இல்லறம் இனிமையாக ?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"அன்புக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்காத உயிர்கள் உலகத்தில் இல்லை"
"எல்லோருமே தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம்".
யாரும் தன்னை அங்கீகரிக்கமால் இருப்பின் மனம் நொந்து போய் விடுகிறது.
"யாராவது ஒருவர் பாராட்ட மாட்டார்களா? என்று மனது ஏங்குகிறது.
ஒருவர் ஒரு புத்தாடை அணிந்து வெளியே சென்றால் கூட அந்த புத்தாடையை யாராவது ஒருவர் புகழ்ந்து பாராட்டவில்லை எனில் அந்த புத்தாடை அணிந்த மகிழ்வே இல்லாது போய்விடுகிறது.
இல்லற வாழ்விலும் இதே நிலை தான் தொடர்கிறது.
தனது வாழ்க்கை துணைவரிடமும் மனித மனம் சின்ன , சின்ன சினுங்கல்,ஒரு புண்சிரிப்பு மற்றும் பாராட்டுதலுக்கே மனம் ஏங்குகிறது.
ஆனால் இல்லறம் என்பது இருமன சேர்க்கையாகும்.இரண்டு மனமும் ஒன்றுடன் ஒன்று சங்கமித்தபிறகு அவர்களிடம் புரிந்துணரா தன்மை அற்று போய் விடுகிறது.
இந்தக் கருத்தை விளக்கும் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல் அழகாக விளக்குகிறது .
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
பாடல் விளக்கம்:
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர் அல்ல என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும் உறவினர் அல்லர். நானும் நீயும் கூட ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திருக்கவில்லை என்றாலும் நம் நெஞ்சம் செம்புலப் பெயலில் பெய்த நீர்போல ஒன்றாக கலந்து விட்டது.எனவே நான் இனி உன்னை விட்டு பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன் தலைவியை தேற்றுகின்றான்.
இந்த பாடலில் உள்ள கருத்தை தெளிவாக உற்று நோக்கினால் செம்புலம் என்பது நன்றாக செம்மைப்படுத்தி பண்படுத்தப்பட்ட நிலம் என்று பொருள் .
வயலுக்குள் விழுந்த நீரானது அதிலுள்ள வரப்பின் காரணமாக வரப்பைவிட்டு வெளியில் செல்லாமல் மண்ணும் ஈரமுமாக கலந்து விட்டனவாம்.
தலைவன் தலைவியிடம் " வயலில் விழுந்த மழைநீர் வயலில் உள்ள மண்ணின் மணம்,நிறம் மற்றும் சுவையை தானும் பெறுவது போல் உள்ளங்கள் கலந்து விட்டனவாம்.
மனதில் அன்பு இருந்தால் அவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடுகள் இருந்தாலும் ஒருமைப்பாடு நிலவி இல்லறம் நல்லறமாக அமையும்.
ஒருவரது ஜாதக கட்டத்தில் இலக்கனம் எனப்படும் சாதகர் , இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகியவை பலமிழக்காத அமைப்பை பெற்றவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபடும்போது தான் "செம்புலப் பெயல் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே " என கவி பாடலாம்.
இன்றைய நவீன காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக இல்லை அவர்களைவிட அதிகமாக பொருளீட்டும் வாய்ப்பு வந்ததால் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான ஒரு சில வாதத்திற்கே விவகாரத்து வரை சென்று விடுவதை அதிகபட்சமாக பார்க்க நேர்கிறது.
பாரதியார் கண்ட புதுமைப்பெண் வேறு. ஆனால் இன்று நவநாகரீக உலகில் நாம் காணும் புதுமைப்பெண்கள் வேறு.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"
என்று கனவு கண்டார்.
இங்கு அவர் குறிப்பிடும் ஞானச் செருக்கு என்பது
அறிவால் மட்டும் ஆண்களுக்கு பெண்கள் பஞ்சமில்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றார். அதே நேரத்தில் பெண்மைக்குரிய அச்சம், மடம் ,நாணம், பயிர்ப்புடன் செம்மை மாதராக திகழ வேண்டும் என்றார்.
இன்றைய சூழலில் விட்டுக் கொடுத்தல் என்ற இல்லற தாரக மந்திரம் இல்லாமல் போய்விட்டது.
சாதக கட்டத்தில் நான் அடிக்கடி குறிப்பிடப்படும்
1, 2 ,7, 8 ஆகிய இடங்களும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகியவற்றுடன் இயற்கை சுபர் தொடர்பு அற்ற அரவுகளான ராகு, கேது மற்றும் பாவிகளாக சனி, செவ்வாய் சேர்க்கை பார்வை மற்றும் நட்சத்திர சாரம் இல்லற வாழ்வினை துவம்சம் செய்து விடுகிறது.
வான்புகழ் கொண்ட வள்ளுவர்
"ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும் "என்றார்.
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவராவார். அந்த உண்மை ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் நிலையில் காணப்படும்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
-குறள்
இல்வாழ்க்கையில் அன்பும் அறமும் உடையதாக விளங்கினால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
அன்புடைய நெஞ்சமும்,அறன் உடைய இல்வாழ்வழ்வும் அவசியம் ஆகும்.
ஒருவருடைய சாதகத்தில் ஏழாம் அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட மனம் ஒத்த மனைவி வாழ்க்கை துணையாக அமையும்.
இல்லற சுகத்தினை ஒருவர் நன்முறையில் அனுபவிக்க காமகாரக கிரகம் செவ்வாய் பகவானும்,களத்திர காரகன் சுக்கிர பகவானும் பாவிகளால் சூழப்பட்டு பலம் இழக்காமல் இருக்க வேண்டும்.
"அன்புஅகத்து இல்லா இல்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளித் தற்று"
-குறள்
விளக்கம்;
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்து போன்றது.
ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் ,இரண்டாமிடம் ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடம் போன்ற இடங்களில் அரவான ராகு, கேது மற்றும் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் போன்ற பாவிகள் தொடர்பு பெற மேற்கண்ட குறளின்கண் காட்டப்பட்ட இல்லற துணையே வாழ்க்கை துணையாக அமைவார்.விதிப்பயன் என்ன செய்ய.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd,
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterasroravi@gmail.com
..............................................
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"அன்புக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்காத உயிர்கள் உலகத்தில் இல்லை"
"எல்லோருமே தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம்".
யாரும் தன்னை அங்கீகரிக்கமால் இருப்பின் மனம் நொந்து போய் விடுகிறது.
"யாராவது ஒருவர் பாராட்ட மாட்டார்களா? என்று மனது ஏங்குகிறது.
ஒருவர் ஒரு புத்தாடை அணிந்து வெளியே சென்றால் கூட அந்த புத்தாடையை யாராவது ஒருவர் புகழ்ந்து பாராட்டவில்லை எனில் அந்த புத்தாடை அணிந்த மகிழ்வே இல்லாது போய்விடுகிறது.
இல்லற வாழ்விலும் இதே நிலை தான் தொடர்கிறது.
தனது வாழ்க்கை துணைவரிடமும் மனித மனம் சின்ன , சின்ன சினுங்கல்,ஒரு புண்சிரிப்பு மற்றும் பாராட்டுதலுக்கே மனம் ஏங்குகிறது.
ஆனால் இல்லறம் என்பது இருமன சேர்க்கையாகும்.இரண்டு மனமும் ஒன்றுடன் ஒன்று சங்கமித்தபிறகு அவர்களிடம் புரிந்துணரா தன்மை அற்று போய் விடுகிறது.
இந்தக் கருத்தை விளக்கும் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல் அழகாக விளக்குகிறது .
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
பாடல் விளக்கம்:
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர் அல்ல என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும் உறவினர் அல்லர். நானும் நீயும் கூட ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திருக்கவில்லை என்றாலும் நம் நெஞ்சம் செம்புலப் பெயலில் பெய்த நீர்போல ஒன்றாக கலந்து விட்டது.எனவே நான் இனி உன்னை விட்டு பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன் தலைவியை தேற்றுகின்றான்.
இந்த பாடலில் உள்ள கருத்தை தெளிவாக உற்று நோக்கினால் செம்புலம் என்பது நன்றாக செம்மைப்படுத்தி பண்படுத்தப்பட்ட நிலம் என்று பொருள் .
வயலுக்குள் விழுந்த நீரானது அதிலுள்ள வரப்பின் காரணமாக வரப்பைவிட்டு வெளியில் செல்லாமல் மண்ணும் ஈரமுமாக கலந்து விட்டனவாம்.
தலைவன் தலைவியிடம் " வயலில் விழுந்த மழைநீர் வயலில் உள்ள மண்ணின் மணம்,நிறம் மற்றும் சுவையை தானும் பெறுவது போல் உள்ளங்கள் கலந்து விட்டனவாம்.
மனதில் அன்பு இருந்தால் அவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடுகள் இருந்தாலும் ஒருமைப்பாடு நிலவி இல்லறம் நல்லறமாக அமையும்.
ஒருவரது ஜாதக கட்டத்தில் இலக்கனம் எனப்படும் சாதகர் , இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய ஸ்தானங்களும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகியவை பலமிழக்காத அமைப்பை பெற்றவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபடும்போது தான் "செம்புலப் பெயல் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே " என கவி பாடலாம்.
இன்றைய நவீன காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக இல்லை அவர்களைவிட அதிகமாக பொருளீட்டும் வாய்ப்பு வந்ததால் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான ஒரு சில வாதத்திற்கே விவகாரத்து வரை சென்று விடுவதை அதிகபட்சமாக பார்க்க நேர்கிறது.
பாரதியார் கண்ட புதுமைப்பெண் வேறு. ஆனால் இன்று நவநாகரீக உலகில் நாம் காணும் புதுமைப்பெண்கள் வேறு.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"
என்று கனவு கண்டார்.
இங்கு அவர் குறிப்பிடும் ஞானச் செருக்கு என்பது
அறிவால் மட்டும் ஆண்களுக்கு பெண்கள் பஞ்சமில்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றார். அதே நேரத்தில் பெண்மைக்குரிய அச்சம், மடம் ,நாணம், பயிர்ப்புடன் செம்மை மாதராக திகழ வேண்டும் என்றார்.
இன்றைய சூழலில் விட்டுக் கொடுத்தல் என்ற இல்லற தாரக மந்திரம் இல்லாமல் போய்விட்டது.
சாதக கட்டத்தில் நான் அடிக்கடி குறிப்பிடப்படும்
1, 2 ,7, 8 ஆகிய இடங்களும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகியவற்றுடன் இயற்கை சுபர் தொடர்பு அற்ற அரவுகளான ராகு, கேது மற்றும் பாவிகளாக சனி, செவ்வாய் சேர்க்கை பார்வை மற்றும் நட்சத்திர சாரம் இல்லற வாழ்வினை துவம்சம் செய்து விடுகிறது.
வான்புகழ் கொண்ட வள்ளுவர்
"ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும் "என்றார்.
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவராவார். அந்த உண்மை ஊடல் முடிந்த பின் கூடி மகிழும் நிலையில் காணப்படும்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
-குறள்
இல்வாழ்க்கையில் அன்பும் அறமும் உடையதாக விளங்கினால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
அன்புடைய நெஞ்சமும்,அறன் உடைய இல்வாழ்வழ்வும் அவசியம் ஆகும்.
ஒருவருடைய சாதகத்தில் ஏழாம் அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட மனம் ஒத்த மனைவி வாழ்க்கை துணையாக அமையும்.
இல்லற சுகத்தினை ஒருவர் நன்முறையில் அனுபவிக்க காமகாரக கிரகம் செவ்வாய் பகவானும்,களத்திர காரகன் சுக்கிர பகவானும் பாவிகளால் சூழப்பட்டு பலம் இழக்காமல் இருக்க வேண்டும்.
"அன்புஅகத்து இல்லா இல்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளித் தற்று"
-குறள்
விளக்கம்;
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்து போன்றது.
ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் ,இரண்டாமிடம் ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடம் போன்ற இடங்களில் அரவான ராகு, கேது மற்றும் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் போன்ற பாவிகள் தொடர்பு பெற மேற்கண்ட குறளின்கண் காட்டப்பட்ட இல்லற துணையே வாழ்க்கை துணையாக அமைவார்.விதிப்பயன் என்ன செய்ய.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd,
ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.
masterasroravi@gmail.com
..............................................
No comments:
Post a Comment