வாழ்வின் வழிகாட்டி ஜோதிடம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஜோதிடம் என்பது கடலில் வழி தெரியாமல் திண்டாடும் மாலுமிக்கு கப்பலை கரை சேர்க்க வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது!
வாழ்வின் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி தவிக்கும் மனிதனுக்கு
வாழ்வின் உன்னத தாத்பரியத்தை உணர வைக்கும் ஒரு நல்ல புத்தகம் போன்றது !
எந்த ஒரு ஜோதிடராலும் அவரே ஒரு ரிஷியாக இருந்தாலும் றூறு சதவீத உண்மை சாதகருக்கு வழங்கிவிட முடியாது. ஏன் றூறு சதம் உண்மையை கூறி விட முடியாது எனில் ஊழ்வினைப் பயனால் அவனுக்கு அமைந்த சாதகப்பலன் என்பது எண்பது சதவீதம் எனில் மீதம் இருக்கும் இருந்து சதவீதம் பலன் சாதகர் இப்பிறப்பில் செய்யும் நல்வினை மற்றும் தீவினையை பொறுத்து அமைகிறது.
நமது முன்னோர்கள் "விதியை மதியால் வெல்லலாம்" என்றார்கள். எல்லோரும் விதியை மதியால் வென்று விட முடியாது. விதியை மதியால் வெல்லலாம் என்னும் விதியும் சாதகத்தில் அமைய வேண்டும்.
சாலையில் வாகனத்தில் செல்லும் போது வழியில் பள்ளம் இருப்பது "விதி" எனில் அங்கே பள்ளம் இருப்பதைக் காட்டிக் கொடுப்பது " மதி "ஆகும்.
மனித வாழ்வில்
காலப் போக்கினை தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடி சோதிடம் ஆகும்.
"உற்றது உரைத்தல் உறுவது கூறல்" சோதிடத்தின் மிக முக்கியக் கூறாக அமைந்துள்ளது.
ஒரு மனித வாழ்வின் பூர்வபுண்ணிய பலனையும் ,போன பிறவியின் தொடர் வினையையும் இப்பிறப்பின் நாம் அனுபவிக்க இருக்கும் கர்ம வினையின் தொடர்ச்சியையும் தெளிவாக எடுத்துக் காட்டுவது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஐந்தாம் இடமாகும்.
இப்பிறப்பில் நாம் செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப மறுபிறப்பில் நாம் என்னவாக பிறப்பெடுப்போம் ? , மறுபிறப்பு நமக்கு உண்டா? என்ற வினாவிற்கு விடைதேடும் முயற்சியில் ஈடுபடும் போது மோட்ச பயனை உணர்த்தும் மோட்சம் அல்லது முக்தி ஸ்தானம் என்று அழைக்கப்படும் காலபுருஷ தத்துவத்தின்படி நிறைவு ஸ்தானமான "பன்னிரண்டாம் இடத்தை" கொண்டும் அறியலாம்.
ஊழ்வினைப் பயனால் பிறப்பெடுத்த நாம் நம் கர்ம பயனை அனுபவிக்க இந்த மண்ணில் ஒரு குறிப்பிட்ட நபருக்கு, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளையாக ஜெனிக்கின்றோம்.
புல்லாகிப் ,பூண்டாகி மிருகமாய் ,மனிதராய்.... என பல பிறப்பு எடுக்கிறோம்.
ஒருவர் பிறப்பற்ற நிலையடைய ஆசையற்ற நிலையை அடைந்து நமது ஆத்மா சங்கமிக்கும் போது மறு பிறப்பற்ற நிலை உருவாகிறது.
இதனை ஜாதக கட்டத்தில் மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தை கொண்டு அறியலாம். பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து, பாக்கியாதிபதியான ஒன்பதாம் அதிபதியும் பலம் பெற்று நிற்க
மறுபிறப்பற்ற நிலையை அடைவதாக நமது சாதக சாத்திரம் கூறுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் திரிகோண ஸ்தானமான 1 ,5 ,9 மற்றும் மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் இடம் ஆகிய இடங்களில்
சனி+ கேது இணைந்து அல்லது சனியோ அல்லது கேதுவோ தனியாக நின்று ஆன்மீக கிரகமான குரு பகவானால் பார்க்கப்பட சாதகர் இப்பிறப்பில் ஆன்மிக சிந்தனை கொண்டவராக திகழ்வார்.
"கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்க கேதியுள்ள சன்னியாச யோகம்! யோகம்!
பொதுவாக ஜாதக கட்டத்தில் பத்தாம் இடம் என்பது கர்ம ஸ்தானம் ஆகும். சனி பகவானை கர்ம காரகன் என்று அழைக்கப் படுகிறது. எனவே கர்ம ஸ்தானமான பத்தாம் இடத்தில் மூன்று கோள்கள் இணைந்து நிற்பின் சன்னியாச யோகத்தை சாதகருக்கு தருகிறது.
ஒருவர் தான் இப்பிறப்பில் செய்யும் தர்மங்களை அளந்தறிய சாதக கட்டத்தில் தர்ம ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும் அதன் அதிபதியும் ஆராய்ந்தறிய வேண்டும்.
ஒருவரது பிறப்பின் கர்ம வினையை பற்றி ஆராய பத்தாமிடமான கர்ம ஸ்தானம் உதவுகிறது.
சூட்சும உண்மையாக ஒரு மனிதரின் தர்மம் , அவரது கர்மத்துடன் இணையும் போது ஆன்மீக யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது. இதனைத்தான் சாதக கட்டத்தில் "தர்மகர்மாதிபதி யோகம்" என்கிறோம்.
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாமிட அதிபதி மற்றும் பத்தாம் இட அதிபதி , அதாவது தர்ம மற்றும் கர்ம ஸ்தானாதிபதி ஆனவர் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டாலும் மற்றும் இருவரும் இணைந்து நின்றாலும் (குறிப்பாக
1, 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் நின்றாலும்) தர்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும்.
"சொல்லுமையா பாக்கியத்தோன் பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனை கேளு! எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களும் பணிவார்கள் இறைவன் போல!
தொல்லையில்லான் பலபேரை காக்க வல்லோன்!
துணையாளர் பலபேரும்
உண்டு பாரு!
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்சத்தாலே வளமையாக
வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"
ஒருவர் இப்பிறப்பில் அவருடைய வாக்கு வன்மையையும் மற்றும் புத்தி ஸ்தானத்தையும் ஆராய்ந்து அறிய இரண்டாம் மற்றும் ஐந்தாம் இடத்தை ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் சுப நிலையில் நிற்க கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் உடையவராகவும் மற்றும் மற்றும் நல்ல புத்தி உடையவராக திகழ்வாரா? என கண்டறிய ஐந்தாமிடத்தையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒருவருடைய குணம் நலன்களை ஆராய்ந்து அறிய அவருடைய ஜாதகத்தில் இலக்கனத்தையும் அதன் அதிபதியும் பொருத்து அமைகிறது.
சென்ற பிறப்பில் நாம் செய்த பூர்வ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் நமக்கு புத்திர பாக்கியம் அமையும். எனவேதான் பூர்வ புண்ணிய ஸ்தான பலனே புத்திர பாக்கியம் ஆக நமக்கு அமைந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
masterastroravi@gmail.com.
........
No comments:
Post a Comment