Wednesday, 11 October 2023

குரு பகவான்

 குரு பகவான்




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதக பலன் எடுப்பதில் மிகவும் அவசியமாக பார்க்க வேண்டிய கிரகம் குரு பகவான் ஆகும்.குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்க்கும் இடத்தையும் கவனிக்காமல் ஜாதக பலன் சொல்லிவிட முடியாது. 


   ‌ குரு பகவான் இருக்கும் இடத்தையும் மற்றும் பார்க்கும் இடத்தையும் சுப தன்மை அடைய வைக்கிறது. சில நேரங்களில் இருக்கும் இடத்தை விட பார்வை செய்யும் இடத்தை அதிக சுபத்துவ படுத்துகிறது.


    கிரகங்களில் குரு பகவான்  மட்டுமே திரிகோண ஸ்தானங்களுடன் தனது பார்வையின் மூலம்  தொடர்பு கொள்ள கூடிய ஒரே  ஒரு கிரகம் ஆகும். குரு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடம் , ஏழாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடத்தையும் பார்வை செய்கிறது.


   குரு பகவான் எந்த கிரகத்துடன் சேர்ந்து நின்றாலும் அந்த கிரகத்தை அதிக சுப தன்மை அடைய செய்கிறது.


     ஒரு கிரகமானது சனி , செவ்வாய், ராகு  போன்ற  பாவ கிரகங்கள் உடன் சேர்ந்து ‌பாவ தன்மை அடைந்த கிரகமாக இருந்தாலும் சரி,அவ யோகத்தை தரும் கிரகமாக இருந்தாலும் அல்லது அஸ்தங்கம் அடைந்த கிரகமாக இருந்தாலும் குரு  பகவான் பார்வை பட்டால்  அந்த கிரகம் தான் இழந்த வலுவை மீண்டும் பெற்று சுப தன்மையை அடைந்து அதன் தசை அல்லது புத்தியில் நல்ல பலனைத் தரும் அமைப்பை பெறுகிறது.


  குரு பகவான் தான் ஒருவருக்கு பணம்,பதவி, பட்டம், புகழ்,கல்வி,ஞானம்,செல்வம், குழந்தை பாக்கியம் அனைத்தையும் ஜாதகருக்கு வாரி வழங்ககூடியவர் ஆவார்.


 குரு பகவான் தன காரகன் மற்றும் புத்திர காரகன் ஆவார்.குரு பகவான் ஜாதக கட்டத்தில் தனம் ஸ்தானமான இரண்டாம் இடம்,பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகியவற்றிற்கு காரகன் ஆவார்.


  குரு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கும் காரகன் ஆவார்.ஒருவர் பிள்ளைகளால் சுகம் மற்றும் பெருமை பெறுவாரா ?  என்பதை புத்திர காரகன் குரு பகவானை கொண்டு அறியலாம்.


குரு பகவான் பார்வை செய்த ஸ்தானமாக இருந்தாலும் அல்லது குரு பகவான் பார்வை செய்த கிரகமாக இருந்தாலும் அதன் தசை யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 குரு பகவான் உடன் சனி அல்லது ராகு இணைந்து 8 பாகைக்குள்ளாக இருந்தால் குரு பகவான் பாவ தன்மையை அடைந்து விடுவார்.அதாவது குரு சண்டாள யோகத்தை தருகிறார்.இது  ஒரு அவ யோகத்தை தரும் அமைப்பு ஆகும்.


 குரு பகவானின் நட்பு கிரகம் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகும்.

சூரியன் பகவான் குரு பகவான் உடன் இணையும் போது சிவராஜ யோகத்தை தருகிறார்.சந்திரன் உடன் இணையும் போது குரு சந்திர யோகத்தையும் மற்றும் செவ்வாய் பகவான் உடன் இணையும் போது குரு மங்கள யோகத்தையும் தருகிறார்.


 குரு பகவான் ஆனவர் சனி பகவான் உடன் சம தன்மையை அடைகிறார்.புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் குரு பகவானுக்கு எதிர் தன்மை வாய்ந்த கிரகம் ஆகும்.


 குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு வாசம் செய்வார்.சூரியன் பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் குரு பகவான் வரும் போது வக்கிரம் அடைந்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.


 வக்கிரம் என்பது இயல்புக்கு மாறான நிலையை குறிக்கிறது.உச்ச வக்கிரம் நீச நிலைக்கு சமமான பலனையும் மற்றும் நீச வக்கிரம் உச்சம் நிலைக்கு சமமான பலனையும் தருகிறார்.ஏனைய வக்கிரங்களை பற்றி கவலைபட தேவையில்லை.


குரு பகவான் லக்கனத்தில் திக் பலத்தை அடைகிறார்.ஏழாம் இடத்தில் தனது திக் பலத்தை இழந்து நிஷ் பலம் பெறுகிறார்.

குரு பகவான் லக்கனத்திற்கு மறைவு ஸ்தானமான பன்னிரெண்டாம் இடத்தில் நின்றால் திக் பலத்திற்கு அருகில் என்ற வகையில் பலம் பெற்று விடுவார்.


குரு பகவான் ஆனவார் சூரியன் பகவானை 11 பாகை அளவில் நெருங்கும் போது அஸ்தமனம் அடைகிறார்.


   குரு பகவான் சனி அல்லது ராகு போன்ற பாவ கிரகங்கள் உடன் இணையும் அமைப்பில் குரு பகவான் தான் பாவ தன்மையை அடைந்து தன்னுடன் இணைந்த கிரகங்கள் சுபத்துவம் அடைய வைத்து விடுகிறது..


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         


அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.




No comments: