Sunday, 5 April 2020

போக வாழ்வா ? ஞான வாழ்வா ?

போக வாழ்வா ?  ஞான வாழ்வா ?

                         


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒரு மனிதன் தன் வாழ்வில் அவன் விரும்பியபடி வாழ்வு அமையாவிட்டால் "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்ற கதையாக இல்லற வாழ்விலிருந்து விடுபட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்று இல்லறத்தில் மறு முனையான துறவறத்தை நோக்கி மனம் செல்கிறது.


  இல்லறத்தில் அவன் எப்படியெல்லாம் அதிக ஆசைப்பட்டு அடைய நினைத்தானோ அது கிடைக்காத போது அதை போக்க துறவறத்தில் ஈடுபட்டு உடனே ஞானம் பெற வேண்டும் என அதிக வருத்தி கொண்டால் ஞானநிலையை அடைய முடியாது.


 அவனது முயற்சியின் நிலைதான் மாறியுள்ளது.

முயற்சிக்கும் முறை ஒரே மாதிரியாகதான் உள்ளது. ஒரு வீணையின்  கம்பி ரொம்ப முறுக்காக இருந்தாலும் அல்லது இலகுவாக இருந்தாலும் அதிலிருந்து இசையை மீட்ட முடியாது அதேபோல மனித மனதினை ரொம்ப முருக்காககவும் அல்லது இலகுவாகவும் வைத்திருந்தாலும் ஞான நிலையை அடைய முடியாது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையே ஞானத்தை அடைய வழி யாகும் என்பது ஓசோவின் கருத்தாகும்.

 இந்த இரண்டு நிலை தான் நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் ஆகும்.


ஒன்று அதிக சுகபோகங்களை தரும் போக காரகன் என்று அழைக்கப்படும் ராகு பகவான், மற்றொன்று வாழ்வின் ஞானத்தை அளிக்கக் கூடிய கேது பகவான் ஆகும்.


 வாழ்வின் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கக்கூடிய யோகத்தை தரக்கூடிய நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்கு அடுத்து ராகு பகவானாவார். இவர் மனம் போன போக்கில் தம் வாழ்வை நகர்த்தி பிறகு தொல்லைகளுக்கு ஆட்படுபவர் ஆவார்.


  வாழ்வின் நிதர்சனங்களை உணர்ந்துகொண்டு ஆடம்பர வாழ்வு நோக்கி தன் வாழ்வினை நகர்த்தாமல் மனம் போன போக்கில் மனிதன் போகாமல் மனதை தனது ஆளுகைக்கு உட்படுத்தி பேரின்ப வாழ்வை அனுபவிக்கக்கூடிய யோகத்தைத் தருபவர் குருபகவானுக்கு அடுத்தபடியாக கேது பகவானாவார்.


  அளவுக்கதிகமான பொருளீட்டல், மட்டற்ற மகிழ்ச்சி நாடல் மற்றும் தேவைக்கு மீறிய பேச்சு  போன்றவற்றில் நாட்டம் தருபவர் ராகு பகவான் ஆவார்.


  வெறும் பேச்சினை கவனிக்காமல் தனது மூச்சினை கவனிக்க வைப்பவர் கேது பகவான் ஆவார்.


ராகுபகவான் ஒருவரை பித்தராக ஆக்கிறார் .கேது பகவான் ஒருவரை சித்தராக மாற்றுகிறார்.


ராகு பகவான் எந்த கிரகங்கள் உடன் இணைந்தாலும் , அக்கிரகத்தின் வலிமையினை இழக்க வைப்பதோடு அதன் இயல்பு நிலையினையும் திரிபு அடைய செய்கிறார்.


 கேது பகவான்  எந்த கிரகத்துடன்  இணைந்தாலும் அக்கிரகத்தின் வலிமையை கூட்டுவதோடு ,அந்த கிரக  இயல்பினை உயர்வடையச் செய்கிறார்.


  ராகு பகவான் எந்த ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு உரிய பாவக பலன்களை கெடுப்பதுடன் அந்த ஸ்தான வலிமையினை பலமிழக்க செய்வார்.


ஆனால் கேது பகவான் எந்த ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு உரிய பாவக பலன்களை அதிகரிக்க செய்வதுடன்‌ , அந்த ஸ்தான வலிமையினை கூட்டி தருவார்.


 லக்கனத்தில் இடம்பெற்ற ராகு பகவான் லக்கனத்தினை பலமிழக்க செய்வதுடன் , திருமண வாழ்வினை தடைபடுத்தும் களத்திர தோஷத்தை சாதகருக்கு தருவார்.உடலமைப்பில் மெல்லிய தேகத்தினை தருவார்.


 ஆனால் லக்கனத்தில் இடம்பெற்ற கேது பகவான் லக்கனத்தினை பலப்படுத்துவார்.

சாதகருக்கு முன்னுணர்வு தன்மையினை தருவார்.

 இரண்டாம் இடத்தில் இடம்பெற்ற ராகுபகவான் கபட தன்மையையும், பேச்சாற்றலையும் தருவார்.குடும்ப வாழ்விலும்,தன் அமைப்பிலும் பாதிப்பினை உருவாக்குவார்.


    இரண்டாமிடத்தில் இடம் பெற்ற கேது பகவான் வாக்கு வன்மையும், வாக்கு பலிதம் தருவார்.அருள் வாக்கு சோதிடராக திகழ வைப்பார்.


மூன்றாமிடத்தில் இடம்பெற்ற ராகுபகவான் சகோதர தடையையும், சகோதர தோஷத்தையும் தருவார். ஆனால் அதே நேரத்தில் மூன்றாம் இடத்தில் இடம்பெற்ற கேது பகவான் பெண் சகோதரத்தினை தருவார்.


நான்காமிட ராகு பகவான் தன் சுகத்தையும், தாய் சுகம், கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம் மற்றும் வீடு கட்டும் அமைப்பு போன்றவற்றில் தடையை  உருவாக்குவார்.ஆனால் நான்காம் இட கேது பகவான் மேற்கண்ட  பாவக செயல்களில் ராகு பகவான் அளவிற்கு கேது பகவான் பாதிப்பினை தரமாட்டார்.


 ஐந்தாமிடம் ராகு பகவான் புத்திர தோஷத்தையும் பூர்வபுண்ணியத்தில்  வாசிக்க இயலாத நிலையையும் தருவார்.அம்மான் வர்க்கத்திற்கு பாதிப்பினை உண்டாக்குவார்.


 ஆனால் ஐந்தாம் இட கேது பகவான் ஆன்மீக எண்ணத்தையும், கடவுள் பக்தியும் தருவார்.


 ஆறாம் இடத்தில் இடம் பெற்ற ராகு பகவான் எதிரி கண்டாலே பயப்படக்கூடிய வல்லமை மிக்கவராகவும் ,எடுத்த காரியங்கள் ஜெயம் அடையக்கூடியவராகவும் திகழ்வார்.ஆறாமிட கேது பகவான் போன் நிலையினை தருவார்.


 ஏழாம் இடத்தில் இடம்பெற்ற ராகு பகவான் மனதுக்கு பிடித்த மனைவி அமைவதில் சிக்கலையும், காலதாமத திருமணத்தையும் ,நட்பில் துரோகங்களையும் உண்டாக்குவார். ஏழாமிட கேது பகவான் ராகு பகவான் அளவிற்கு திருமணத்தடை தரமாட்டார்.


 எட்டாமிட ராகு பகவான் அன்னிய தேசம், அந்நிய நாட்டார் தொடர்பு, அந்நிய மொழியில் பேசுதல் மற்றும் அந்நிய பணவரவு பெறுவர்.

எட்டாம் இட கேது பகவான் சூட்சும உண்மைகளை தருவார்.

 ஒன்பதாம் இடம் ராகு பகவான் தந்தைக்கு சதோஷத்தையும் கஞ்சத்தனம் நிறைந்ததாகவும், தான தர்மம் குணம் அற்றவராகவும் திகழ்வார்.


ஒன்பதாம் இடத்தில் இடம்பெற்ற கேதுபகவான் தான,தர்ம குணம் மிகுந்தவராகவும் , பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் மற்றும் ஆன்மீகத் தன்மை மிகுந்தவராகவும் திகழ்வார


 பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்னும் நியதிப்படி எ பத்தாம் இடத்தில் உள்ள ராகு பகவான் ஷேர் மார்க்கெட், இணையம், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், வெளிநாட்டு பயணம்  மருந்து மருந்து முதலியவற்றால் தொழிலில் பணம் ஈட்டக்கூடிய திறமையுடையவராக திகழ்வார்.


பத்தாம் இடத்தில் கேது பகவான் ஆன்மீக தொடர்புடைய தொழில் புரிபவருகவும்,கோவில் வளாகத்தில் சாமி பூஜைக்கு பயன்படக்கூடிய கடை நடத்த கூடியவராகவும், அருள்வாக்கு சோதிடராக இருப்பார்.


பதினொன்றாம் இட ராகு பகவான் ராகுபகவான் வெளிநாட்டு பயணத்தை தருவார் .அதேபோல பதினோராம் இடம் கேது பகவான் ஆன்மீக யோக பலனை தருவார்.


பன்னிரண்டாம் இட ராகு பகவான் வெளிநாட்டு பயணத்தை தருவார்.அயன,சயன சுகத்தை தடைபடுத்துவார்.  பன்னிரண்டாம் இடத்தில் உள்ள கேது பகவான் முக்நி யோகத்தை தருவார்.


நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்

  9715189647
    செல்
9715189647
 7402570899

                           


      அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
             M.Sc,M.A,BEd
 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பகுடி புதுக்கோட்டை மவட்டம்.

No comments: