ஒருவர் நன்கு கல்வி பயில...
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க நவ கிரகங்களில்
குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் மிக முக்கியமான கிரகமாக திகழ்கிறது.
ஒருவர் கல்வி பயில அவரது ஜாதகத்தில் லக்கனாதிபதியே மிக முக்கியமான கிரகம் ஆகும்.மேலும் லக்கனத்தின் வலிமையை பொருத்தும் ஒருவருடைய கல்வி நிலை அமைகிறது.
கல்வி ஸ்தானமான இரண்டாம் இடம், ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் ஆகிய ஸ்தானங்களும் மிக முக்கியமான இ ஸ்தானம் ஆகும்.இந்த ஸ்தானங்களுடன் குரு மற்றும் புதன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் உரிய அல்லது யோக தசை நடப்பில் இருப்பின் இவர்கள் நன்றாக படிக்க கூடியவர்களாக விளங்குவார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் தன ,புத்தி மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதிகள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டுள்ள நிலையில் குரு பகவான் எவ்விதத்திலும் பலம் இழக்காமல் பார்க்கின்ற அமைப்பை பெற்ற ஜாதகர் நன்றாக கல்வி பயிலும் யோகம் உடையவராக இருப்பார்.
ஒருவர் எந்த லக்கனத்தில் பிறந்திருந்தாலும் அந்த லக்கனத்திற்கு உரிய யோக தசைக்கு உரிய கிரகம் பலவீனப்படாமல் கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்களின் (குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன்) தொடர்பை பெற்ற நிலையில் அந்த யோகம் தரும் தசைகள் படிக்கும் காலத்தில் வருகின்ற அமைப்பை பெற்றவர்கள் நன்றாக புரிந்து படிக்க கூடிய மாணவராக விளங்குவார்கள்.
ஒருவர் கல்வி பயில கூடிய இளவயதில் கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி போன்றவை நடப்பில் இருப்பின் அந்த கால கட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் படிப்பில் சற்று கவனக்குறைவு ஏற்படும்.
ஒருவருக்கு ஷஷ்டாஷ்டம என்று அழைக்கப்படும் அவயோக ஆறு மற்றும் எட்டுக்கு உடைய தசைகள் படிக்க கூடிய காலகட்டத்தில் வந்தால் தசையின் வலிமையை பொறுத்து பாதிப்பை மாணவர்களுக்கு கொடுக்கும்.
அதன் பிறகு ஒருவர் எதை விரும்பி படிப்பார் என்பதை லக்கனம் மற்றும் லக்கனாதிபதியை பொறுத்து ஒப்பிட்டு பார்த்து எந்த கிரகம் அவரது ஜாதகத்தில் அதிக சுபத்துவ நிலையில் இருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த எண்ணமும் மற்றும் செயலும் உருவாகி அந்த துறையில் சிறந்து விளங்கிய நிலையில் இருப்பார்.
ஒரு கிரகத்தை குரு பகவான் பார்த்து , வளர்பிறைச் சந்திரனும் பார்வை செய்து சுக்கிரன் மற்றும் புதன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அவை பத்தாம் இடத்தில் இருந்தாலும் அல்லது பார்வை செய்தாலும் அல்லது பத்தாம் ஆதிபத்தியம் உடையதாக இருந்தாலும் அந்த கிரகம் சார்ந்த துறையை தேர்வு செய்து படித்து அந்த துறையில் தலைசிறந்த நிபுணத்துவம் வாய்ந்தவராக திகழ்வார்.
நன்றி
வாட்ஸ் அப் &செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
Astro Ravichandran Sevvai
((தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M..SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், #ஓம்சக்திஆன்லைன்ஜோதிடஆலோசனைமையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment