மேஷம் முதல் மீனம் வரை குரு பார்வை தரும் பலன்கள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவருடைய ஜாதகத்தில் இயற்கை சுப கிரகம் என்று அழைக்கக்கூடிய குரு பகவான் மிக முக்கியமான கிரகமாகும். இவர் ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றி வருகிறார்.
ஒரு மனிதனுக்கு பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தரக்கூடிய ஒரே கிரகம் இயற்கை சுப கிரகமான குரு பகவான் ஆவார்.
குருபகவான் தனக்காரகன் என்றும், புத்திர காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. குரு பகவான் பாவ கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலும் குறிப்பாக சனி அல்லது ராகு உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது மிகவும் பலவீனம் அடைகிறார். குருபகவான் இயற்கை சுபக்கிரகமான வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது மிகுந்த பலத்தை அடைகிறார்.
"குரு பார்க்க கோடி நன்மை" என்பார்கள். ஒரு ஜாதகத்தில் குரு பகவான் ஆனவர் சனி ,செவ்வாய் ,ராகு, தேய்பிறை சந்திரன், பாவியுடன் சேர்ந்த புதன் போன்ற பாவ கிரகங்களுடன் சேராமலும் பாவ கிரகங்களுடைய பார்வையை பெறாமலும் உள்ள குரு பகவானை பங்கப்படாத குரு பகவான் ஆகும் .
இவ்விதமாக பங்கம் அடையாத ஒரு பகவான் தங்களது பார்வையால் பார்க்கும் இடங்கள் எல்லாம் நல்ல வலுப்பெற்று அதற்குரிய ஆதிபத்திய மற்றும் காரக பலனை சிறப்பாக தரக்கூடிய நிலையை உண்டாக்கும்.
குரு பார்த்த கிரகங்களுடைய தசைகள் நடக்கும் பொழுது அந்த கிரகத்திற்குரிய ஆதிபத்திய மற்றும் காரக பலன்களை சிறப்பாக ஜாதகருக்கு அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் கொடுக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பங்கமடையாமல் லக்கினத்தை பார்த்தால் அவர் நல்ல தேக ஆரோக்கியம் உடையவராகவும் ,நல்ல சிந்தனை படைத்தவராகவும் ,பிறருக்கு உதவக்கூடிய எண்ணம் படைத்தவராகவும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்க கூடிய வல்லமை படைத்தவராகவும் திகழ்வார்.
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்தால் தனம், வாக்கு ,குடும்பம் , கல்வி ஆகிய மூன்றையும் உயர்வடையச் செய்வார். கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியவராகவும் நல்ல படிப்பாளியாகவும் குடும்ப உறவுகளில் ஆர்வம் உடையவராகவும், பெருந்தனம் ஈட்டக் கூடியவராகவும் இருப்பார்.
குரு பகவான் வலிமை பெற்ற நிலையில் சகோதரஸ்தானம் என்று அழைக்க கூடிய மூன்றாம் இடத்தை பார்க்கும் பொழுது சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும், நல்ல சகோதரனை உடையவனாக இருப்பான்," தம்பி உடையான் படைக்கு அஞ்சான் "என்ற வகையில் நல்ல உதவிகள் சகோதரர் வழியாக கிடைக்கும் .கீர்த்தி, புகழ், அந்தஸ்து மற்றும் நல்ல கற்பனை உணர்வுகள் மிக்கவராகவும் நல்ல எழுத்து ஆற்றல் படைத்தவராகவும் திகழ்வார்.
குரு பகவான் மாணவர் சுக ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய நான்காம் இடத்தை பார்க்கும் பொழுது தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் ,
வண்டி வாகன சுகம், நல்ல வீட்டை கட்டி அதன் மூலம் கிடைக்கக்கூடிய சுகம் ஆகியவை சிறப்பாக சாதகருக்கு கிடைக்கும்.
குருபகவான் தனது பார்வையால் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய மற்றும் புத்திர ஸ்தானத்தை பார்க்கும் பொழுது பூர்வ புண்ணிய சொத்துக்கள் மூலம் ஆதரவு, நல்ல புத்திரர்களை பெறக்கூடிய தன்மை படைத்தவராகவும், நல்ல புத்தியால் பிழைக்கக் கூடியவராகவும் விளங்குவார்.
குரு பகவான் மட்டும் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஆறாம் இடத்தை பார்வை செய்ய கூடாது. இவ்வாறு பார்வை செய்வதா கடன் பெருகும் ஆனால் அதே நேரத்தில் அதை சுபகலனாக இருக்கும் பிணி வந்தாலும் கிருபார்த்த நிலையில் இந்த வியாதி ஓரளவு குணப்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் எதிரிகள் மூலம் தன வரவு உடையவராக திகழ்வார்.
குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய தனது வாழ்க்கை துணையை அமைக்கக்கூடிய ஸ்தானத்தை பார்வை செய்யும் பொழுது நல்ல மனைவியை உடையவராக அல்லது நல்ல கணவனை படைத்தவராகவும் இருப்பார். கணவன் அல்லது மனைவி மூலம் நல்ல காம சுகத்தை அனுபவிக்க கூடியவராகவும், முறையான காமத்தை துய்வித்து நல்ல தேக ஆரோக்கிய உடையவராகவும் திகழ்வார் .நல்ல நண்பனை பெற்றவராகவும் நண்பர்கள் மூலம் கூட்டுத் தொழில் செய்து வருமானத்தை பெருக்குவராகவும் இருப்பார்.
குருபகவான் ஆயுஸ் தானம் என்று அழைக்கக்கூடிய எட்டாம் இடத்தை பார்வை செய்யும் போது நீண்ட நெடிய ஆயுளை உடையவராகவும் ,அதே நேரத்தில் எட்டாம் இடம் அதிக சுப தன்மை பெறக்கூடிய நிலையில் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாரியக்கூடிய யோகம் படைத்தவராகவும் ,வீண் வம்பு சண்டை, வழக்கு போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாதவராகவும்,அவ்வாறு மாட்டியே கொண்டாலும் அதிலிருந்து விடுபட்டு மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பபவராகவும் இருப்பார்.
குருபகவான் பாக்கிய ஸ்தனமான ஒன்பதாம் இடத்தை பார்க்கும் பொழுது நல்லா பாக்கியம் பெற்றவராக கல்வி மூலம் ,தந்தை மூலம் ,பெற்ற பிள்ளைகள் மூலம் நல்ல பாக்கியம் படைத்தவராக திகழ்வார் பாக்கியம் என்பது நல்ல முழு சுகம் பெறக்கூடிய நிலை ஆகும். தான தர்ம குணம் பெற்றவராகவும் கல்வி சேவை ஆற்ற கூடியவராகவும் கல்வி நிலையங்களை வைத்து நடத்தக்கூடியவராகவும் அன்னசத்திரம் வைத்து அறுசுவை அன்னதானம் செய்யக் கூடியவராகவும் பல தேசங்கள் சுத்தி வரக்கூடிய தேசாந்திர யோகம் பெற்றவராகவும் திகழ்வார்.
உங்களுடைய ஜாதகத்தில் குரு பகவான் தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது போதகராக அடுத்தவர்களுக்கு போதிக்கக்கூடிய ஆசிரியராக , மேடை மீது ஏறி பேசக்கூடியவராக ,ஆன்மீக தத்துவ விசாரணைகள் செய்பவராக, நல்ல ஒயிட் கலர் ஜாப் மூலமாக சம்பாதிக்க கூடியவராக திகழ்வார். ஆலோசனை வழங்குவதாக மந்திரியாக நல்ல நீதிபதியாக புரோகிதம் செய்யக் கூடியவராக திகழக்கூடிய தன்மை உடையவராக இருப்பார்.
குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தை பார்வை செய்யும் பொழுது நல்ல லாபத்தை பெற்றவராகவும், அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் மகாதன யோகம் பெற்றவராகவும், தான் சம்பாதிக்கக்கூடிய சொத்துகள் அனைத்தும் நேரிய வழியில் சம்பாதிக்க கூடிய ஆற்றல் படைத்தவராகவும் ,
மறு தாரம் செய்யக்கூடிய அமைப்பு படைத்தவராகவும், மூத்த சகோதரர் ஆதரவு படைத்தவராகவும் திகழ்வார் தான் மேற்கொண்ட தொழில் வழியாக நல்ல லாபம் அடையக் கூடியவராக இருப்பார்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் சுபத் தன்மையடைந்து 12-ஆம் இடத்தை பார்வை செய்யும் பொழுது நல்ல சுப செலவு செய்பவராகவும் ,நல்ல நித்திரை படைத்தவராகவும் ,நல்ல படுக்கை சுகம் உடையவராகவும் ,கடல் கடந்து சென்று பொருளீட்டி பெரும் தனம் படைத்தவராகவும் விளங்குவார்.
நல்ல மரணம் அவரை தேடி வரும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment