Monday, 20 April 2020

எந்த கிரக திசை எந்த ராசிக்கு யோக பலனை தருவார்?

எந்த கிரக திசை எந்த ராசிக்கு யோக பலனை தருவார்?


                             

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   ஒரு மனித வாழ்வை வழிநடத்திச் செல்வது கிரகங்கள்தான் என்றாலும் ,எந்த கிரகமானது எந்த ராசிக்கு எந்த இடங்களில் அமரும் போது யோக பலன்களை தருவார் என்பது பற்றியும்,

 கிரகங்கள் வழி நடத்தி செல்லும் திசை அமைப்பு பற்றியும் ஆராய்ந்து அறிவதே இப்பதிவின் நோக்கமாகும்.

     ஒருவருக்கு நடக்கும் திசை என்று கூறுவதைவிட தசை என்று கூறுவது தான் சாலச்சிறந்தது.
சமஸ்கிருதத்தில் தசா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் திசை என்பதே ஆகும்.

    ஒருவருக்கு எந்த திசை யோகத்தை தரும் ? என அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டால் அந்த திசை காலங்களில் புதிய முயற்சியை அல்லது புதிய வியாபாரத்தை தொடங்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.

  ஒரு சாதக கட்டத்தில்‌ கிரகங்கள் பலமடைந்த அமைப்பில் இருந்தாலும் அவரது நடப்பில் இருக்கும்
 தசையானது யோக திசையாக அமையாத பட்சத்தில் என்னதான் அந்த கிரகங்கள் பலம் அடைந்து இருந்தாலும் அந்த பலமடைந்துள்ள அந்த கிரக அமைப்புகளால் சாதகருக்கு எவ்வித பலனும் ஏற்படுவதிவில்லை.

                        


 கிராமங்களில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. "ஒதிய மரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது." என்பார்கள்.
அதுபோல சாதக கட்டத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர மற்றும் கோணாதிபதிகள்  பலம் பெற்றிருந்தாலும் அந்த தசையானது வாழ்வில் நடப்பில் வரவில்லையெனில் கிரகங்கள் பலம் பெற்று இருந்தும் பயனில்லாமல் போய் விடுகிறது.

  பொதுவாக ஒரு திசையானது யோக பலனை தர வேண்டும் எனில் அது லக்னாதிபதிக்கு நட்பாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்.மேலும் நடப்பில் இருக்கும் தசை இலக்கனம் அல்லது லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கு கேந்திர மற்றும் கோணங்களில் அமைந்து லக்கனாதிபதிக்கு நட்பாக இருக்கும் கிரகங்களின் திசையானது யோக பலன்களை சாதகருக்கு வாரி வழங்குகிறது.

 ஒரு தசை நடப்பில் இருக்கும் பொழுது அந்த தசாநாதன் ஜாதகத்தில் லக்கனம் அடிப்படையில் அது பலமடைந்து உள்ளதா? என்பதைக் காணவேண்டும். இலக்கன அடிப்படையில் நடப்பில் இருக்கும் தசை பலம் இழந்த அமைப்பு பெரும் பொழுதோ அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகளான ஆறு மற்றும் எட்டுக்கு உடையவர்களாகவோ வரும்பொழுது  அந்த திசை முற்றிலும் யோக பலனை தராது என்று முடிவுக்கு வர முடியாது. அந்த நிலையில் இலக்கனம் மற்றும் ராசியை வெவ்வேறாக கொண்டவர்கள் ராசி அடிப்படையில் அந்த கிரகம் சுப அல்லது அசுப ஸ்தானங்களில் உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

 இரண்டு நிலையிலும் அந்த கிரகம் கெட்ட ஸ்தான அமைப்பை பெரும் பொழுது அது யோக பலனை தருவதில்லை.

                    


  ராசி மற்றும் லக்கனம் ஆகிய இருவேறு நிலையில் கவனிக்க வேண்டும் .இரண்டு நிலைகளிலும் நல்ல ஸ்தான அமைப்பைப் பெற்றிருக்கும் பொழுது அந்தத் தசை கொடிகட்டி பறக்கும் நல்ல யோகத்தை தரும் அமைப்பை சாதகருக்கு உருவாக்கும்.

 ஒரு ஜாதகருக்கு யோக பலனை அள்ளித் தரக்கூடிய தசை என்று வைத்துக்கொண்டால் முதன்மையானவர் 1,5,9 எனப்படும் கோண அதிபதிகள் ஆவர். கோனாதிபதிகளுக்கு அடுத்தபடியாக யோக பலன்களை தருபவர் யார்?  என வினா எழுப்பினால் கேந்திர அதிபதிகள் ஆகும்.

  பொதுவாக ஒரு ஜாதகத்திற்கு கேந்திர ஸ்தானமான 1, 4 ,7 ,10 ஆம் இடங்களுக்குச் இயற்கை சுபர் அதிபதிகளாக வருகின்ற பட்சத்தில் அக்கிரகமானது  "கேந்திராதிபத்திய தோஷத்தை அடையும் என்ற வகையில் சுபர்கள் கேந்திரங்களில் அமராமல் இருப்பது நல்லது.

  கேந்திராதிபதிகள்  இயற்கை சுப கிரகங்களாக வரும்பொழுது கோணங்களிலோ அல்லது மறைவிடங்களிலும் அமர்வது நல்லது . இவ்வாறு அமர்ந்து அதன் தசை நடக்கும் பொழுது கேந்திராதிபதிகள் யோக பலனை தருகிறது.இதேபோல பாவக்கிரகங்கள் கேந்திரங்களில் இருந்து அதன் தசை நடக்கும் போது மட்டுமே யோக பலனை தருகிறது.

  கேந்திரம் மற்றும் கோண அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு அதன் திசை நடக்கும் பொழுது மிகுந்த யோக பலனை சாதகனுக்கு தருகிறது.

   கோணம் மற்றும் கேந்திர ஸ்தான திசையாக இருப்பதால் மட்டும் அது யோக பலனை தந்து விடும் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.

                     


     ஒரு ஜாதகருக்கு பெரும்பாலும் ஆறு  மற்றும் எட்டு போன்ற மறைவிட ஸ்தான அதிபதிகளின் தசை நடக்கும் போது அந்த ஜாதகருக்கு யோக பலனை தந்து விடுவதில்லை.

   அதே நேரத்தில் இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று இருக்கும்பொழுது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் விபரீத ராஜயோக பலன் தந்து விடுகிறது.

    சில நேரங்களில் கோணம் மற்றும் கேந்திராதிபதியாகவே இருந்தாலும் அவை பகை, நீசம், அஸ்தமனம் மற்றும் மறைவிடங்களில் சென்று இருந்தாலும் அல்லது பகைக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு போன்றவற்றின் தொடர்பு இருந்தாலும் அந்த தசை நடப்பில் இருக்கும் போது யோக பலனை மட்டுப்படுத்துகிறது.

   ஒரே இலக்கனம் மற்றும் ராசியை கொண்டவர்களுக்கு கீழ்க்கண்ட தசை நடப்பில் இருக்கும் காலங்களில் யோக பலனை தந்து விடுவதில்லை மாறாக அத்திசை காலத்தில் சாதகருக்கு இன்னல்கள் பலவற்றை அனுபவித்து விடுகிறார்கள்.

 மேஷ ராசிக்கு 6-க்குடைய புதன் திசை 
.
ரிஷப ராசிக்கு 8-க்குடைய குரு தசை

 மிதுன ராசிக்கு 6-க்குடைய செவ்வாய் திசை 

கடக ராசிக்கு 8-க்குடைய சனி திசை 

சிம்ம ராசிக்கு 6-க்குடைய சனி திசை 

கன்னி ராசிக்கு 8-க்குடைய செவ்வாய் திசை 

துலாம் ராசிக்கு 6-க்குடைய குரு தசை

 விருச்சக ராசிக்கு எட்டுக்குடைய புதன் திசை

 தனுசு ராசிக்கு ஆறுக்குடைய சுக்கிரதிசை 

மகர ராசிக்கு 8-க்குடைய சூரியதிசை,

கும்ப ராசிக்கு 6-க்குடைய சந்திர தசை 

மீன ராசிக்கு 8-க்குடைய சுக்கிர தசை மற்றும் ஆறுக்குடைய சூரிய திசை.

                      


  ஒரு சில நேரங்களில் மேற்கண்ட தசைகள் கெடுபலனை தராமல் இருக்க வேண்டுமெனில் அந்த தசாநாதன் நீசம், அஸ்தமனம் மற்றும் மறைவிடங்களுக்கு செல்லுதல் மூலமாகவும் அல்லது இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை பெறுவதும் மூலமாகவும் அத்திசை காலங்களில் ஒரு சிலருக்கு இன்னல்கள் குறைந்து யோக பலனை தந்து விடுவதும் உண்டு.

     பொதுவாக 12 ராசிகளுக்கும் எந்த தசை யோகங்களை தரும் என்று ஆய்வு மேற்கொள்ளும் பொழுது சாதக கட்டத்தில்  இரண்டு வகையான அணிகளை(Team)  ஜோதிட ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 அதில் ஒன்று அருள் அணி என்று சொல்லக்கூடிய குருபகவானை தலைமையாகக் கொண்டு செயல்படக்கூடிய அணியும் மற்றொன்று பொருள் அணி என்று சொல்லக்கூடிய சுக்கிரனை தலைமையாகக் கொண்டு செயல்படக்கூடிய அணியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

   அருள் அணி

   குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது.

 பொருள் அணி

 சுக்கிரன்,சனி, புதன் மற்றும் ராகு

  இலக்கனம் மற்றும் ராசியை ஒரே மாதிரியாக கொண்டவர்களுக்கு கீழ்க்கண்ட தசைகள் யோகப் பலனைத் தருகிறது.

  மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் போன்ற ராசிகளுக்கு குரு, சந்திரன், செவ்வாய் மற்றும் கேது போன்ற கிரகங்களின் திசைகள் யோக பலன்களை அளிக்கிறது.

    மேற்கண்ட  திசைகள் யோக பலனை தர வேண்டுமாயின் மேற்கண்ட கிரகங்கள் மறைவிடங்களுக்கு செல்லாமலோ அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் தொடர்பு அல்லது சனி ,செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்களுடன் தொடர்பும் பெறாமல் இருக்க வேண்டும்.

                          


    இந்த ராசிகளுக்கு சுக்கிரன்,சனி,புதன் மற்றும் ராகு போன்ற கிரகங்களின் திசைகள் யோக பலன்களை தருவதில்லை.இது போன்ற கிரகங்கள் கோண மற்றும் கேந்திரங்களில் இடம்பெறாமல் உப ஜெய ஸ்தானங்களில் நட்பு நிலையில் இடம் பெற கெடு பலன்களை அதிகம் தருவதில்லை.

  இதேபோல ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு சுக்கிரன்,சனி, புதன் மற்றும் ராகு திசைகள் யோக பலனை தருகிறது.

இதுபோன்ற ராசிகளுக்கு குரு ,சந்திரன் ,செவ்வாய் சூரியன் மற்றும் கேது தசைகள் யோக பலனை தருவதில்லை.

இக்கிரங்கள் உபய ஸ்தானமான 3 ,6, 10, 11 ஆம் இடங்களில்  நட்பு நிலையில் நிற்கின்றபோது இன்னல்களை அதிகமாக தருவதில்லை.

 யோகம் தரும் ஒரு கிரகம் இரு ஆதிபத்தியம் பெறும் பொழுது ஒன்று கேந்திரம் அல்லது கோணமாக இருந்து மற்றொன்று  மறைவிட ஸ்தானமான இருக்கின்ற பொழுது அந்தத் திசையில் பாதி ஆண்டுகள் கற்பனையும் பாதி ஆண்டுகள் ஆதிபத்திய பாவ பலனையும் தருகிறது.
இதில் பொதுவாக இயற்கை பாவர்கள் கேந்திரங்களிலும் , இயற்கை சுபர்கள் கோணங்களிலும் இடம் பெறும் பொழுது யோகப் பலனைத் தருகிறது.

 உதாரணமாக கடக லக்னத்திற்கு குருபகவான்
 6 மற்றும் 9-க்குடையவர் என்றவகையில் குருபகவான் அவர் ஆறாம் இடமான தனுசு ராசி இடம் பெறாமல் ஒன்பதாம் இடமான மீன ராசியில் இருக்கும்போது மிகுந்த யோகத்தை தருவார். 

   குரு திசை -16 ஆண்டுகளில் ஒரு எட்டரை ஆண்டுகள் ஆறாம் இட ஆதிபத்தியம் பலனையும் மற்றும்  ஒரு எட்டரை ஆண்டுகள் ஒன்பதாம் இட கோண ஆதிபத்திய பலனையும் தருகிறது.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
    9715189647

       செல்
    9715189647
       7402570899
        
                                 

    அன்புடன் 
சோதிடர் 
சோ.பா. ரவிச்சந்திரன்
   M.Sc,M.A,BEd
( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Email

masterastroravi@gmail.com

My blog
www.AstroRavichandran.blogspot.com

WWW.AstroRavichandransevvai.blogspot.com

................

No comments: