Friday, 25 October 2024

ஒருவர் ஜாதகத்தில் மகிழ்ச்சியான காலகட்டம் எது?

 ஒருவர் ஜாதகத்தில் மகிழ்ச்சியான காலகட்டம் எது?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  மனித மனம் எவ்வளவு வந்தாலும் நிறைவு கொள்ளாது . 

சில ஆயிரங்களை மட்டுமே சம்பாதித்து கொண்டுள்ள  ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட லட்சங்களை அடைந்தால் போதும் என்று எண்ணத் தோன்றும், அந்த லட்சத்தை நெருங்கியவுடன் அதைத் தாண்டி வசதியாக உள்ளவனை பார்த்து மனம் ஏங்க வைக்கும் .


      சைக்கிள் வண்டியே இல்லாதவன் முதலில் சைக்கிள் வாங்கினால் சந்தோஷப்படுவான் . அந்த சந்தோசம் எதிர் வீட்டுகாரன் பைக்  வாங்கியவுடன்  போய் விடுகிறது.பிறகு பைக்கை வாங்கிய பிறகு எப்போ கார் வாங்க போகிறோம் என்ற கவலை எழுகிறது. இவ்வாறாக ஒன்று கிடைத்தால் மற்றொன்றை நோக்கி மனம் ஏங்க தோன்றுகிறது .


  ஒன்று கிடைக்கும் வரை  அதற்காக ஏங்கி கிடைத்தவுடன் அதை கொண்டாடி, பிறகு அடுத்த ஒன்றுக்காக மனம் ஏங்கி கவலைப்படுவது மனித மனம் ஆகும்.


         இது போன்ற காலகட்டத்தில் ஜாதகத்தின் அடிப்படையில் மகிழ்ச்சியான காலகட்டம் எது ?  என்பதை பற்றி ஆய்வு செய்து பார்ப்பதை இந்த பதிவு நோக்கமாக கொண்டுள்ளேன்.


  ஒருவர் ஜாதகத்தின் அடிப்படையில் மகிழ்ச்சியான காலகட்டம் எது ?  என்பதை ஆராய்ந்து பார்க்க முதலில் லக்கனத்தில் இயற்கை சுப கிரகம் நின்று அல்லது இயற்கை சுப கிரகம் தொடர்பு பெற்று லக்கனாதிபதி வலிமை அடைந்த நிலையில் இருக்க  வேண்டும்.


       லக்னமும் அதன்  அதிபதியையும் வலிமை அடைந்து ‌ இருந்தால்தான் அந்த மகிழ்ச்சியான காலகட்டத்தில் அவரால் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க இயலும்.


   ‌ உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரக்கூடிய காலம் எது என்பது உங்களுக்கு நடக்கக் கூடிய தசா புத்தி மற்றும் கோச்சார பலன்கள் சார்ந்து அமைகிறது.


   ஒருவர் ஜாதகப்படி திரி கோண அதிபதிகள் (1,5,9)  தசைகள் பாவர் தொடர்பு இன்றி இயற்கை சுப கிரகங்கள் பார்வையை பெற்று தசை நடத்த கூடிய கால கட்டத்தில் ஒருவர் மிகுந்த சந்தோஷத்தினை அனுபவிக்க கூடிய காலகட்டமாக உள்ளது.


 வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகமான குரு, புதன் மற்றும் சுக்கிரன் இருந்து மேலும் இயற்கை சுப கிரக தொடர்பை பெற்று தசை நடத்த கூடிய கால கட்டத்தில் ஒருவர் ஜாதகத்தில் மிகுந்த யோகத்தை அள்ளித் தரக்கூடிய கால கட்டம் ஆகும்.


     இயற்கை சுப கிரகமான குரு மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய‌  இரு சுப கிரகங்கள் தொடர்பு பெற்ற தசை நடக்க கூடிய கால கட்டத்தில்  ஒருவர் மிகுந்த சந்தோஷத்தினை அனுபவிக்க கூடிய கால கட்டம் ஆகும்.


  கேந்திர மற்றும் கோண அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இயற்கை சுபக்கிரக தொடர்பை பெற்று தசை நடத்த கூடிய கால கட்டத்தில் ஒருவர் மிகுந்த சந்தோஷத்தினை அனுபவிக்க கூடிய காலகட்டமாக அமைகிறது.


 இதே போல குரு அணியைச் சேர்ந்த மேஷம், விருச்சகம் ,கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனம் ஆகிய லக்கனங்களில் பிறந்தவர்களுக்கு பாவ கிரக தொடர்பு இன்றி இயற்கை  சுப கிரக தொடர்பு பெற்ற சூரிய ,சந்திர, செவ்வாய் மற்றும் குரு தசைகள் மிகுந்த யோகத்தை மற்றும் சந்தோஷத்தை அனுபவிக்க கூடிய காலகட்டமாக அமைகிறது.


சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிஷபம், துலாம் ,மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சுக்கிரன், புதன், சனி ஆகிய மூன்று தசைகள் இயற்கை சுப கிரக தொடர்பை பெற்று தசை நடத்தக்கூடிய காலகட்டங்களில் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிக்க கூடிய காலகட்டமாக அமைகிறது.


     ஒருவர்  ஜாதகத்தில் தர்ம மற்றும் கர்ம அதிபதிகள் தசைகள் நடக்கக்கூடிய காலகட்டத்தில் தர்மா கர்மாதிபதி யோகம் பெற்ற நிலையில் இயற்கை சுப கிரக  பார்வையைப் பெற்ற சூழலில் குறிப்பிட்ட கிரக தசை நடக்கும் போது மிகுந்த சந்தோஷத்தினை அளிக்கக்கூடிய காலகட்டமாக அவை அமைகிறது.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

    097151 89647 


மற்றொரு செல்; 7402570899


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

        M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: