Monday, 6 April 2020

ஜோதிடம் தரும் சூட்சும விளையாட்டு-(2)

சோதிடம் தரும் சூட்சும விளையாட்டு-(2)

                        

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

      கிரகங்கள் ஒன்பதும்,ஜெனன காலத்தில் பன்னிரெண்டு ராசிகளில் எங்கு அமர்ந்து உள்ளார் ? எந்த கிரகங்களுடன் இணைந்து உள்ளார் ? எந்த கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார் ? எந்த கிரகங்கள் பார்க்கின்றது ?
எந்த நட்சத்திர சாரம் பெற்றுள்ளது ? என்பதை பொறுத்து அவை தரும் கலப்பினம்( Combination) மூலம் பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கின்றோம்.

   ஒரு தாயின் வயிற்றில் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் ஒரு கரு இரட்டையர் (identical twines) பிறந்தாலும் அவர்களுக்கிடையேயும் மாறுபட்ட தன்மை காணப்படுவதை காணலாம்.

 எத்தனை கோடி மனிதர்கள் பிறந்து இறந்து இருக்கிறார்கள். பிறந்து வளர்ந்தும் வளர்கிறார்கள், இனி பிறக்கவும் போகிறார்கள். ஆனால் முக்காலத்திலும் பல்லாயிரம் கோடி மனிதர்களில் ஒருவருக் குள்ள கை ரேகைகள் போல மற்றவர்கள் கைரேகை அமையவில்லை, அமையப் போவதும் இல்லை .

   அதே போல தான் ஒரு மனிதனை போல இதற்கு முன்பும் ,இப்பொழுதும், மற்றும் இதற்குப் பின்னும் பிறக்கப் போவதில்லை.

    இதற்கு காரணம் நவ கிரகங்கள் பன்னிரெண்டு ராசிகளில் தனக்கு உரிய காலங்களில் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் ஒரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் அதே ராசிக்கு வந்தாலும் சுழற்சி மாறுபாட்டால் முன்பு இருந்த அதே இடத்திற்கு கிரகங்கள் மறுபடியும் அதே ராசிக்கு வருவதில்லை.

 உதாரணமாக குருபகவான் மேஷம் ராசிக்கு  பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் இடம்பெயர்ந்து வந்தாலும், அதே ராசிக்கு மீண்டும் வந்தாலும் முன்னரே இருந்த அதே இடத்திற்கு வருவதில்லை.ஆதலால்
 பலனும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.

 ஜாதகக் கட்டத்தில் ராகு கேதுவை தவிர ஏனைய கிரகங்கள் முன்னோக்கி நகர்கிறது. ராகு கேதுக்கள் மட்டும் பின்னோக்கி நகர்கிறது. எனவே ராகு மற்றும் கேதுவுக்கு வக்கிரகதி கிடையாது.

   ராகு மற்றும் கேது பகவானுக்கு மட்டும் சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் இருக்கின்றதே அந்த வீடே  சொந்த வீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இரண்டு நிழற் கிரகங்களும் ஒரே ராசியில் இணைந்து இருக்காது. ராகு பகவான் இருக்கும் வீட்டுக்கு 180 டிகிரியில் கேது பகவான் வாசம் செய்கிறார். அதாவது ராகு பகவான் வாசம் செய்யும் வீட்டிற்கு ஏழாவது வீட்டில் கேது பகவான் வாசம் செய்கிறார்.

  ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டு வீதமாக சனி பகவான் 12 ராசிகளையும் 30 ஆண்டுகள் ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறார்.

 அதேபோல குரு பகவான் ஒரு ராசிக்கு ஒரு ஆண்டுகள் வீதம் 12 ஆண்டுகள் ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறார் .

    நிழல் கிரகங்களான ராகு, கேதுக்கள் ஒரு ராசிக்கு 18 மாதங்கள் வீதமாக 18 ஆண்டுகள் ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறார்கள்.

  மங்கள காரகன் செவ்வாய் பகவான் ராசிக்கு 45 நாட்கள் வீதம் 18 மாதங்கள் ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறது.

  ஏனைய கிரகங்களான சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஒரு ராசிக்கு ஒரு மாத விதம் ஓராண்டு ஒரு முழு சுற்று சுற்றி வருகிறது.

   சந்திர பகவான் ஒரு ராசிக்கு இரண்டேகால் நாட்கள் வீதம் 12 ராசிகளையும் 27 நாட்கள் ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறது.

  ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் வீதம் (ஒன்பது பாதங்கள்) 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் பிரித்து கொடுக்கப்படுகிறது.

  ஜெனன காலத்தில் வானவீதியில் என்ன 🌟 நட்சத்திரம் தொடுவானத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரம்  ஜென்ம நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அந்த நட்சத்திரம் இடம்பெற்ற ராசியை ஜென்ம ராசியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

  ஜென்ம நட்சத்திர ஆதியந்த நாழிகையில் இருந்து நட்சத்திர செல்லை கழித்து நட்சத்திர இருப்பு கண்டறியப்படுகிறது. அந்த நட்சத்திரம் சென்ற நாழிகை கணக்கிலிருந்து நட்சத்திரப் பாதம் கண்டறியப்படுகிறது.ஒரு நட்சத்திரத்திற்கு 4பாதம் என்ற அடிப்படையில் அந்த நட்சத்திரம் எந்த பாதத்தில் சென்று உள்ளது ? என்று கண்டறியப் படுகிறது.

   கிரகங்களில் ஒளி அளவினை கொண்டு அந்த கிரகத்துக்குரிய திசை எத்தனை ஆண்டு என கண்டறியப்படுகிறது.

சூரிய திசை 6 வருடம் சந்திர தசை 10 வருடம் செவ்வாய் திசை 7 வருடம் ராகு திசை 18 வருடம் 
குரு தசை 16 வருடம் 
சனி திசை 19 வருடம் புதன் திசை 17 வருடம் கேது திசை 7 வருடம் 
சுக்கிர திசை 20 வருடம்
 ஆக மொத்தம் 120 ஆண்டுகள் ஆகும். ஆண்டுகளாகும்.

ஒவ்வொரு திசைக்கு உரிய நட்சத்திரங்கள்

  கார்த்திகை, உத்திரம் உத்திராடம் -சூரிய தசை

ரோகிணி அஸ்தம் திருவோணம்- சந்திரன்
 திசை

மிருகசீரிடம், சித்திரை அவிட்டம்- செவ்வாய் திசை

 திருவாதிரை, சுவாதி சதயம்- ராகு திசை

புனர்பூசம் , விசாகம் பூரட்டாதி -குரு திசை

 பூசம், அனுசம் உத்திரட்டாதி -சனி திசை

ஆயில்யம் ,கேட்டை, ரேவதி -புதன் திசை

அசுவதி ,மகம், மூலம்- கேது திசை

 பரணி, பூரம், பூராடம்- சுக்கிர திசை

  நட்சத்திர இருப்பினை கொண்டு திசை இருப்பு கண்டறியப்படுகிறது.

 சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் இருந்து பங்குனி மாதம் மீன ராசி அடைகிறார்.

  சாதக கட்டத்தில் சூரிய பகவான் மற்றும் சந்திர பகவான் ஆகிய இரண்டும் ஒரு ராசியில் சந்திக்கக் கூடிய வேளையில் வானவீதியில் அமாவாசையும், சூரியபகவான் இருக்கும் இடத்திற்கு ஏழாம் வீட்டிற்கு அதாவது 180 பாகைக்கு வரும்பொழுது வானவீதியில் பௌர்ணமியும் நிகழ்கிறது.

  அமாவாசையில் இருந்து தொடங்கி பிரதமை, துவிதியை, திருதியை.... என்று பௌர்ணமி வரை வரக்கூடிய 15 திதிகளை வளர்பிறை காலமாக மற்றும் வளர்பிறை திதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

  பௌர்ணமியில் இருந்து தொடங்கி பிரதமை, துவிதியை ,திரிதியை... அன்று வரக்கூடிய 15 திதிகளும் தேய்பிறையில் காலமாக மற்றும் தேய்பிறை திதி அவர்கள் எடுத்து கொள்ளப்படுகிறது.

  கிரகங்களில் புதனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரம் கிடையாது.முன்னோக்கி கடிகாரச் சுற்றில் ஏங்கிக் கொண்டிருக்கும் சில நேரங்களில் நோக்கி நகர்வது போல் தெரிவதை வக்கிர கதி என்கிறோம்.

 குரு, சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் சூரிய பகவான் வரும் பொழுது மேற்கூறிய கிரகங்கள் வக்கிர கதி அடைகிறது. ஆறு மற்றும் ஏழாம் இடத்தில் வரும் பொழுது அதி வக்கிரமும், 
எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில் வரும்போது வக்கிர நிவர்த்தி அடைகிறது.

  தொடரும்....

நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.,)

வாட்ஸ் அப்
  9715189647

 செல்

   7402570899
      9715189647

                                   

அன்புடன் 
சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
 masterastroravi@gmail.com
........

No comments: