உன் வாழ்க்கை நிலையினை முடிவு செய்வது எது ?-உதாரண ஜாதக விளக்கம் .
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் பிறந்ததிலிருந்து கஷ்டப்படக்கூடிய அமைப்பு இருப்பதற்கு காரணம் அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி உடைய வலிமை மற்றும் மேலும் நடக்கக்கூடிய கசாப்புத்திகள் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
ஒருவர் ஜாதகத்தில் தொடர்ந்து அவயோகத்தை தரக்கூடிய தசா புத்திகளாக வந்தாரல் அவர்கள் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், முயன்றாலும் முன்னேற்றம் காண இயலாத நிலையை அடைந்து விடுகிறார்.
ஒரு சிலருக்கு தொடர்ந்து அவயோக தசைகள் வந்தாலும் அவரை சுப கிரகங்கள் பார்க்க சில கஷ்டங்களை கொடுத்து அந்த கஷ்டத்திலிருந்து முன்னேறி வரக்கூடிய அமைப்பை சாதக பெற்று விடுவார்.
கீழே கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில்
பிறந்த தேதி: 30 நவம்பர் 1997
பிறந்த நேரம்: மாலை 04 .05 pm
மேஷ லக்னம்
விருச்சக ராசி
கேட்டை நட்சத்திரம் முதல் பாதம்.
இந்த ஜாதகத்தில் முதலில் நாம் பார்க்க இருப்பது லக்கனம் மற்றும் லக்கனாதிபதியுடைய நிலை ஆகும். லக்கனாதிபதியின் வலிமையை பொருத்தே ஓர் ஜாதக பலன் அமைகிறது.
மேஷ லக்கனாதிபதியான செவ்வாய் பகவான் லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்தில் அதாவது திரிகோணத்தில் சுக்கிரன், புதன் ஆகிய இரண்டு சுப கிரகங்களுடன் சேர்ந்திருப்பதால் ஒரளவு கல்வி பயிலும் அமைப்பினை பெற்று உள்ளார்.பிறப்பிலிந்து 14.06.18 ஆண்டுகள் புதன் தசையே நடப்பில் இருந்ததால் கல்வி பயிலும் அறிவை ஜாதகருக்கு கொடுத்தது.இதனை தொடர்ந்து வந்த சுக்கிரன் தசையும் வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க கூடிய நிலையினை தந்தது.
வெளிநாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கு 8 மற்றும் 12ஆம் இடம் சுப தன்மை பெற்றிருக்க வேண்டும். அதாவது எட்டாமிடத்தில் தேய்பிறை சந்திரன் நீசம் பெற்ற நிலை மற்றும் அமாவாசைக்கு அடுத்த நாள் பிறந்த நிலை. வேறு எந்த வகையிலும் சுபத்தன்மை அடையவில்லை பன்னிரண்டாம் இடத்தில் சனி பகவான் செவ்வாயில் பார்வை பெற்ற நிலையில் இருப்பதால் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பி வரக் கூடிய நிலையை தரும்.
என்னதான் இவர் படித்திருந்தாலும் இவர் படித்த படிப்பை வைத்து இதுவரை பொருளீட்ட முடியாத நிலையில் உள்ளார் இதற்கு காரணம் லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதியான செவ்வாய்
சனி பகவானுடைய தனது பத்தாவது பார்வையில் பெற்றிருப்பதால் ராசி. மற்றும் லக்கணம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்க கூடிய நிலையில் சாதகர் இல்லை.
இவை மட்டுமில்லாத இவருக்கு பிறப்பிலிருந்து தொடர்ந்து வரக்கூடிய தசை அவயோகத் தசையாகவே உள்ளது.
அதாவது லக்கினத்திற்கு 12-ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் சுக்கிரன் ,புதன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றையும் பார்வை செய்து பாவ தன்மையை அடைய வைத்துவிட்டார் .செவ்வாய் பகவான் ஆனவர் தனது நான்காம் பார்வையால் சளியை பார்வை செய்கிறார்
இவ்வாறு செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்ற நிலையில் புதன் மற்றும் சுக்கிரன். ஆகிய இரண்டும் மிகவும் பாவ தன்மையை அடைந்து விட்டது.
புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டும் சனி , செவ்வாய் தொடர்பு பெற்ற நிலையில் எவ்வித யோகத்தையும் தர முடியாத நிலையில் உள்ளது. இடையில் வந்த கேது தசையில் சனியின் வீட்டில் இருப்பதால் கேது பகவான் சனியை போல செயல்படுவார்.எனவே லக்னத்திற்கு பாவ கிரகம் சனி என்பதால் கேது திசையில் நல்ல பலனை தரவில்லை.
சுக்கிர திசையோ இவருக்கு 41 அரை வயது வரை நடக்க இருக்கிறது அடுத்து வரும் சூரிய சந்திர தசைகளும் அமாவாசை அமைப்பில் இருப்பதாலும் அதனை தொடர்ந்து வரும் செவ்வாய் தசையும் செவ்வாய்,சனி தொடர்பில் இருப்பதாலும் நல்ல பலனை தர போவதில்லை. எனவே மிகப்பெரிய யோகங்களை தரப்போவதில்லை.
இது ஒரு கர்ம பலன் ஆகும் .நல்லா படித்திருந்த நிலையிலும் தனது அறிவை பயன்படுத்தி சம்பாதிக்க இயலாத நிலையில் ராசி மற்றும் லக்கனாதிபதியுடைய வலிமை குறைந்த பாவத்துவ நிலை மற்றும் பிறப்பிலிருந்து தொடர்ந்து வரக்கூடிய தசையும் அவ யோகத்தை தரும் தசைகளாகவே இருப்பதால் பிறப்பு முதல் இறப்பு வரை
வாழ்வு முழுவதும் பெரிய அளவிற்கு பொருளீட்டி சந்தோஷத்தை அடையக்கூடிய அமைப்பு இந்த ஜாதகத்தில் இல்லை.
எனவே உன் வாழ்க்கை நிலையை முடிவு செய்வது ராசி மற்றும் லக்கன அதிபதி மற்றும் தொடர்ந்து வரக்கூடிய தசா புக்தி அமைப்புகள் ஆகும். கோச்சார அமைப்பு கூட தசா அமைப்பு நன்றாக இருக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்பை தந்து விடுவதில்லை.
நன்றி!
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment