சனி பகவான் கெடுதல் மட்டுமே தரக்கூடிய கிரகமா?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
ஒரு ஜாதகத்தில் சனி பகவான் என்றாலே அதிக கெடு பலனை தரக்கூடிய கிரகமாகவே நாம் பார்க்கிறோம் .வீட்டில் ஒழுங்காக வேலை பார்க்காமல் தொல்லை கொடுக்கக் கூடிய பையனை கூட நாம் " சனியன் புடிச்சவனே "என்று அழைக்கின்றோம்.
சனி பகவான் அந்த அளவுக்கு கடுமையான கஷ்டங்களை கொடுக்கக்கூடிய கிரகமாகவே நாம் பார்த்தாலும் சனி பகவானும் சில நேரங்களில் ஜாதகரை உயரிய பதவியில் அமரக்கூடிய நிலையை உருவாக்கி தருகிறது.
சனி பகவான் அதிக சுபத்துவமாக
ராசி லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்கள் உடன் தொடர்பு கொள்ளும் போது சாதகரை வழக்கறிஞராக மாற்றி தருகிறது.
சனி பகவான் குருவுடன் இணைந்து சுபத்தன்மை அடையும் பொழுது கலப்படம் இல்லாத ஆன்மீகத்தில் உயரிய நிலையில் அடையக்கூடிய தன்மையை தருகிறது.
சனி பகவான் கேதுடன் இணையும் பொழுது சூட்சும வலுப்பெற்று ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் மாறுகிறது..
சனிபகவான் இருக்கும் இடத்தையும் பார்வை செய்யும் பாவங்கள் மற்றும் கிரகங்களை அதிக பாவத்தன்மை அடைய வைத்து கடுமையான கெடுபலனை அதன் தசைகளில் தர வைக்கிறது என்றாலும் சில நேரங்களில் அந்த சனி பகவானை குருபகவான் பார்த்த நிலையில் அல்லது இயற்கை சுப கிரகங்களான தனித்த புதன்,
சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் இணையும் பொழுது அப்படியே ஜாதகருக்கு முற்றிலும் நல்ல பலனை தரக்கூடிய ஒரு கிரகமாக மாறி அந்த தசைகளில் ஜாதகருக்கு நல்ல பலனை தரும் கிரகமாக மாறுகிறது.
சனி பகவான் ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு அதன் தசை காலங்களில் அதிக யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக அமைகிறது. இதேபோல மகரம் மற்றும் கும்பம் லக்கனங்களுக்கு லக்கனாதிபதி என்ற வகையில் ஜாதகருக்கு சில நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அடைகிறது அவரே லக்ன யோகராகவும் செயல்படுவார் .இதேபோல கன்னி லக்னங்களுக்கு சத்ரு ஸ்தான அதிபதியாக இருந்தாலும் அவரே லக்ன யோகராகவும் செயல்படுகிறார்.
சனி பகவான் அதிக சுபத்துவமான நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கனரக வாகனங்களை இயக்குதல், ஆட்டோ மெக்கானிக் ,ஆட்டோமொபைல் விமானங்களை இயக்குதல் ஏரோநாட்டிக் இன்ஜினியர் குடிக்க இயலாத பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் போன்ற திரவங்களை விற்பனை செய்பவர் போன்ற வகையிலான நல்ல பலனை தரக்கூடிய நிலையினை அடைவார்.
சனி பகவானை கர்மகாரகன் என்று அழைக்கிறார்கள். நீதி வழங்கக்கூடியவராக இருப்பவரும் சனி பகவான் ஆவார். சனி பகவான் மனித வாழ்வில் உன்னத நிலை அறிந்து கொள்ளக்கூடிய கிரகமாகும்.
சனி பகவான் மனிதனுக்கு நிறைய கஷ்டங்களைத் தந்து அதன் மூலம் உறவு என்பது என்ன ? நட்பு யார் ? உண்மையாக நம்மிடம் பழகக்கூடியவர் யார் ? நமக்கு கெடுதல் தர காத்திருப்பவர் யார்? வாழ்வில் தாழ்ந்து போனால் சந்தோஷ் படுபவர் யார்?
இது போன்ற பல்வேறு விஷயங்களை அதன் தசை காலங்களிலும் அல்லது புக்தி காலங்களிலும் மற்றும் ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற கோச்சார காலங்களிலும் நம்மை புரிய வைப்பவர் வாழ்வில் நிதர்சனமான உண்மைகளை தெரிந்துகொள்ள வைக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான் ஒருவரே ஆவார்.
நன்றி.
Online Astro Consultation
வாட்ஸ் அப் & செல் &. கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment