ஜாதகரை படம் பிடித்து காட்டும் ஜாதகம்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
"தனி மரம் தோப்பு ஆகாது ". எனவே ஒருவர் ஜாதகத்தில் ஒரு பலன் சொல்வதற்கு தனிப்பட்ட ஒரு ஸ்தானத்தையோ அல்லது தனிப்பட்ட ஒரு கிரகத்தையினையோ மட்டும் கொண்டு துல்லியமான ஜாதக பலனை பெற இயலாது.
உதாரணமாக லக்கனத்தில் சுக்கிரன் இருந்தால், இரண்டாம் இடத்தில் குரு இருந்தால் இது போன்ற வகைகளில் ஒற்றை வரியில் ஜாதக பலனை தந்து விட முடியாது.ஒரு குறிப்பிட்ட பலன் அளிப்பதற்கு எண்ணற்ற ஸ்தான பலம் , கிரக சேர்க்கை,திக் பலம் மற்றும் பார்வை ,வீடு கொடுத்தவன் வலு,பாவத் பாவகம் மற்றும் அம்சத்தில் கிரக நிலை இது போன்ற பல்வேறு விஷயங்களை ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்குள் அலசி ஆராய்ந்து பலன் அளிக்க வேண்டி இருக்கிறது.
பலன் அளிப்பதற்கு என்று பல தரப்பட்ட ஜோதிட விதிகள் பலவற்றை தெரிந்து கொண்டு அந்த ஜோதிட விதிகளுக்கு அப்பாற்பட்ட ஜோதிட விதி விலக்குகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் எப்படி இருக்க விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கிரக சேர்க்கைகள் , வீடு கொடுத்தவன் வலு மற்றும் பார்வை ஆகியவை ஜெனன காலத்தில் எவ்விதம் அமைந்து இருக்கிறது என்பதை கொண்டே முடிவு செய்யப்படுகிறது.
ஜாதகரது வாழ்க்கை பாதையை தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
ஜாதகரின் மன நிலையை அறிந்து கொள்ள சந்திரனை பார்க்க வேண்டும்.சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து அல்லது நீசம் பெற்று சனி , ராகு மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் தாக்குதல் ஒட்டு மொத்தமாக இருப்பின் ஜாதகர் மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருப்பார்.சனி அல்லது செவ்வாய் அல்லது ராகு தசையே நடப்பில் இருப்பின் பிரச்சினையின் வீரியம் அதிகமாக இருக்கும்.
ஜாதகரின் தன்னம்பிக்கை அளவீட்டை லக்கனம்,லக்கனாதிபதி மற்றும் லக்கின காரகன் சூரியன் பகவான் ஆகியோரின் துணை கொண்டு கணக்கிடப்படுகிறது.
பொதுவாக மனிதனின் வாழ்க்கை தரம் மற்றும் குணநலன்களை முடிவு செய்வது தசாபுத்தி மற்றும் கோச்சார பலன்கள் ஆகும்.இவை தவிர ஒரு தசை முழு யோகத்தை தர வேண்டுமாயின் நடப்பு தசை இயற்கை சுப கிரக சேர்க்கைகள் பெற்று இருக்க வேண்டும்.நடப்பு தசை மிகுந்த பாதிப்பை தர சனி , செவ்வாய் மற்றும் ராகு ஆகியோரரது முக்கூட்டு கிரகங்கள் தாக்குதல் காரணமாக அமைகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ராசி கட்டத்தை நடக்கும் தசா புக்தி மற்றும் கோச்சார பலன்கள் உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நீங்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விடும்.
சில நேரங்களில் ராசி கட்டத்தில் பலம் மற்றும் பாவத்துவம் அடைந்த கிரகங்கள் அம்சத்தில் சுப மனை ஏறி நின்றால் நல்ல பலனைத் தரும் அமைப்பை பெறுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் சுப தன்மை அடைந்து உள்ளது.அதேபோல எந்த ஸ்தானம் மற்றும் கிரகம் பாவ தன்மை அடைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.தற்போது தசை நடத்தும் கிரகம் எப்படி உள்ளது என்பதையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டு பலன் அளிக்க வேண்டும்.
சனி பகவான் ஒரு ஸ்தானத்தில் அமரும் போது அவை இருக்கும் வீட்டையும் மற்றும் தன்னுடன் சேர்த்து உள்ள கிரகத்தையும் பாகை அடிப்படையில் பாவ தன்மையை அடைய வைக்கிறது.அதே போல பார்வை செய்யும் ஸ்தானம் மற்றும் கிரகம் ஆகிய இரண்டையும் பாவ தன்மையை அடைய வைக்கிறது.அதே நேரத்தில் இயற்கை சுப கிரக தொடர்பை பெற்ற சனி பகவான் நல்லதை செய்ய இயலாவிட்டாலும் கெடுதலை செய்ய மாட்டார்.
இதேபோல செவ்வாய் பகவான் தான் இருக்கும் மற்றும் பார்வை செய்யும் இடங்களையும் பாவ தன்மையை அடைய வைக்கிறது.
செவ்வாய் பகவான் தனது நட்பு கிரகமான குரு, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் உடன் செவ்வாய் பகவான் சேர்க்கை மற்றும் பார்வை செய்தால் கெட்ட பலனை தந்து விடுவதில்லை.செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகு உடன் இணையும் போது கூடுதலான கெடு பலனை இருக்கும் மற்றும் பார்வை செய்யும் இடத்திற்கு செய்கிறது.
வளர்பிறை சந்திரன் எந்த இடத்தில் இருந்தாலும் சாதகருக்கு நல்ல பலனை தருகிறது .இவை தனது ஆறு , ஏழு மற்றும் எட்டாம் பார்வையால் இயற்கை சுப கிரகமான சுக்கிரன் , புதன் மற்றும் குரு ஆக இருந்தால் சுப தன்மையை அடைய வைத்து சந்த்ராதி யோகத்தை தருகிறது.
அதே நேரத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்தால் அந்த சந்திர பகவான் இருக்கும் இடத்தையும் தனுடன் சேர்ந்த கிரகங்களையும் பாவ நிலை அடைய வைக்கிறது தேய்பிறை சந்திரனுக்கு 6 7 8 ல் உள்ள இயற்கை சுப கிரகங்களை சுப தன்மை யை அடைய வைப்பதில்லை.
இயற்கை சுப கிரகமான குரு பகவான் இருக்கும் மற்றும் பார்வை செய்யும் ஸ்தானம் மற்றும் கிரகத்தையும் சுப தன்மையை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
இதேபோல தனித்த புதன், சுக்கிரன் இருக்கும் மற்றும் சேரும் கிரகத்தையும் சுப தன்மை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
சூரியன் பகவான் அரை பாவர் ஆகும்.சூரியன் பகவான் உடன் சனி அல்லது ராகு இணையும் போது அல்லது சனி பார்வை பெறும் பொழுது அது தன் முழு பலத்தையும் இழக்கிறது.
சூரியன் பகவான் உடன் கிரகமான சுக்கிரன், புதன்,குரு மற்றும் செவ்வாய் நெருக்கமாக இணையும் போது அந்த கிரகங்கள் குறிப்பிட்ட பாகை அடிப்படையில் அஸ்தங்கம் அடைந்து தன் பலத்தை இழக்கிறது.ஆனால் சூரியன் பகவான் முழு பலம் பெறுகிறது.தன்னால் அஸ்தமனம் ஆன கிரக ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை தனது தசையில் ஜாதகருக்கு கொடுக்கிறது.
இவ்வாறு அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் இழந்த வலுவை ஸ்தான பலம் அல்லது சுப கிரக பார்வை பெறும் பொழுது இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.
சூரியன் உடன் நிழல் கிரகமான ராகு அமாவாசை நேரத்தில் இணையும் போது சூரிய கிரகணத்தையும் மற்றும் பொளர்ணமி காலங்களில் இணையும் போது சந்திர கிரகணத்தையும் தருகிறது.
இதனால் சூரிய மற்றும் சந்திர ஒளியை ஒளி மறைப்பு செய்து புவியியல் விழ விடாமல் செய்து விடுகிறது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & வாட்ஸ் அப்
097151 89647
மற்றொரு செல் 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M
.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment