Monday, 28 October 2024

யாரால் சாதிக்க முடியும்?

 யாரால் சாதிக்க முடியும்?





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் ஒரு முகப்பட்ட மனதால் ஒரு செயலை செய்யும் போது நிச்சயமாக அந்த செயலில் வெற்றி காண இயலும்.பரந்து விரிந்து கிடக்கும் சூரிய ஒளியை ஒரு குவி லென்சு கொண்டு குவிய செய்யும் போது அந்த லென்ஸ் வழியாக சென்ற சூரிய ஒளியானது ஒரு குறிப்பிட்ட ஒரு பொருளை பற்றி எரிய செய்வது போல் ,நம் அலை பாயும் மனதை கண்ட இடங்களில் அலைய விடாமல் ஓரே விஷயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தும் போது நிச்சயமாக நாம் மேற்கொள்ளும்  அந்த செயலில் வெற்றியை ஈட்ட இயலும்.


  மனதை அலை பாய விடாமல் ஒரே விஷயத்தில் ஈடுபட  எல்லோராலும் இயலாது.சாதனையாளர்களால் மட்டுமே தனது மனதை கையாள தெரியும்.


இந்த பிரபஞ்சத்தில் நாம் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் நமக்குள் ஒரு நேர்மறை எண்ணங்கள் நம் மனதில் எழ வேண்டும்.


முதலில் நம்மால் முடியும் என்று விடாப்பிடியாக முயற்சி செய்தால் நிச்சயமாக அந்த முயற்சி நம்மை வெற்றிக்கனியை பறிக்க வைக்கும்.


எல்லோராலும் முதல் முயற்சியிலே வெற்றி பெற்று விட முடியாது. அவ்வாறு முதல் முயற்சியிலே வெற்றி பெற வேண்டுமாயின் அதற்குரிய ஜாதக அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும். அதற்கு நடக்கக்கூடிய தசா புத்திகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். லக்கனாதிபதியும் வலிமை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


உங்கள்  ஜாதகத்தில் லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அல்லது வேறு இடங்களில் நின்று வலிவு பெற்ற நிலையில் இருந்தாலும் அல்லது லக்கனாதிபதி பாவ கிரகமாக இருந்தாலும் லக்னத்தில் இருந்தால் சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பு பெற்று அல்லது வேறு இடங்களில் நின்றாலும் இயற்கை சுப கிரகமாக பார்வை அல்லது சேர்க்கை பெற்றுள்ள  நிலையில்  இருக்க வேண்டும்.


பொதுவாக ஒருமுகப்பட்ட மனதிற்கு உங்கள் ஜாதகத்தில் மனநிலை காரகன் சந்திரன் உடைய நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. சந்திரன் நீசம் அல்லது பகை பெற்று நின்றிருந்தாலும் சந்திரனை சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது சந்திரனை சனி சம சப்த்தமாக பார்த்தாலும் மனதளவில் பாதிப்பு இருக்கும் உறுதியான மனநிலை அற்றவர்களாக தேவையில்லாமல் தன்னை குழப்பிக் கொள்பவராக இருப்பார்.


 சில நேரங்களில் மன நிலை காரகன் சந்திரன் மற்றும் லக்கனாதிபதி ஆகிய இரண்டும் வலிமை பெற்று இருந்தாலும் நடக்கும் தசா புக்தி சரியாக இல்லாத நிலையில் தாம் மேற்கொண்ட காரியத்தில் சாதிக்க இயலாமல் போய் விடுவது உண்டு.ஆம் லக்கன அவ யோக தசை அல்லது நடப்பு தசை பாவ கிரகமான ராகு,சனி சேர்க்கை அல்லது சனியின் பார்வை பெற்ற நிலையில் அந்த தசையும் யோகத்தை தர இயலாத நிலையில் என்ன தான் அறிவாளி அல்லது திறமைசாலியாக இருந்தாலும் சாதிக்க இயலாமல் போய் விடுவது உண்டு.


சில நேரங்களில் சில துறைகளில் அறிவும் திறமையும் அதிகமாக இல்லாத சூழலில் இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்று விடுவதற்கு காரணம் அவர்களுக்கு அந்த காலகட்டத்தில் சாதகமான யோக தசை நடப்பில் வருவதால் அந்த நேரத்தில் அவர்கள் மேற்கொள்ளும் காரியம் எளிதில் கைகூடி சாதனை மனிதர்களாக சமூகத்தில் மாறி விடுவது உண்டு. இதனால் தான் 

   "வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்லையே !

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லையே!! "

 என்று ஒரு படத்தில்  சந்திரபாபு பாடியது ஞாபகத்துக்கு வருகிறது.


     "எதற்கும் கால நேரம் வேண்டும்" என்று பெரியோர்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம் .அதே போல சாதிக்கத் துடிக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனும் உமக்கான தக்க யோக தசை எது  ? என்று தெரிந்து கொண்டு அந்த தசை எந்த காலகட்டத்தில் வருகிறது என்பதையும் புரிந்து கொண்டு உமக்கு எந்த காரியத்தில் முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என்பதையும் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக  ராசி லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களில் தொடர்பு கொண்டு உள்ளது என்பதை கண்டறிந்து அந்த  அந்த கிரகம் தொடர்புடைய முயற்சிகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக செய்ய கட்டாயம் நீங்கள் சாதிக்க இயலும். சாதனை மனிதன் ஆக மாற முடியும்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: