Monday, 28 October 2024

 கிரகணதோஷத்தால் உயரிய பதவியில் அமர முடியாத ஜாதகம்.

(உதாரண ஜாதக விளக்கம்)






செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


பிறந்த தேதி: 28.10 .1985

பிறந்த நேரம்: 9.50 am


ஜென்ம லக்னம்: தனுசு 

ஜென்ம ராசி: மேஷம் 

ஜென்ம நட்சத்திரம் :அஸ்வினி இரண்டாம் பாகம்.


  எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கனம் லக்கனாதிபதி, ராசி மற்றும் ராசி அதிபதி பலம் இழந்து விடக்கூடாது. கீழே கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு நீசம் பெற்று 12-ஆம் இடத்தில் உள்ள சனியால் மூன்றாம் பார்வையால் பார்க்கப்படுகிறார் . 


எனவே லக்கன அதிபதி பலம் இழந்து விட்டார் .லக்னத்தை செவ்வாய் நான்காம் பார்வையால்   பார்வை செய்கிறார். ராசியில் சந்திரனுடன் ராகு நெருக்கமாக இணைந்து செவ்வாய் பகவான் தனது எட்டாம் பார்வையால் பார்க்கப்படுகிறார்.

இவ்வாறாக லக்கனம் ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலம் இழந்து விட்டது .


   இவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்துள்ளார். ஐப்பசி மாதம் பௌர்ணமி அமைப்பில் பிறந்து இருந்தாலும் அன்று கிரகண தோஷம் ஏற்பட்டதால்,  இந்த பௌர்ணமி யோகம் மிகப் பெரிய அரசியல் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை தர வேண்டிய இந்த யோகமானது இந்த கிரகண தோஷத்தால் மின்சார துறையில் லயன் மேன் ஆக வேலை பார்க்கக்கூடிய ஒரு வேலை அவருக்கு கீழ்மட்ட வேலை கிடைத்துள்ளது. சுபத்துவ‌ படிநிலைக்கு ஏற்பவே பதவி அமையும் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரண ஜாதகம் ஆகும்.


மேலும் இவருக்கு 38  வயதை கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கான காரண காரியங்களையும் இந்த பதிவில் ஆராய்ந்து பார்ப்போம் .


    இவருடைய ஜாதகத்தில் லக்னம் ராசி இரண்டும் கெட்டுவிட்டது.இதேபோல லக்கன அதிபதியும் மற்றும் புத்திர காரகன் ஆன குரு பகவான் நீசம் அடைந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்ப அதிபதியான சனி பகவான் 12ஆம் இடத்தில் மறைந்து மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தையும் மற்றும் குரு பகவானையும் பார்வை செய்து பாவ தன்மையை அடைந்து  விட்டார்.


   சந்திரனுடன் ராகு அதாவது ராசியில் ராகு ஏழாம் இடத்தில்  அரை பாவரான சூரியன் ,கேது சேர்க்கை 


    ராசிக்கு இரண்டு மற்றும் ஏழுக்கு உடைய சுக்கிரன் நீசம் அடைந்து பாவ கிரகமான செவ்வாய் உடன் சேர்க்கை.


தாம்பத்திய உறவை  தரக்கூடிய சுக்கிரன் நீசம் அடைந்து செவ்வாயுடன் சேர்க்கை அடைந்து பாவத்தன்மையடைந்து இருப்பதும் , புத்திர காரகன் குருபகவான் நீசம் அடைந்து சனி பகவானால் பார்க்கப்பட்டதும் திருமண காலதாமதம் ஆவதற்கான காரண காரியங்கள் ஆகும்.

மேலும் லக்கினத்திற்கு ஏழாம் இட அதிபதி அதாவது களத்திர ஸ்தான அதிபதி யான புதன் பகவான் 12ஆம் இடத்தில் மறைந்து சனியுடன் இணைந்து இருப்பது.


மேற்கண்ட காரணங்களான  ராசி, லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, ஏழு எட்டாம் இடங்கள் பாதிக்கப்பட்ட நிலை திருமணம் கால தாமதத்திற்கு காரணமாக அமைகிறது.


 இவருக்கு திருமணம் ஆவதற்கான சாத்தியக்கூறு உண்டா  ? என ஆராய்ந்து பார்த்தால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு பகவான் சனியால் பார்க்கப்பட்டு நீசம் அடைந்த நிலையில் இருந்தாலும் அதனுடைய 9ஆம் இடப்பார்வை தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும்  செவ்வாய் மீது விழுவதால் நிச்சயமாக செவ்வாய் தசையில் திருமணம்  நடக்கும். அதாவது 40 வயதுக்கு மேல் திருமணம் நடக்கும் என்று சொல்லி அனுப்பினேன்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்

)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: