நவ கிரகங்களும் அதன் பரிகார பலன்களும்,
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதகத்தில் நற்பலன்கள் நடக்க வேண்டுமாயின் அந்த ஜாதக கட்டத்தில் எந்த கிரகம் பலம் இழந்து உள்ளது ? என்பதை கண்டறிந்து அந்த கிரகத்தை பலப்படுத்த வேண்டும்.
அவ்வாறு பலப்படுத்த அந்த கிரகத்திற்குரிய ஸ்தலம் சென்று அந்த கிரகத்திற்கு உரிய கிழமைகளில் வழிபாடு செய்வதன் மூலமாகவும், அந்த கிரகத்திற்குரிய நிற ஆடைகளை அணிவது மூலமும்,அந்த கிரகத்திற்கு உரிய தானியங்களை உணவாக பயன்படுத்துவதன் மூலமாகவும் அல்லது அந்த கிரகத்துக்குரிய தானியத்தை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலமாகவோ அல்லது அந்த கிரகத்திற்குரிய ராசிக்கல்லை நமது மோதிரத்தில் அணிந்து கொள்வதன் மூலமாகவும், அந்த கிரகத்துக்குரிய கிழமைகளில் வழிபாடு நடத்துவது மூலமாகவோ பலமிழந்த அந்த கிரகத்தை பலப்படுத்தி அந்த கிரக திசை ஜாதகருக்கு நன்மை பயக்கும் வகையில் செய்யலாம்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பலம் இழந்த நிலையில் அதன் தசை மற்றும் புத்தி நடப்பில் இருப்பின் ஞாயிறன்று தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும்.
சிவப்பு நிறம் ஆடைகளை அணிந்து கொள்வதன் மூலமாகவும், நம்மைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களையும் சிவப்பு நிறமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
செம்பருத்தி, கோதுமை,சோளம், சிவப்பு அரிசி, குங்குமப்பூ ,மிளகு இஞ்சி, ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்றவற்றை உண்ண சூரியனால் ஏற்படக்கூடிய உஷ்ணங்களும், மன அழுத்தமும் போக்க அதற்குரிய தானியத்தை உணவாக அதிகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .
பொதுவாக சூரியன் பகவானின் முக்கிய தானியமான கோதுமையை தானம் செய்யுங்கள் அல்லது உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.வேலை தேடுபவர்கள் ,பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணுபவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறை தொழில் செய்பவர்கள் இவர்கள் கோதுமை தானம் செய்யலாம்.
மேற்கண்ட உணவு தானியங்களை அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்துவதன் மூலம் சூரியனால் உண்டாகக்கூடிய காக்காய் வலிப்பும், பெரியம்மை ,கக்குவான், பித்தம் ,வாதம் ,மூளை, இரத்த ஓட்ட பாதிப்பு, பூச்சிக்கடி ,குதிகால் வலி, ஆஸ்துமா மற்றும் சளி போன்ற உஷ்ணத்தால் உண்டாகும் வியாதிகளை போக்குவதாக தாவரவியல் மருத்துவம் கூறுகிறது .
சூரியனுக்குரிய ருத்ராட்சம் மரம் செம்பருத்தி, செந்தாமரை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் சூரியனால் உண்டாகும் பாதிப்பிலிருந்து விலகலாம்.
நாம் அணிந்துகொள்ளும் மோதிரத்தில்
மாணிக்கக் கல்லை வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிகாலை கிழக்குப் பக்கமாக உட்கார்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தாலும் சூரியனால் தரக்கூடிய பாதிப்பை தவிர்க்கலாம்.
தினந்தோறும் ஞாயிறன்று சிவன் கோயில் சென்று கிழக்கு பக்கமாக அமர்ந்து சிவனை வழிபடவும், ஆதித்திய ஹிருதயம் மந்திரம் சொல்லவும் சூரியபகவான் தரும் பாதிப்புகளிலிருந்து விளக்கப்படுகிறது.
சந்திர பகவான்
ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பகவான் பலம் இழந்து அதன் தசை நடப்பில் உள்ள காலங்களில் திங்கள் கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் சென்று சந்திர பகவானே வழிபட வேண்டும்.
எப்பொழுதும் வெண்ணிற ஆடைகளை அணியுங்கள். தங்களைச் சுற்றியுள்ள முக்கியமான சில பொருட்கள் மீது வெண்மையான நிறமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சந்திரனுக்குரிய தானியம் நெல் ஆகும்.கதை கவிதை கட்டுரை எழுதி புகழ் பெற நினைப்பவர்கள், இலக்கியம் படைப்பவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் வைத்து நடத்துபவர்கள், வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள், அடிக்கடி பணியிடமாற்றம் அடைவபர்கள், உணவகம் வைத்து நடத்துபவர்கள், பால் வியாபாரம், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற வியாபார மேற்கொள்பவர்கள் கடற்கரையோரங்களில் வேலை செய்பவர்கள், இறால், நண்டு மற்றும்மீன் வளர்ப்பவர்கள், முத்து குளிப்பார்கள்,பெயிண்ட் ,சாயம் தொழில் செய்பவர்கள், கூல்டிரிங்ஸ் மற்றும் வாட்டர் சப்ளை செய்பவர்கள் போன்றவர்கள் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் மேற்கண்ட வியாபாரம் சிறப்பாக அமைய
பச்சரிசி தானமாக செய்யுங்கள்.
கோவில்களில் பச்சரிசி பொங்கல் இடுங்கள், அன்னதானம் இடுங்கள்.
சந்திர பகவான் ஜல கிரகம் என்பதால் பொது இடங்களிலும் கோவில் திருவிழாக்களிலும் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து தானம் செய்யுங்கள்.
வெள்ளரி மலரால் அர்ச்சனை செய்யுங்கள்.ஈயத்தால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பொருளை அணிந்து கொள்ளுங்கள்.
மோதிரத்தில் முத்து ரத்தினம் கல்லை அணியுங்கள். வெள்ளைக்குதிரைக்கு ஏதாவது ஒரு பச்சிலையை தானமாக செய்யவும்.
சந்திரனுக்கு உரிய காயத்திரி மந்திரத்தை தினந்தோறும் அதிகாலை உச்சாடனம் செய்தல்.
நன்றி
அடுத்த பதிவில் இதர கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களை பார்க்கலாம்.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment