செவ்வாய் பகவான் பற்றி யாரும் அறிந்திராத உண்மை ரகசியங்கள்.
செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"பாதகம்
செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்து விடு!
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு!
என்றார் பாரதி
"அச்சம் என்பது மடமையடா !
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு ?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு ?
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு ?
நீ கொண்டு வந்ததென்ன டா மீசைய முறுக்கு!"
என்பது கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.
"எங்கு தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் கலியுகக் கண்ணன் பிறப்பான்" என்கிறது பகவத்கீதை
எங்கெல்லாம் நியாய, தர்மங்கள் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் கொதித்து எழ ஒரு மானிடப் பிறப்பு மண்ணில் அவதரிக்கிறார்.
இவ்வாறாக மண்ணில் எழும் அக்கிரமங்களை கண்டிக்க கொதித்து எழும் நவ கோள்களில் செவ்வாய் பகவானுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
ஆணவம் அகங்காரம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி கொடுமைப்படுத்திய சூரபத்மனை வதம் செய்ய முருகன் அவதாரமாக மண்ணில் அவதரித்து சூரசம்காரம் செய்கிறார்.
சூரனை வேல்கொண்டு சூரசம்ஹாரம் செய்ததை அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது .
செவ்வாய் பகவான் என்றாலே முருகனையே குறிக்கும்.
ஆதலால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று நிற்கும் பொழுது அவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு அதர்மத்தை தட்டிக் கேட்கக் கூடிய ஒரு வீரம் இயல்பிலேயே அமைவதை நாம் காணலாம்.
எனவே செவ்வாய் பகவானை வீரத்திற்கு அதிபதியாக கொள்ளலாம்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று சுப சாரம் பெற்று எவ்வித பாவிகள் சம்பந்தமின்றி இருக்க அநியாயத்தை தட்டி கேட்கக்கூடிய காவல் நிலைய ஆய்வாளராகவோ அல்லது நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ தளபதியாகவும் திகழ்வார்.
விபத்து போன்றவற்றில் இருந்து உயிர்காக்கும் மருத்துவராகவும் திகழ வைப்பார்.
ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று அல்லது பாவிகளுடைய தொடர்பு பெற்றே இருக்கும்பொழுது நாட்டை சீரழிக்கும் நாசவேலை புரியும் தீவிரவாதிகளாக செயல்பட வைப்பார்.
இவை மட்டுமன்றி செவ்வாய் பகவானை பூமிகாரகன் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே ஒருவரை பெரும் நிலச்சுவான்தாராக திகழ செவ்வாய் பகவானின் அருளாசி தேவைப்படுகிறது.
ஒருவர் பெரும் நிலக்கிழார் ஆகவும் பெரிய பண்ணை விவசாயம் செய்பவராகவும் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விவசாய அலுவலராகவும், புதுப்புது ரகங்களை கலப்பினம் செய்து உருவாக்கும் விவசாய பண்ணை அதிகாரிகளாகவும் செவ்வாய் பகவான் உடைய ஆதரவு தேவைப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாய் பகவானும் பலம் பெற அதற்குரிய தசாபுத்திகள் நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதிக நிலங்களை வாங்கி சேர்க்கக்கூடிய யோகத்தினை சாதகருக்கு வாரி வழங்குகிறது.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள அவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும் பலம் பெற பலருக்கு வீடு கட்டி கொடுக்கக்கூடிய பொறியியல் வல்லுநராக மாற்றி அழகு பார்க்கிறது.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாய் பகவானும் மற்றும் சுக்கிர பகவானும் பலம் பெற ஆடம்பர மாளிகையை கட்டி அதில் உறங்கும் யோகம் அந்த சாதகருக்கு அளிக்கிறது.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பத்தாமிடத்தில் தொடர்புகொண்டு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை பெற அதன் தசை புக்திகளில் உயிர் காக்கும் மருத்துவராக ஆகும் யோகம் உண்டு.
செவ்வாய் பகவான் சகோதரருக்கு காரகனாக விளங்குவதால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பாவிகளான சனி ,ராகு மற்றும் கேது போன்ற எவ்வித பாவ கிரகங்களின் தொடர்பு இன்றி மற்றும் மறைவிட அதிபதி தொடர்பு இல்லாமல் கேந்திர, கோணங்களில் பலம் பெற்று சுபர் பார்வை பெற " தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்ற பழமொழிக்கேற்ப உடன்பிறந்த சகோதரர்களால் சமூகத்தில் உயரிய நிலையை அடையலாம்.
ஒருவருக்கு குமரப் பருவம் அடைந்தவுடன் இயல்பாக அவரது உடம்பில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பால் பருவம் எய்தி காம வயப்படும் தன்மையை ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள காமகாரகன் என்று அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவானின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவானுடன் சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருக்கக்கூடாது. இது மிதமிஞ்சிய காம உணர்வினை சாதகருக்கு அளிக்கிறது.
செவ்வாய் பகவானுடன் குரு, சந்திரன் ,சூரியன் மற்றும் கேது போன்ற கிரகங்கள் சேர்ந்து நிற்கும் பொழுது பொழுது அது செவ்வாய் பகவானின் வலுவினை அதிகரிக்கிறது.
12 பாவங்களில் நின்ற பலன்
(இவை அனைத்தும் பொதுப்பலன் ஆகும்.இந்த பலனில் மாறுபாடு இருக்கலாம். அதாவது செவ்வாய் பகவான் நிற்கும் ஸ்தான அதிபதி பொருத்தம் செவ்வாய் பகவானை பார்க்கக்கூடிய மற்றும் சேர்ந்து இருக்கக்கூடிய கிரகங்களின் தன்மையை பொருத்தும் பலனில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு).
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் லக்கனத்தில் நிற்க்கும்பொழுது சாதகருக்கு அபரித துணிச்சலை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில் இலக்கணத்தில் நிற்கும் பாப கிரகமான செவ்வாய் பகவான் 7-ஆம் இடத்தை பார்வை செய்வதால் காலதாமதம் திருமணத்தை தருகிறது.
செவ்வாய் பகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நிற்கும் பொழுது ஜாதகருக்கு ஒருவித கோபப்படும் தன்மையினையும்,வீண் விவாதம் செய்யக்கூடியவராகவும் , கால தாமத திருமணத்தினை செய்பவராகவும் இருப்பார்.
இரண்டாம் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் அலை பாயும் உள்ளம் கொண்டவனாக இருப்பான் .இரண்டு வித்தைகள் இருந்திருப்பான். உக்கிரமான முக அமைப்பு உடையவன்.
தீவினையாளர் .
கண்ணில் வியாதி வரும். மலம், சிறுநீர் சார்ந்த வியாதி உடையவன். பேச்சினால் பகையை வரவழைத்துக் கொள்வான் .நிலம் சார்ந்த பகைக்கு உள்ளாவான் . பெரும் கோபக்காரன். துஷ்டர்களுக்கு பணிவிடைகள் செய்வான். காதலியோடு அல்லது மனைவியோடு விரோதம் கொள்வான். உண்மை பேசுவான். கொடுமையானவன்.
மூன்றாம் இடத்தில் நிற்கும் சகோதர காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானத்தில் நிற்கும் பொழுது "காரக பாவ நஸ்தியினை தரும் எண்பதால் இளைய சகோதர தோஷம் ஏற்படும். பங்காளிகள் வம்பு ,வழக்குகள் வரும் தன் நல்ல பண்பினால் எல்லோராலும் அறியப்படுவான்.
நிலம் சம்பந்தமாக நன்மைகள் அடைவான். கண்ணில் வியாதி ஏற்படும் .கெடு புத்தியும் இருக்கும் .தைரியசாலி துஷ்டர்கள் விரும்புகின்ற தீய ஒழுக்கம் கொண்டவன்.
நான்காம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் பூமி வாங்கி சேர்க்கும் யோகத்தையும், காம உணர்வினையும் மற்றும் உறுதியையும் தருகிறது.
நண்பர்களுடன் பகை வரும். ஆயுதங்களாலும், கள்வர்களாலும். மற்றும் நெருப்பினாலும் அச்சம் ஏற்படும். அன்னையுடன் மனவேறுபாடு கொள்வான் .கை கூடும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்த காரியங்கள் தடைபட்டுப் போகும். பிறரது இல்லத்தில் வசிப்பான். தன் வாழ்க்கைத் துணைவியை வைதிடுவான். வீடு சார்ந்த விஷயங்களால் பொருள் வரவு ஏற்படும். வாகனயோகம் குறைவு. அந்நியர்களுடைய வீட்டை சொந்தமாக்கி வாழ்வான். கல்வி அறிவு குறைவு. துணிச்சல் மிக்கவன் .வாழ்வின் பிற்பகுதியில் தனவந்தராக இருப்பான். சொந்த பந்தங்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வான்.
ஐந்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் பகவான் அமர்ந்திருந்தால் அந்த சாதகன் மனதளவில் நொந்து கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவனாக வாழ்வான் .
அடிக்கடி மன சோர்வுக்கு உள்ளவன் ,அலைந்து திரிபவன் ,கோபக்காரன் , செல்வம் அழியும் , எடுத்த காரியங்கள் கெடும்.
தீய எண்ணங்கள் உடையவன், சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவான். பிள்ளைகளுக்கு அழிவு நேரும். கீழ்தரமான காரியங்களை பண்ணுவான். மன உறுதியும், உடல் பலம் கொண்டவன். துணிச்சல்காரன் ஆவார்.
இந்த செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் புகழ் படைத்தவன் ஆவான். ஆரோக்கியமான உடம்பை உடையவன். திருடர்களாளும், நெருப்பாலும் அச்சம் உண்டாகும் .தீராப் பசி உடையவன். சொந்தக்காரர்களுக்கு இணக்கமாக இருப்பார். மிகச்சிறந்த வீரன். படைத்தளபதியாக திகழும் திறன் வாய்ந்தவர். நிலம் சம்பந்தப்பட்ட லாபம் கிட்டும் .எடுத்த காரியம் ஜெயம் அடையும்.
களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் வீற்றிருந்தாள் பாவத் தன்மை பொருந்திய மனைவி வாய்ப்பாள் . சாதகன் உஷ்ணம் ரீதியான வியாதி உடையவானாக இருப்பார். மனைவியால் அவமானம் நேரும். மனைவியால் நஷ்டம் உண்டாகும் .இரு தாரம் அமையும். மனைவியால் கவலைக்கு உள்ளாவான்.
எட்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் நின்று இருந்தால் தீய மனைவி அடைவான். மனைவிக்கு தோஷம் உண்டு .ஜாதகன் விழிகளில் வியாதி உடையவன் . பெரும் நோயாளன் . சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவான். அலைந்து திரிபவன். மனைவியால் அவமானத்துக்கு ஆளாவான் . மனைவியால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி நிற்பான்.
ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் பகவான் நின்றிருந்தால் செல்வம் அழிவடையும். இது சாதகனின் தந்தைக்கு தோஷம் ஏற்படுத்தும் அமைப்பாகும் . சாதகன் நற்பண்பு இல்லாதவனாக இருப்பான். கெடு காரியங்கள் செய்வான். எல்லோராலும் இகழப்படுவான். சாதகனின் சகோதரர்களுக்கு தோஷம் ஏற்படும். மூதாதையருக்கும், ஆசிரியருக்கும் கூட தோஷம் ஏற்படுத்தும் அமைப்பு இதுவாகும்.
பத்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருந்தால் அஞ்சாநெஞ்சன் .
அசையா மன உறுதியாளன். ஸ்திரமான அந்தஸ்து கொண்டவன். ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவன்.
அனேக மக்களால் கொண்டாடப்படும் புகழுடையவன். எண்ணியதை எண்ணியபடி முடிப்பவன். அரசாங்க சேவையும் , அரசு வழி வருமானமும் உண்டு. புத்திர பாக்கியம் கிட்டும் . திருடர்களும், நெருப்பாலும், கருவிகளும் உயிரச்சம் உண்டாகும் .யாகம் முதலியவை வளர்ப்பான்.
பதினோராம் இடத்தில் செவ்வாய் நின்றிருந்தால் காயம் உண்டாகும். கவலை உடையவன். அஞ்சாதவன். செவிப்புலன் திறன் குறைவு. சிறப்பாக பேசக்கூடியவன். சகோதரர்களும், சகாக்களாலும் பூமியை ஆளும் தானிய லாபமும், பொன்லாபமும் கிட்டும்.
பன்னிரண்டாம் செவ்வாய் நின்றிருந்தால் சகோதரனுக்கு தோஷமுண்டு. பொருள் நஷ்டமாகும். மனைவியோடு பகை மூளும். காலில் முடக்கு வாதம் வரலாம். வியாதிக்காரன் , கெட்ட காரியங்கள் பண்ணுபவன் . ஏழை, கடுமையாக பேசுபவன். அடிமைப்பட்டிருக்க கூடியவன். அன்புடையவன். பங்காளிகளும் விரதம் ஏற்படும். வியாதி உடையவன் ஆவார்.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
......
செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"பாதகம்
செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்து விடு!
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு!
என்றார் பாரதி
"அச்சம் என்பது மடமையடா !
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு ?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு ?
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு ?
நீ கொண்டு வந்ததென்ன டா மீசைய முறுக்கு!"
என்பது கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.
"எங்கு தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் கலியுகக் கண்ணன் பிறப்பான்" என்கிறது பகவத்கீதை
எங்கெல்லாம் நியாய, தர்மங்கள் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் கொதித்து எழ ஒரு மானிடப் பிறப்பு மண்ணில் அவதரிக்கிறார்.
இவ்வாறாக மண்ணில் எழும் அக்கிரமங்களை கண்டிக்க கொதித்து எழும் நவ கோள்களில் செவ்வாய் பகவானுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
ஆணவம் அகங்காரம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி கொடுமைப்படுத்திய சூரபத்மனை வதம் செய்ய முருகன் அவதாரமாக மண்ணில் அவதரித்து சூரசம்காரம் செய்கிறார்.
சூரனை வேல்கொண்டு சூரசம்ஹாரம் செய்ததை அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது .
செவ்வாய் பகவான் என்றாலே முருகனையே குறிக்கும்.
ஆதலால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று நிற்கும் பொழுது அவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு அதர்மத்தை தட்டிக் கேட்கக் கூடிய ஒரு வீரம் இயல்பிலேயே அமைவதை நாம் காணலாம்.
எனவே செவ்வாய் பகவானை வீரத்திற்கு அதிபதியாக கொள்ளலாம்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று சுப சாரம் பெற்று எவ்வித பாவிகள் சம்பந்தமின்றி இருக்க அநியாயத்தை தட்டி கேட்கக்கூடிய காவல் நிலைய ஆய்வாளராகவோ அல்லது நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ தளபதியாகவும் திகழ்வார்.
விபத்து போன்றவற்றில் இருந்து உயிர்காக்கும் மருத்துவராகவும் திகழ வைப்பார்.
ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று அல்லது பாவிகளுடைய தொடர்பு பெற்றே இருக்கும்பொழுது நாட்டை சீரழிக்கும் நாசவேலை புரியும் தீவிரவாதிகளாக செயல்பட வைப்பார்.
இவை மட்டுமன்றி செவ்வாய் பகவானை பூமிகாரகன் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே ஒருவரை பெரும் நிலச்சுவான்தாராக திகழ செவ்வாய் பகவானின் அருளாசி தேவைப்படுகிறது.
ஒருவர் பெரும் நிலக்கிழார் ஆகவும் பெரிய பண்ணை விவசாயம் செய்பவராகவும் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விவசாய அலுவலராகவும், புதுப்புது ரகங்களை கலப்பினம் செய்து உருவாக்கும் விவசாய பண்ணை அதிகாரிகளாகவும் செவ்வாய் பகவான் உடைய ஆதரவு தேவைப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாய் பகவானும் பலம் பெற அதற்குரிய தசாபுத்திகள் நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதிக நிலங்களை வாங்கி சேர்க்கக்கூடிய யோகத்தினை சாதகருக்கு வாரி வழங்குகிறது.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள அவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும் பலம் பெற பலருக்கு வீடு கட்டி கொடுக்கக்கூடிய பொறியியல் வல்லுநராக மாற்றி அழகு பார்க்கிறது.
ஒருவரது ஜாதகத்தில் நான்காம் அதிபதியும், செவ்வாய் பகவானும் மற்றும் சுக்கிர பகவானும் பலம் பெற ஆடம்பர மாளிகையை கட்டி அதில் உறங்கும் யோகம் அந்த சாதகருக்கு அளிக்கிறது.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலம் பெற்று பத்தாமிடத்தில் தொடர்புகொண்டு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை பெற அதன் தசை புக்திகளில் உயிர் காக்கும் மருத்துவராக ஆகும் யோகம் உண்டு.
செவ்வாய் பகவான் சகோதரருக்கு காரகனாக விளங்குவதால் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பாவிகளான சனி ,ராகு மற்றும் கேது போன்ற எவ்வித பாவ கிரகங்களின் தொடர்பு இன்றி மற்றும் மறைவிட அதிபதி தொடர்பு இல்லாமல் கேந்திர, கோணங்களில் பலம் பெற்று சுபர் பார்வை பெற " தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்ற பழமொழிக்கேற்ப உடன்பிறந்த சகோதரர்களால் சமூகத்தில் உயரிய நிலையை அடையலாம்.
ஒருவருக்கு குமரப் பருவம் அடைந்தவுடன் இயல்பாக அவரது உடம்பில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பால் பருவம் எய்தி காம வயப்படும் தன்மையை ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள காமகாரகன் என்று அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவானின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவானுடன் சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருக்கக்கூடாது. இது மிதமிஞ்சிய காம உணர்வினை சாதகருக்கு அளிக்கிறது.
செவ்வாய் பகவானுடன் குரு, சந்திரன் ,சூரியன் மற்றும் கேது போன்ற கிரகங்கள் சேர்ந்து நிற்கும் பொழுது பொழுது அது செவ்வாய் பகவானின் வலுவினை அதிகரிக்கிறது.
12 பாவங்களில் நின்ற பலன்
(இவை அனைத்தும் பொதுப்பலன் ஆகும்.இந்த பலனில் மாறுபாடு இருக்கலாம். அதாவது செவ்வாய் பகவான் நிற்கும் ஸ்தான அதிபதி பொருத்தம் செவ்வாய் பகவானை பார்க்கக்கூடிய மற்றும் சேர்ந்து இருக்கக்கூடிய கிரகங்களின் தன்மையை பொருத்தும் பலனில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு).
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் லக்கனத்தில் நிற்க்கும்பொழுது சாதகருக்கு அபரித துணிச்சலை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில் இலக்கணத்தில் நிற்கும் பாப கிரகமான செவ்வாய் பகவான் 7-ஆம் இடத்தை பார்வை செய்வதால் காலதாமதம் திருமணத்தை தருகிறது.
செவ்வாய் பகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நிற்கும் பொழுது ஜாதகருக்கு ஒருவித கோபப்படும் தன்மையினையும்,வீண் விவாதம் செய்யக்கூடியவராகவும் , கால தாமத திருமணத்தினை செய்பவராகவும் இருப்பார்.
இரண்டாம் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் அலை பாயும் உள்ளம் கொண்டவனாக இருப்பான் .இரண்டு வித்தைகள் இருந்திருப்பான். உக்கிரமான முக அமைப்பு உடையவன்.
தீவினையாளர் .
கண்ணில் வியாதி வரும். மலம், சிறுநீர் சார்ந்த வியாதி உடையவன். பேச்சினால் பகையை வரவழைத்துக் கொள்வான் .நிலம் சார்ந்த பகைக்கு உள்ளாவான் . பெரும் கோபக்காரன். துஷ்டர்களுக்கு பணிவிடைகள் செய்வான். காதலியோடு அல்லது மனைவியோடு விரோதம் கொள்வான். உண்மை பேசுவான். கொடுமையானவன்.
மூன்றாம் இடத்தில் நிற்கும் சகோதர காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானத்தில் நிற்கும் பொழுது "காரக பாவ நஸ்தியினை தரும் எண்பதால் இளைய சகோதர தோஷம் ஏற்படும். பங்காளிகள் வம்பு ,வழக்குகள் வரும் தன் நல்ல பண்பினால் எல்லோராலும் அறியப்படுவான்.
நிலம் சம்பந்தமாக நன்மைகள் அடைவான். கண்ணில் வியாதி ஏற்படும் .கெடு புத்தியும் இருக்கும் .தைரியசாலி துஷ்டர்கள் விரும்புகின்ற தீய ஒழுக்கம் கொண்டவன்.
நான்காம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் பூமி வாங்கி சேர்க்கும் யோகத்தையும், காம உணர்வினையும் மற்றும் உறுதியையும் தருகிறது.
நண்பர்களுடன் பகை வரும். ஆயுதங்களாலும், கள்வர்களாலும். மற்றும் நெருப்பினாலும் அச்சம் ஏற்படும். அன்னையுடன் மனவேறுபாடு கொள்வான் .கை கூடும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்த காரியங்கள் தடைபட்டுப் போகும். பிறரது இல்லத்தில் வசிப்பான். தன் வாழ்க்கைத் துணைவியை வைதிடுவான். வீடு சார்ந்த விஷயங்களால் பொருள் வரவு ஏற்படும். வாகனயோகம் குறைவு. அந்நியர்களுடைய வீட்டை சொந்தமாக்கி வாழ்வான். கல்வி அறிவு குறைவு. துணிச்சல் மிக்கவன் .வாழ்வின் பிற்பகுதியில் தனவந்தராக இருப்பான். சொந்த பந்தங்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வான்.
ஐந்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் பகவான் அமர்ந்திருந்தால் அந்த சாதகன் மனதளவில் நொந்து கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவனாக வாழ்வான் .
அடிக்கடி மன சோர்வுக்கு உள்ளவன் ,அலைந்து திரிபவன் ,கோபக்காரன் , செல்வம் அழியும் , எடுத்த காரியங்கள் கெடும்.
தீய எண்ணங்கள் உடையவன், சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவான். பிள்ளைகளுக்கு அழிவு நேரும். கீழ்தரமான காரியங்களை பண்ணுவான். மன உறுதியும், உடல் பலம் கொண்டவன். துணிச்சல்காரன் ஆவார்.
இந்த செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் புகழ் படைத்தவன் ஆவான். ஆரோக்கியமான உடம்பை உடையவன். திருடர்களாளும், நெருப்பாலும் அச்சம் உண்டாகும் .தீராப் பசி உடையவன். சொந்தக்காரர்களுக்கு இணக்கமாக இருப்பார். மிகச்சிறந்த வீரன். படைத்தளபதியாக திகழும் திறன் வாய்ந்தவர். நிலம் சம்பந்தப்பட்ட லாபம் கிட்டும் .எடுத்த காரியம் ஜெயம் அடையும்.
களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் வீற்றிருந்தாள் பாவத் தன்மை பொருந்திய மனைவி வாய்ப்பாள் . சாதகன் உஷ்ணம் ரீதியான வியாதி உடையவானாக இருப்பார். மனைவியால் அவமானம் நேரும். மனைவியால் நஷ்டம் உண்டாகும் .இரு தாரம் அமையும். மனைவியால் கவலைக்கு உள்ளாவான்.
எட்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் நின்று இருந்தால் தீய மனைவி அடைவான். மனைவிக்கு தோஷம் உண்டு .ஜாதகன் விழிகளில் வியாதி உடையவன் . பெரும் நோயாளன் . சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவான். அலைந்து திரிபவன். மனைவியால் அவமானத்துக்கு ஆளாவான் . மனைவியால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி நிற்பான்.
ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் பகவான் நின்றிருந்தால் செல்வம் அழிவடையும். இது சாதகனின் தந்தைக்கு தோஷம் ஏற்படுத்தும் அமைப்பாகும் . சாதகன் நற்பண்பு இல்லாதவனாக இருப்பான். கெடு காரியங்கள் செய்வான். எல்லோராலும் இகழப்படுவான். சாதகனின் சகோதரர்களுக்கு தோஷம் ஏற்படும். மூதாதையருக்கும், ஆசிரியருக்கும் கூட தோஷம் ஏற்படுத்தும் அமைப்பு இதுவாகும்.
பத்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருந்தால் அஞ்சாநெஞ்சன் .
அசையா மன உறுதியாளன். ஸ்திரமான அந்தஸ்து கொண்டவன். ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவன்.
அனேக மக்களால் கொண்டாடப்படும் புகழுடையவன். எண்ணியதை எண்ணியபடி முடிப்பவன். அரசாங்க சேவையும் , அரசு வழி வருமானமும் உண்டு. புத்திர பாக்கியம் கிட்டும் . திருடர்களும், நெருப்பாலும், கருவிகளும் உயிரச்சம் உண்டாகும் .யாகம் முதலியவை வளர்ப்பான்.
பதினோராம் இடத்தில் செவ்வாய் நின்றிருந்தால் காயம் உண்டாகும். கவலை உடையவன். அஞ்சாதவன். செவிப்புலன் திறன் குறைவு. சிறப்பாக பேசக்கூடியவன். சகோதரர்களும், சகாக்களாலும் பூமியை ஆளும் தானிய லாபமும், பொன்லாபமும் கிட்டும்.
பன்னிரண்டாம் செவ்வாய் நின்றிருந்தால் சகோதரனுக்கு தோஷமுண்டு. பொருள் நஷ்டமாகும். மனைவியோடு பகை மூளும். காலில் முடக்கு வாதம் வரலாம். வியாதிக்காரன் , கெட்ட காரியங்கள் பண்ணுபவன் . ஏழை, கடுமையாக பேசுபவன். அடிமைப்பட்டிருக்க கூடியவன். அன்புடையவன். பங்காளிகளும் விரதம் ஏற்படும். வியாதி உடையவன் ஆவார்.
நன்றி.
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
......
No comments:
Post a Comment