கேந்திராதிபத்திய தோஷம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"நிசகேந்தி ராதிபதி நீதிசுப ரானால்
அசுபபல னேகொடுப்ப ரல்லால்-இசைகேந்
கிரபதிகள் பாவிகளாய்ச் சேரில் சுபங்கள்
பரவிநற் பலன்கொடுப்பர் பார் "
-சந்திர காவியம்
ஒரு ஜாதகத்தில் சுபர்,பாவர் என்பது இயற்கை சுபரையும், இயற்கை பாவரையும் குறிக்கும்.
குரு பகவான், வளர்பிறை சந்திரன், சுக்கிர பகவான், பாவியோடு சேராத புதன் பகவான் ஆகியோர் இயற்கை சுபர் ஆவார்.
சூரியன் ,செவ்வாய் ,சனி ராகு மற்றும் கேது இயற்கை பாவர் ஆவார்.
1,4,7,10 என்பது கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும்.இந்த கேந்திரங்களுக்கு அதிபதிகள் சுபகிரகங்களாக இருந்து கேந்திரத்தில் நிற்பின் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை கொடுக்கிறது.
நான்கு கேந்திர ஸ்தானங்களுக்கு ஒன்றாம் இடமான லக்கணம் கேந்திரம் மற்றும் கோணத்திற்கு பொதுவாக இருப்பதால் ஏனைய நான்கு ,ஏழு மற்றும் பத்தாம் (4,7,10) இடங்களில் சுபகிரகங்கள் நிற்கும்பொழுது மட்டுமே கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுக்கிறது.
இதில் கேந்திராதிபத்திய தோஷம் அதிகமாக தரக்கூடிய கிரகங்கள் குருபகவானும், புதன் பகவானும் ஆகும்.
உபய ராசிகளான மிதுனம் மற்றும் தனுசு ஆகிய இரு ராசிகளுக்கும் குரு பகவான் ஏழு மற்றும் பத்து ஆகிய இரு கேந்திரத்திற்கு அதிபதியாக வரும், இதேபோல மீனம் மற்றும் கன்னி ஆகிய இரு ராசிகளுக்கும் நான்கு மற்றும் ஏழு என்ற இரு கேந்திரங்களுக்கே அதிபதியாக வருவதால் புதனும் குருபகவானும் கேந்திராதிபத்திய தோஷத்தை அதிகம் தரக்கூடிய கிரகங்கள் ஆகும்.
சுக்கிரபகவானை எடுத்து கொண்டால் இரண்டு ஆதிபத்தியங்களில் ஏதாவது ஒரு ஆதிபத்தியம் மட்டுமே கேந்திர அதிபதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.
எனவே அந்த வகையில் சுக்கிர பகவான் அதிக கேந்திராதிபத்திய தோஷத்தை தருவதில்லை. உதாரணமாக மேஷ ராசி என எடுத்துக்கொண்டால் சுக்கிர பகவான் இரண்டு மற்றும் ஏழாம் இடத்திற்க்கு அதிபதியாக வரும். இதில் ஒன்று மட்டுமே கேந்திர ஸ்தானம் என்பதால் அதிக கேந்திராதிபத்திய தோஷம் தந்துவிடவில்லை.
சந்திர பகவானுக்கு கடக ராசி ஒரே ஸ்தான ஆதிபத்தியம் கொண்டுள்ளது. மேஷ ராசிக்கு நான்காம் இட அதிபதியாகவும், மகர ராசிக்கு ஏழாம் இடம் அதிபதியாகவும், மற்றும் துலா ராசிக்கு 10-ஆம் இட அதிபதியாகவும் சந்திரன் பகவான் வந்து கேந்திரங்களில் நிற்கும் பொழுது அவை கேந்திராதிபத்திய தோஷத்தை அதிகம் தந்து விடுவதில்லை. இந்த ராசிகளுக்கு சந்திர பகவான் அது திசை காலங்களில் நற்பலன்களைத் தருகிறார். எனவே கேந்திராதிபத்திய தோஷம் என்ற பட்டியலில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
கேந்திராதிபத்திய தோஷம் நீங்க குருவும் புதனும் இயற்கை பாவிகளான செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் சேர்த்து இருக்கும்போதும் அல்லது கோண அதிபதிகள் உடன் இணைந்து இருக்கும் போதும் கேந்திர ஆதிபத்திய தோஷம் குறைய வாய்ப்பு உண்டு.
சில சமயம் சில அபூர்வ கிரக சேர்க்கை அமைப்புகளாலும், ஸ்தான அமைப்புகளாலும் கேந்திராதிபத்திய தோஷ கிரகங்கள் கூட யோக பலன்களை செய்து விடக்கூடும்.
அதனால் பலன் கணிக்கும்போது எல்லாவற்றையும் அலசிப் பார்ப்பதே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் .
பாவ கிரகங்கள் கேந்திர அதிபதியாக வரும் பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை தராமல் அதன் திசைகளில் நற்பலன்களை தரும் என்பது பொதுவான விதியாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் .
ஆனால் அதை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நற்பலனைத் தருமா ? தீய பலனை தருமா ? என்பதை ஆராய்ந்து செய்யப்பட வேண்டும்.
உதாரணமாக ரிஷப லக்கினத்திற்கு செவ்வாய் 7 மற்றும் 12-க்குடையவர் என்பதால் ஏழாமிடம் கேந்திர ஸ்தானம் என்ற வகையில் பாவக்கிரகம் இடம்பெறுவது நற்பலனைத் தரும் என்றாலும் அதே செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால் முழுக்க முழுக்க நல்ல பலனை மட்டும் தரும் என்பதை சொல்லிவிட முடியாது.
ஒருசமயம் செவ்வாய் பகவான் கேந்திராதிபத்தியத்துடன், திரிகோண ஆதிபத்தியமும் பெற்றிருப்பாரானால் மிகவும் மேன்மையான பலன்களை தருவார் என்று சிறப்பு விதி சொல்லப்படுகிறது.
இப்படி அமைவது கடக மற்றும் சிம்ம லக்கனங்களுக்கு மட்டுமே அமையலாம். கடக லக்கினத்திற்கு ஐந்தாம் இடமாகிய திரிகோண அதிபதி மற்றும் பத்தாம் இடமாகிய கேந்திர ஆதிபத்தியமும்,
மேலும் செவ்வாய் சிம்ம லக்கினத்திற்கு கேந்திராதிபத்தியமான நான்காம் இடமும், திரிகோண ஆதிபத்தியமான ஒன்பதாம் இடத்தினையும் பெறுகிறார்.
செவ்வாய் மட்டுமல்ல சனிபகவானும் இவ்வாறு ஒருசேர கேந்திரம் மற்றும் திரிகோண அமைப்பை பெறும்பொழுது யோகாதிபதி ஆகிறார்.
ரிஷப லக்னத்திற்கு சனி பகவான் 9-ஆம் இடம் ஆகிய திரிகோண ஸ்தானம் மற்றும் பத்தாமிடம் ஆகிய கேந்திர பலம் பெறுகிறார். அதேபோல துலா லக்னத்திற்கு சனி பகவான் கேந்திர ஸ்தானமான 4-ஆம் இடமும் மற்றும் திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடம் பெறுகிறார்.
மேற்சொன்னபடி கடக மற்றும் சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் பகவானும், ரிஷப மற்றும் துலா லக்னத்திற்கு சனி பகவானும் பலம் பெற்று நல்ல நிலையில் அமர்ந்து இருப்பார்களானால் அந்த லக்கனத்திற்கு உரிய சாதகர்களுக்கு மிக உயர்வான வாழ்க்கை எப்படியும் அமைந்து விடும் என்பதை எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715199647
7403570899
அன்புடன்
ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி.
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail
com
..........
No comments:
Post a Comment