சூரியன் பகவான் தரும் சோதிட உண்மைகள்.( 1 )
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!நவக்கிரகங்களில் தலைமை கிரகமாக கருதப்படுவது சூரிய பகவான் ஆவார்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனை அடிப்படையாக கொண்டு பலன் காணும் முறை பெரும்பாலும் மேல்நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியலின் ஒரு பிரிவான வானவியலிலில் (Astronomy) சூரியனை மையமாக கொண்டு எல்லா கோள்களும் சுற்றி வருவதால் சூரியனை மையமாக கொண்டே அறிவியலார்
" சூரிய குடும்பம்" என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
போலந்து நாட்டு வானியல் அறிஞர் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் காலத்திற்கு முன்பு வரை புவியை மையமாகக் கொண்டே கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாக கருதப்பட்டது.
அதாவது 15 -ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பெரும்பாலான விஞ்ஞான அறிஞர்கள் நிலவில் இருந்த பூமியை மையமாகக் கொண்டே கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாக எண்ணினர்.
கிரேக்க நாட்டின் வானியல் அறிஞரான தாலமி என்பார் கிபி -140 ல் புவியை மையமாகக் கொண்டே கோள்கள் சுற்றி உள்ளதாக கருத்துகளை வலியுறுத்தினார்.
கிரேக்கத் தத்துவ மேதையும் வானியல் அறிஞரான அரிஸ்டாட்டில் என்பவரும் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் சுற்றி வருவதாக கருத்துக்களை கூறினார் .ஆனால் மதவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அந்தக் கொள்கை நிலை பெறவில்லை.
போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் "சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றி வருகிறது" என்ற கருத்தை மக்கள் மத்தியில் நிலை நிறுத்தினார்.
சூரியனை சுற்றி வரும் கோள்களில் புதன் சுக்கிரன், புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட் கோள்களும் புவியை ஒத்த கோள் என்று அழைக்கப்படுகிறது. உள்வட்ட கோள்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அதனால்தான் சாதக கட்டத்தில் புதன் பகவான் சூரியனுடன் அல்லது அதற்கு முன் ,பின் ராசிகளில் வாசம் செய்கிறது.
சுக்கிரன் பகவான் சூரியனுடனோ அல்லது சூரியன் இருக்கும் ராசிக்கு முன்பின் இரண்டு ராசிகள் தள்ளி வாசம் செய்கிறார்.
சூரியன் ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளிலும் ஒரு ஆண்டு சுற்றி வருகிறார். சாதாக கட்டத்தில் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் மேஷ ராசியிலும்,வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ரிஷப ராசியிலும் இவ்வாறாக பங்குனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு மீன ராசியிலும் சூரியன் வாசம் செய்வார்.
அதனால் ஜாதகத்தை பார்த்தவுடன் சூரியன் இருக்கும் இடத்தை வைத்து சாதகர்ர் பிறந்த மாதத்தை எளிமையாக கண்டறியலாம்.
சூரிய பகவானுடன் சந்திரன் சேர்வது "அமாவாசை யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் அமாவாசையில் பிறந்தவன் திருடனாக இருப்பான் என்று கூறப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல. ஒரு சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.
சூரியன் என்பது சிவனாகவும், சந்திரன் என்பதை சக்தியாகவும் கொண்டால் சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதக கட்டத்தில் இணைந்திருப்பவர்கள் அர்த்தநாரீஸ்வரர் போல அன்பாக அவனும் ,அவரது மனைவியும் கருத்து ஒத்த தம்பதியாக வாழ்வார். இயற்கை சுபர் கிரக பார்வை படவோ அல்லது வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த யோக பலனை சாதகருக்கு தரும்.
சூரியனுடன் ,சந்திர பகவான் சம சப்தமாக பார்த்துக்கொள்வது "பௌர்ணமி யோகம்" என்று பெயர். பௌர்ணமி யோகம் பெற்றவர்கள் மிகுந்த யோகவான்கள். ஆன்மிகவாதிகளாக திகழ்வார். பெரும்பாலும் சிவன் பக்தர்களாக ஏற்பார்கள் கிரிவலம் மேற்கொள்வதை விரும்புவார்கள். சித்தர்களை சந்திப்பதிலும், ஆண்ம-ஞாண விசாரணை செய்வதிலும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
சூரியன் பகவானுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது அரசியலில் உயரிய பதவியை அடைய இந்த அமைப்பு நல்ல அமைப்பாகும்.சூரியன் மற்றும் செவ்வாய் பகவானுடன் ஆறுக்குடையவர் இணைவு சிறந்த வழக்கறிஞர்களாக திகழ்கிறார்கள்.
சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் உடன் குருபகவான் சேர்க்கை நீதித்துறையில் தலைசிறந்த நீதிபதியாக திகழக்கூடிய யோக பலனை சாதகருக்கு தருகிறது.
சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் சேர்ந்து இருக்கும் போது தரும் எதிர்மறை பலனை சாதக அலங்காரத்திலிருந்து பின்வரும் பாடல் விளக்குகிறது.
"இடு செவ்வாய் கதிர்கூடி எங்கு இருந்தாலும் இவளும் வாலிபம் தன்னில் அமங்கலியாவாள்"
மேற்கண்ட பாடலின் கருத்துப்படி ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும் இளவயதில் விதவையாக கூடிய அமைப்பு என்று கூறப்பட்டுள்ளது.
மூல நூலில் கூறப்பட்ட இந்த கருத்தை அப்படியே நாம் எடுத்துக் கொண்டு பலன் கூறக் கூடாது .இதில் சில விதி விலக்குகள் உண்டு.
சூரியனும் ,செவ்வாயும் சேர்ந்திருக்கும் பொழுது சூரியன் அல்லது செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருக்கும் போது அல்லது சூரியன் மற்றும் செவ்வாயுடன் வேறு ஏதேனும் கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது இயற்கைச் சுபக்கிரகமான குருபகவான் பார்வை படும் பொழுது மேற்கூறிய பலனை தருவதில்லை.
ஒரு ராசி கட்டத்தில் இணைந்திருக்கும் சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் உடன் புதன் அல்லது சுக்கிரன் அல்லது குரு சேர்ந்து இருக்க பலனியில் மாற்றம் ஏற்படுகிறது.
சூரியனுடன் ,புதன் பகவான் சேரும்பொழுது
" புத ஆதித்ய யோகத்தை" தருகிறது.இவ்வகை சேர்க்கை மிகுந்த யோகத்தை தருகிறது.
இந்த சேர்க்கை சாதகரை கற்றவனாக அல்லது சான்றோனாக மாற்றுகிறது. பல பட்டங்கள் படிக்கக்கூடிய யோகத்தை தருகிறது.
ஒரு ராசி கட்டத்தில் இணைந்திருக்கும் சூரியன் மற்றும் புதனுடன் குரு அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் சேர மிகுந்த யோக பலனை சாதகருக்கு தந்து தான் கொண்ட துறையில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய புகழை தருகிறது.
சூரியன் உடன் குரு பகவான் சேர்க்கை ஆன்மிகத்தில் உயர் நிலை அடையவும், ஆன்மீகத்தின் தலைமை ஏற்றுச் செல்லக்கூடிய தலைமை பொறுப்பை சாதகருக்கு வழங்குகிறது.
சூரிய பகவானை குரு பகவான் பார்க்க அரசாங்கத்தில் அல்லது அரசியலில் உயரிய இடத்தில் அமரக் கூடிய வாய்ப்பை ஸ்தான அடிப்படையில் தருகிறது.
சூரிய பகவானுடன் சனிபகவானுடைய சேர்க்கை தொழிலில் உயர்ந்தோங்கி விளங்க சிறப்புமிக்க சேர்க்கையாக அமைகிறது.
ஆனால் அதே நேரத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான உறவு நிலையில் சிறப்பு இருக்காது.தந்தைக்கு பிள்ளை மீதோ அல்லது பிள்ளைக்கு தந்தை மீதோ ஒருவித பாசம் தன்மை இல்லாது இருக்கக் கூடிய சூழலை தருகிறது.
சூரியனுடன், ராகு சேர்க்கை கிரகண தோசத்தை தருகிறது. இது அரசாங்கத்தின் பணிகளில் அடையாமல் தடுக்கிறது. தந்தையின் வளர்ச்சியை பலவீனப்படுத்துகிறது ஒரு சிலருக்கு அதன் தசா புத்திகளில் தந்தையை இழக்கக்கூடிய சூழ்நிலை தருகிறது.
சூரிய பகவான் உடன் கேது பகவான் சேர்க்கை சாதகருக்கு நம்பகத்தன்மை இல்லாத சூழ்நிலை தருகிறது. ஆன்மீக ஞானத்தை தருகிறது. இதன் மீது குருபகவானின் பார்வை ஒரு நல்ல ஆன்மீக தலைவரை உருவாக்கியுள்ளது.
ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் சேர்க்கை இல்லற சுகத்தைப் திருப்திகரமாக அனுபவிக்க இயலாது. இயற்கை சுப கிரக பார்வை பலனில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
சூரியனுக்கு இருபுறமும் சுப கிரகங்கள் இருப்பது சூரியனை பலப்படுத்தி அதன் திசை புத்திகளில் யோக பலனை தருகிறது.
ஒரு ஜாதகத்தில் சூரியனும், சிம்மலக்கனமும் பலம் பெற்ற அமைப்பில் இருப்பின் அரசாங்க உயர் பதவிகளிலும் மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சாதகருக்கு வழங்குகிறது.
சூரியனுக்கு இரண்டு புறமும் பாவ கிரகங்கள் இருப்பது "பாப கர்த்தாரி யோகம்" பெற்று அதன் தசை விளக்கக்கூடிய காலங்களில் ஆயுள் பங்கத்தை சாதகருக்கு தருகிறது.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
masterastroravi@gmail.com
............
No comments:
Post a Comment