவான் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்று இருப்பின் அவை பிறப்பிலிருந்து யோகம் தரும் அமைப்பு ஆகும்.


நீங்கள் சுக்கிரன் அணியை சேர்ந்த நபராக இருந்தால் ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்கனங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சனி மற்றும் புதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்கள் மிகுந்த யோகத்தை அனுபவிக்கும் தருணமாக கருதப்படுகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் யோகம் தரும் காலத்தில் யோகத்தை முழுமையாக அனுபவிக்க லக்கனாதிபதியின் வலிமை மிகவும் அவசியமான ஒன்றாகும். ‍ராசி நாதனும் வலிமை பெற்று இருந்தால் மிகவும் நல்லது ஆகும்.


சில நேரங்களில் எதிர் அணியை சேர்ந்த கிரக தசைகளும் யோகத்தை தர அந்த கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடத்தில் நட்பு நிலையில் அல்லது இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை போன்ற நிலைகளில் தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.


மேற்கண்ட அமைப்பை தவிர தன மற்றும் லாப ஸ்தானம் ஆகிய இரு அமைப்பையும் கவனிக்க வேண்டும்.

இந்த இரு அமைப்புகளின் தசைகளும் வருமான யோகத்தை தரும் அமைப்பாக கருதப்படுகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன் , திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   

   


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்

No comments: