ஜோதிட விதிகளும், விதிவிலக்குகள்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
முகநூலில் எழுதப்படும் எந்த ஒரு ஜோதிட விதிகளும் பொதுப்பலன் ஆகும். இவ்வாறு சோதிடர்களால் தரப்படும் போது பலனை படிக்கக்கூடிய ஆரம்ப சோதிடர்கள் அந்த ஒவ்வொரு விதியையும் தன்னுடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம் அவ்வாறு ஒப்பிட்டு பார்த்து தானாகவே ஒருசில முடிவுகளை எடுத்து விடக்கூடாது.
அதில் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. விதிகளை மட்டும் தெரிந்த உங்களுக்கு விதிவிலக்குகள் தெரியாததால் பொது விதியை அப்படியே உங்களது ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பார்த்து மனக்கஷ்டம் கொள்வதோ அல்லது பிறரை மனக் கஷ்டத்திற்கும் உட்படுத்துவதும் கூடாது.
மனதை கஷ்டப்படுத்தும் ஒரு சில ஜோதிட விதிகளை தந்து விதிவிலக்குகளையும் தக்க உதாரணம் மூலம் விளக்கலாம் என உள்ளேன்.
பொது விதி
ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளால் ஒருசில ஆடவர அல்லது பெண்டிர் தனது காம எண்ணம் மிகுதியால் இடம் மாறி, தடம் மாறி பல மலரில் தேன் எடுக்கும் வண்டினைப்போல மாற்றான் வீட்டு மஞ்சத்தில் பங்கு கொள்ளும் நபராக கிரக பலனால் மாறிவிடும் அபாயகரம் உள்ளது.
களத்திரகாரகன் சுக்கிரனுடன் அல்லது காமகாரகன் செவ்வாயுடன் சனி ,ராகு போன்ற கிரகங்கள் சேர்ந்து இருப்பது அல்லது சுக்கிரன் +செவ்வாய் சேர்ந்திருப்பது போன்றவை .
மேற்கண்ட விதிகளை எடுத்துக்கொண்டு ஜாதகத்தை ஆராயும் பொழுது அதனை அப்படியே Apply செய்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தந்து விடுவதில்லை.
இது போன்ற கிரக அமைப்புகள் உள்ள சாதகங்களை பார்க்கும் போது அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க நேரிட வாய்ப்புண்டு என்பதால் கீழ்க்கண்ட உதாரண ஜாதகம் மூலம் விளக்குகிறேன்.
கீழ்க்கண்ட இரண்டு உதாரண ஜாதகங்களில் முதல் ஜாதகத்தில்
(சிம்மம் லக்னம், துலாம் ராசி)
செவ்வாயும், சனியும் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இணைந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குருவின் ஐந்தாவது பார்வை அந்த இடத்திற்கு வருவதாலும் மேலும் வாக்கு ஸ்தானத்தில் சேரக்கூடிய செவ்வாய், சனி ஒருவருக்கு காம எண்ணத்தை மிகுதி படுத்தாது என்பதாலும்,
மனநிலை காரகன் சந்திரன் எவ்விதத்திலும் கெடாமல் இருப்பதாலும்
மேற்கூறிய வகையில் கூறப்பட்ட பொதுவிதி இந்த ஜாதகருக்கு செயல்படவில்லை.
ஆனால் அதே நேரத்தில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சாதகத்தை எடுத்து கொண்டு பார்க்கும்போது
(கன்னி லக்கினம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம்)
இந்த ஜாதகத்தில் அயன, சயன மற்றும் படுக்கை சுகத்தை தரக்கூடிய பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன்+ செவ்வாய் சேர்ந்திருப்பதுடன் இயற்கை சுப கிரகத்தின் பார்வை படாத நிலையிலும்,
இவை மட்டுமல்லாமல் காம காரகன் செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக சனியைப் பார்ப்பதாலும், சனி பகவான் லக்கனத்திற்கு வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் காமகாரகன் செவ்வாய் பகவான் வீட்டில் இருந்து பத்தாம் பார்வையாக அயன, சயன மற்றும் படுக்கை சுகம் தரக்கூடிய சுக்கிரன்+ செவ்வாய் உடன் தொடர்பு கொள்ளவும்,
மேற்கண்ட அமைப்புடன் மனநிலை காரகன் சந்திரனுடன் கேது மற்றும் ராகு தொடர்பு கொண்டு இருப்பதாலும்
இதுபோன்ற மேற்கண்ட பல காரணங்கள் இருப்பதால் மேற்கண்ட அமைப்புடைய சாதகர் தனது கணவனை விட்டு பிரிந்து வேறு சில ஆடவருடன் தவறான தொடர்பு கொள்ள நேர்ந்தது.
ஆதலால் ஒரு சாதகத்தில் பொதுவான விதியை எடுத்துக் கொண்டு ஒரே கோணத்தில் பலன் பார்த்தால் பலனில் தவறிவிட வாய்ப்பு உண்டு.இரண்டு காதலர் தினம் பொதுவான விதி இருந்தாலும் ஏனைய சிறப்பு விதிகளில் பலன்களில் மாறுபட்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email: masterastroravi@gmail.com
....
No comments:
Post a Comment