புத்திர பாக்கியம் கால தாமதம் ஆக காரணம் மற்றும் அதற்கு உரிய சித்த வைத்தியம்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
ஒருவர் திருமணமான உடன் ஒரு சில ஆண்டுகளில் புதுமண தம்பதிகளை சந்திக்கக்கூடிய நண்பர்களாக இருந்தாலும் சரி , உறவினர்களாக இருந்தாலும் சரி மற்றும் அலுவலகத்தில் உடன் பணிபுரிவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் கேட்கக்கூடிய முதல் கேள்வி " வீட்ல என்ன ஏதாவது விசேஷமா ? "என்று மறைமுகமாக குழந்தை பாக்கியம் பற்றிய கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
இன்றைய நவீன அறிவியல் காலத்தில் உணவு முறையினாலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் குழந்தை பாக்கியம் என்பது மிகவும் தள்ளி கொண்டு போகிறது.
இன்றைய நவ நாகரீக இளைஞர்கள் திருமண பந்தத்தில் ஈடுபடும் போது அவர்கள் செக்ஸை விரும்பும் அளவிற்கு குழந்தையை பெற்று கொள்ள விரும்பவில்லை.
கொஞ்சம் காலம் ஜாலியாக இருந்து விட்டு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் போன்ற மனநிலை காரணமாக குழந்தை பாக்கியம் கால தாமதமாகி கொண்டு செல்கிறது .
மேற்கண்ட அனைத்து காரணங்களும் மோலோட்டமாக பார்த்தால் சமூகத்தின் பார்வையில் உள்ள குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆக காரணமாக இருந்தாலும் ஜோதிட அடிப்படையில் பார்த்தால் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் மற்றும் தசா புக்தி ஆகிய இரண்டும் குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கு உரிய மிகவும் முக்கியமான காரணமாக அமைகிறது.
ஒரு திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கான காரண காரியங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அவர்கள் இருவருடைய ஜாதகத்திலும் ராசி மற்றும் லக்கினத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்த்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது சனி இருப்பதோ அல்லது ஐந்தாம் இடத்தை சனி பகவான் பார்வை செய்வது ,
ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ராகுவுடன் இணைந்து சனி பார்வை செய்வது இது போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் காலதாமதமாக மிகவும் அவசியமான காரணமாக திகழ்கிறது.
புத்திர தோஷம் என்பது நான்கு வகையாக அலசி ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.
1) குழந்தை பாக்கியம் காலதாமதமாகி கொண்டு செல்வது
2) பெண் குழந்தை மட்டுமே பிறக்கக் கூடிய நிலை
3) இரு பால் குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் எவ்வித ஆதரவும் கிடைக்காத நிலை
4) குழந்தையே பிறக்காத நிலை
மேற்கண்ட நான்கு வகைகளில் புத்திர தோஷம் உண்டாகிறது.இவற்றை ஐந்தாமிடம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய மூவரின் சுபத்துவ/பாவத்துவ படிநிலைக்கு ஏற்ப மற்றும் நடக்க கூடிய தசா புக்தி ஆகிய அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து நீங்கள் எந்த வகை என்பதை ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
புத்திர தோஷத்தில் நீங்கள் மேற்குறிப்பிட்ட நிலையில் நீங்கள் எந்த படிநிலை என்பதை கண்டறிய உங்கள் லக்கனாதிபதி மற்றும் நடக்கும் மற்றும் நடக்க இருக்கும் தசாபுத்தி ஆகியவற்றை பொருத்தும் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.
புத்திர தோஷம் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு முடிவு நிலைக்கு வர வேண்டும் எனில் தம்பதிகள் இருவரின் ஜாதகத்தையும் அவர்களுக்கு நடக்கும் மற்றும் நடக்க இருக்கும் தசா புத்திகளுடன் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.
சித்த வைத்திய முறையில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட "அக்காலத்து சித்த வைத்திய அனுபவம் முறைகள்" என்ற நூலில் இருந்து தரப்பட்ட வைத்தியம் உங்கள் பார்வைக்கு.
பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க மருந்து;
(செய்யும் முறையும், உபயோகமும்)
சுவடி மருந்து முறை
"குருபாதம் எலுமிச்சம் பழச்சாறு படி அதில் கருஞ்சீரகம் அந்த சாற்றில் உலர போட்டு
நின்றுலத்தாய் உலர்த்தி பொடி செய்து அந்த பேரிரண்டு பங்கும் கூகை நீரு ஒரு பங்கும் வட்டி சூதகமான முன்னாள் புளிச்சாங்காடி தண்ணீரில் அந்தப் பொடியை போட்டு மூன்று நாள் கொடுத்தால் கர்ப்பம் உண்டாகும்".
பாடல் விளக்கம் :-
பெண்கள் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்காலத்தில் சிலர் இருக்கிறார்கள் .ஆனால் கர்ப்பம் தரிக்காதிருக்க பல வகையான காரணங்கள் உள்ளன. இதன் நிவர்த்திக்கு மேலே சொல்லி இருக்கும் மருந்தினை அக் காலத்தில் அனுபவம் முறையில் சுவடிகளில் மூலமாக எழுதி வைத்திருக்கிறார்கள் அந்த மருந்தை விளக்கம் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் எலுமிச்சை பழத்தின் சாற்றில் நூறு கிராம் எடைக்கு கருஞ்சீரகத்தை போட்டு நன்றாக ஊற வைத்து பிறகு இதனை நிழலில் நன்கு காய வைத்து பொடி செய்து இந்த இரண்டின் அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமான அளவு எடுத்துக் கொண்டு கூகை நீர் ஒரு பங்கு அளவுக்கு எடுத்து கலந்து வைத்துக்கொண்டு பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாவது நாள் காலை எதுவும் சாப்பிடாமல் இந்த மருந்தை புளிச்சாகடித் தண்ணீரில் பத்து கிராம் பொடியை போட்டு கலக்கி உட்கொள்ளவும் இப்படி மூன்று தினங்களுக்கு கொடுத்தால் கர்ப்பம் உண்டாகும்.
பத்தியம்
இந்த மருந்தை சாப்பிடும் போது எதையும் சாப்பிடாமல் மருந்து சாப்பிட்ட நான்கு மணி நேரம் கழித்து சுவைக்கு தகுந்தார் போல் உணவு சேர்த்துக் கொள்ளலாம் .இதற்கு பத்தியம் வேறு எதுவும் இல்லை.
இவை தவிர இரண்டாவது மருந்து செய்யும் முறை
1)சிற்றாமணக்கு எண்ணெய்- அரைலிட்டர்
2) கரு நொச்சி சாறு -அரை லிட்டர்
3)கையாந்தகரை- 1/2 லிட்டர்
4)எலுமிச்சை பழச்சாறு -அரை லிட்டர்
5)நல்ல பசுவின் நெய் -ஒரு லிட்டர்
6) மிளகு ஐம்பது கிராம்
7) பெருங்காயம்- 50 கிராம்
8)நெருஞ்சி விதை- 50 கிராம்
மேற்கண்ட சாறு வகை ,எண்ணெய்,நெய் இவைகளை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மற்ற இதர மிளகு, பெருங்காயம் ,நெருஞ்சி விதை இவைகளை இடித்த பொடியை எண்ணெய் சாறு கலவையில் போட்டு இந்த கலவையை அடுப்பில் வைத்து லேசான தீயிட்டு எண்ணெய் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
சாப்பிடும் அளவு
மூன்று நாளைக்கு ஒரு சின்ன கரண்டி (15 மி.லி)
காலம்:
மூன்று நாட்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும்.
குறிப்பு :
வீட்டு விலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாளிலிருந்து முதல் மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும் காலை வேலையில் தான் இந்த மருந்தை கொள்ள வேண்டும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கர்ப்பம் தரிக்கும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே எண் :
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment