Tuesday, 14 April 2020

சூரியன் பகவான் தரும் ஜோதிட உண்மைகள்-(2)

சூரியன் பகவான் தரும் சோதிட உண்மைகள் --( 2 )


                           

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

      ஒரு மனித உடலின் உஷ்ணம் தொடர்பான வியாதிகளுக்கு சூரியன் பகவான் முக்கிய காரணகர்த்தா ஆவார்.உஷ்ணம்  தொடர்பான காய்ச்சல், உடலில் கட்டி,அம்மை ... போன்ற வியாதிகளுக்கும் சூரியன் பகவானே காரணகர்த்தாவாக திகழ்கிறது.

 நவகிரகங்களில் சூரியனே தலைமை கிரகமாக திகழ்வதால் ஒரு மனிதன் தலைமை ஏற்று நடத்தும் திறமை  மனிதனுக்கு தருவதும் சூரிய பகவானின் ஆசியே முக்கியமாகும். வட்டாட்சியர் ,மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் மாநில மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற உயரிய தலைமை பதவிகளுக்கு சூரிய பகவானே காரணமாக அமைகிறது.

   ஒரு மனிதனின் தலை, மூளை, உழைப்பு உற்சாகம் ,உயிர்ப்புடன் திகழ்வது மற்றும் தனித்தன்மையாக திகழ்வது போன்றவற்றிற்கு சூரியன் பங்கு முக்கியமானது.

   சூரியன் ஒளி பிரகாசிக்கும் பகல்  காலத்தில் மனித மூளை சிந்தித்து கொண்டு இருக்கிறது. சூரியன் அஸ்தமன பிறகும் இரவு நேரத்தில் மூளையானது ஓய்வு எடுக்கிறது.

  சூரியன் தனது தனித்துவமான அமைப்பை பெற்றிருப்பது போல  ஒரு மனிதனின்‌ புகழ் , கீர்த்தி மற்றும் அந்தஸ்து போன்றவற்றை பெற சூரிய பகவானின் பலம் அவசியமானது ஆகும்.

  சூரிய பகவான் தலை, முகம், இதயம் ,கண்,
 ரத்த அழுத்தம், காக்காவலிப்பு, மலச்சிக்கல் ,அஜீரணம் , சுத்த இரத்தம் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கு அனைத்திற்கும் காரண கர்த்தாவாக விளங்குபவர் சூரியபகவானே ஆவார்.

 இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் தனது சூரிய வெப்பத்தால் பூமியில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரையெல்லாம் ஆவியாக மாற்றி மேல்நோக்கி  எழும்ப செய்து மேகமாக மாற்றி பிறகு மீண்டும் மழையாக மற்றும் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் வாழ வைக்கும் குணம் உடையது போல பலமான சூரியனைத்  தனது  ஜாதக கட்டத்தில் கொண்டவர்கள் எல்லா உயிர்களையும் தன்னுயிராக கருதும் ஜீவ காருண்யம் மிக்க மனிதர்களாக இப்புவியில் ஜெனிக்கிறார்கள். அருட்பிரகாச வள்ளலார் கூறியது போல" வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று என்று வருந்திய சித்த புருஷர்கள் தோன்றுவதற்கும் சூரிய பகவானின் அருளாசி அவசியம் தேவை.

  மனித உடலில் அனைத்து உறுப்புக்களையும் இணைக்கும் எலும்புக்கு சூரியன் காரணகர்த்தா ஆவார்.

      சூரியன் ஆட்சி மற்றும் மூல திரிகோண வீடு-

              சிம்மம், 

       உச்ச வீடு -மேஷம் 

         நீச வீடு- துலாம்.

    ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்கும் பொழுது சூரியன் தனது காரக மற்றும் ஸ்தான  பலத்தையும் சிறப்பாக தரும்.

  சூரியனுடைய நட்புகிரகம் 
குரு ,சந்திரன் மற்றும் செவ்வாய் 

           ஆதலால் 

இதனுடைய நட்பு ராசிகள்

       தனுசு,மீனம், கடகம் மற்றும் விருச்சிகம் 

சம கிரகம் -புதன்

சம ராசிகள் : மிதுனம் மற்றும் கன்னி

   எனவே சூரிய பகவான் தனக்கு நட்பு கிரகமான குரு ,சந்திரன்  செவ்வாய் மற்றும் புதனுடன்  சேர்ந்து இருப்பது அல்லது நட்பு மற்றும் சம தன்மை கொண்ட கிரகங்களால் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பரிவர்த்தனை பெற்றிருப்பதும் அல்லது அதனுடைய நட்சத்திர சாரம் பெற்று இருப்பது அல்லது அவருடைய நட்பு வீடுகளில் இடம் பெறுவது ஆகிய மேற்கண்ட வகையில் ஏதாவது  ஒரு வகையில் சூரியன் பகவான் ஜாதக கட்டத்தில் நிற்க  ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும்.

 சூரியன் பகை கிரகம்

  சுக்கிரன்,சனி ,ராகு மற்றும் கேது

சூரியன் பகை ராசிகள்

   ரிஷபம்,  மகரம் மற்றும் கும்பம்

   சூரியன் தனது பகை கிரகமான சுக்கிரன் ,சனி, ராகு மற்றும் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் அல்லது பகை கிரகங்களின் பார்வை பெறுவது அல்லது அதன் நட்சத்திர சாரம் பெறுவது அல்லது பகை வீடு மற்றும் நீச வீடுகளில் நிற்பது போன்ற மேற்கூறிய வகைகளில் ஏதேனும் ஓரு வகையில் நிற்பின் சூரியன் தனது காரக மற்றும் ஸ்தான பலத்தையும் இழக்கிறது.

  சூரிய பகவானுடன் அரவுகளான ராகு மற்றும் கேது சேர்க்கை கிரகண தோசத்தை உண்டாக்குகிறது. இதில் சூரியனுடன், ராகு சேர்க்கை மிகுந்த கிரகண தோஷம் தருகிறது. சூரியனுடன், கேது சேர்க்கை ஆன்மீகத்தில் உயர் நிலை அடைய வைக்கிறது.

  
       சூரியன்
ஸ்தலம் -தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோவில்.

 நிறம் சிவப்பு 

தானியம் -கோதுமை

 வாகனம் -ஏழு குதிரை பூட்டிய தேர் 
ராசி கல் -மாணிக்கம்

 கிழமை -ஞாயிறு 

குணம் -தாமசம்

 சுபாவம் -குரூரம்

சுவை- காரம்

 திக்கு -கிழக்கு, மையம்

 தாது -எலும்பு 

நோய் -பித்தம்

 உலோகம்- தாமிரம்

 பஞ்சபூதம்- நெருப்பு 

மலர் -செம்பருத்தி செந்தாமரை

சூரியன் திசை-6

சூரியன் நட்சத்திரம்-

கார்த்திகை உத்திரம், உத்திராடம்

நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
     9715189647

       செல்
  9715189647
     7402570899
                             

அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email
masterastroravi@gmail.com
.....

No comments: