Friday, 25 October 2024

உங்களுக்கு பண வரவு குறைவா? அல்லது குழந்தை பாக்கியம் கால தாமதமா?-சரியான பரிகாரம்

 உங்களுக்கு பண வரவு குறைவா? அல்லது குழந்தை பாக்கியம் கால தாமதமா ? -சரியான பரிகாரம்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    குரு பகவான் ஒரு ஜாதகத்தில் பகை கிரகமாக இருந்தாலும் அல்லது பாவ தன்மையுடன் இருந்தாலும் மிகப் பெரிய கஷ்டத்தை சாதகருக்கு கொடுத்து விடுவதில்லை.


" கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப குரு பகவான் செயல்படுவார்.


 குரு நீசம் பெற்றாலும் அதற்குரிய காரக மற்றும் ஆதிபத்திய பலனை நிச்சயமாக மிகக் குறைந்த அளவிலாவது தந்து விடுவார் . எனவே தான் குரு பகவான் புத்திர காரகன் என்ற வகையில் அவை நீசம் பெற்றிருந்தாலும் நிச்சயம் ஒரு குழந்தை பாக்கியத்தையாவது கொடுத்து விடுவார். கட்டாயம் ஒரு பெண் குழந்தையாக தந்து விடுவார்.


குருபகவான் நீசம் பெற்ற நிலையில் பாவத்தன்மையும் அடைந்திருந்தால் மட்டுமே அதாவது குரு பகவான் மகர வீட்டில் நீசம் பெற்று ராகு, சனி போன்ற பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது நீசம் பெற்ற குரு பகவான் ராகுவோடு சேர்ந்து சனி பகவானால் பார்க்கப்பட்டாலோ குரு பகவான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி அதனுடைய ஆதிபத்திய அல்லது காரகபலன் இரண்டையும் தராமல் போய் விடுவார்.


 குருபகவான் ரிஷப மற்றும் துலா லக்னங்களுக்கு பகை கிரகமாக செயல்படுகிறது. இதே போல மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு எதிர் தன்மை படைத்த கிரகமாக செயல்படுகிறது.


 மகர மற்றும் கும்ப லக்னங்களுக்கு சம தன்மை படைத்த கிரகமாக செயல்படுகிறது.


  மேஷம், விருச்சகம், கடகம் மற்றும் சிம்மம் இலக்கனங்களுக்கு நட்பு கிரகங்களாக செயல்படுகிறது.


  குருபகவான் தனுசு மீனம் ஆகிய இரண்டில் ஆட்சி வீடாகவும் ,

கடக வீட்டை உச்ச வீடாகவும் ,

மகர வீட்டை நீசவீடாகவும் கொண்டுள்ளது குரு பகவான் எப்பொழுதும் லக்னத்தில் திக் பலத்தையும் அதற்கு நேர் எதிரான ஏழாம் இடத்தில் நிஷ் பத்தையும் பெறுகிறார்.


  குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக் கொள்கிறார்.

 புதிய ராசியில் நுழைந்த குரு நல்லது கெட்டது களை இரண்டு மாதம் கழித்து தான் தருவார். ஒரு நாளைக்கு ஆறு கலை தூரம் நடப்பார். ஒரு நட்சத்திர பாதத்தை கடக்க ஒரு மாதம் 10 நாள் 33 நாழிகை 20 வினாடி எடுத்துக் கொள்வார்.


 குரு பகவான் சூரியன் இருக்கக்கூடிய வீட்டிலிருந்து ஐந்தாம் வீட்டில் வக்கிரம் ஆரம்பித்து ஒன்பதாம் வீட்டில் வக்கிர நிவர்த்தி ஆவார்.


  குரு பகவான் சூரியனை ஒரு பத்து அல்லது பதினொரு பாகைக்குள் இருக்கும் பொழுது அஸ்தமனம் அடைகிறது. இவ்வாறு அஸ்தமம் அடைந்த குரு பகவான் தனது பலத்தை சூரியனிடம் இழக்கிறது. எனவே சூரிய தசை சாதருக்கு நல்லவைகளை தரும். குரு தசை சுமாராகத்தான் இருக்கும்.


 குருபகவான் ஒருவருக்கு புத்திர பாக்கியத்தை தரக்கூடியவராகவும் மற்றும் தனத்திற்கு காரகராகவும் செயல்படுகிறார்.


    குரு பகவான் உடன் சனி அல்லது ராகு நெருக்கமாக எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணையும் பொழுது அல்லது குரு பகவான் நீசம் அடைந்து ராகு நெருக்கமாக இணைந்து சனி பகவான் பார்த்தாலும் , சனி நெருக்கமாக இணைந்து செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் குரு பகவான் பலவீனம் அடைந்துள்ளார் என்று பொருள் எனவே குருவை ஆக்டிவேட் செய்ய குருவுக்குரிய சில பரிகார பூசைகளை செய்ய வேண்டும்.


 மேற்கண்ட வகையில் குரு பகவான் பலம் இழந்து இருந்தால் அல்லது பாவத்தன்மை அடைந்திருந்தாள் நீங்கள் செய்ய வேண்டியது வியாழக்கிழமை குருவுக்கு உகந்த கிழமையாகும் அன்று குரு ஓரையில் குரு பகவானுக்கு பொன்னிற ஆடைகளை அணிவித்து கொண்டைக்கடலை அவித்து நைவேத்தியம் செய்து முல்லை மலர் சாத்தி பரிகார பூஜை செய்ய வேண்டும்.


  குருவின் வாகனமான யானைக்கு உணவு ஆதாரமான கரும்பு,வாழை பழம் ஆகியவற்றை தானம் செய்யலாம்.


    குரு ஸ்தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் ,ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபட குரு பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும்.


 தினந்தோறும் வியாழன் அன்று குரு ஓரையில் குரு மந்திரம் சொல்லி வர குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் பீடைகள் விலகி தன யோகத்தையும் நல்ல புத்திர பாக்கியத்தையும் ஜாதகருக்கு வழங்கும்.


நன்றி.


Online Astro Consultation 

வாட்ஸ் அப் & செல் &. கூகுள் பே & போன் பே

 

  097151 89647 


மற்றொரு செல்; 74025708999


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

         M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


(

No comments: