Sunday, 27 October 2024

 உங்கள் ஜாதகத்தில் மூளையாக செயல்படும் கிரகம் எது?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


 

      ஒரு தனி மனிதனுடைய திறமைக்கும் நுண்ணறிவுக்கும் மற்றும் படைப்பாற்றலுக்கும் காரண கர்த்தாவாக விளங்கக்கூடிய மிக முக்கியமான கிரகம் எது என்றால் புதன் பகவான் ஆவார் .


      புதன் பகவான் மற்றவர் சிந்திக்கும் திறனிலிருந்து மாறுபட்டு சிந்தித்து புதிய ஒன்றைப் படைக்கும் படைப்பாற்றல் மிக்கவராக மற்றும் ஒரு கண்டுபிடிப்பாளராக விளங்குவார்.


 ஒருவர் என்றும் இளமையாக இருப்பதற்கும் மற்றும் மனதை புதுமையாக வைத்துக் கொள்வதற்கும் புதன் பகவானுடைய பங்கு என்பது அலாதியானது.


புதன் பகவான் கணினியை இயக்கி இணையத்தில் கொடி கட்டி பறக்கவும் முடியும் கவிதையை படைத்து கதை எழுதி கற்பனை உலகில் பறந்து செல்லவும் இயலும்.


 இயல், இசை மற்றும் நாடகம் என்று முத்தமிழிலும் ஒருவர் புகழ்பெற்று விளங்க முத்தமிழ் வித்தகராக திகழ ஜாதகத்தில் புதன் பகவான் உடைய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்..


 பாடலை இயற்றி இசையை ரசிக்கும் ஒரு திறமை மிகு ரசிகனாக விளங்க புதன் பகவான் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


   புள்ளி விவரங்களை தேடுதல், கணித அறிவில் சிறந்து விளங்குதல், ஜோதிடத்தில் வித்தகனாக திகழ புதன் பகவான் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


 புதன் பகவான் மனித மூளையாக செயல் படக்கூடிய கிரகம் ஆகும். சாஸ்திரங்களை மற்றும் சம்பிரதாயங்களையும் படைக்கக்கூடிய தன்மை படைத்தவராகவும் காவியங்களையும் இலக்கண இலக்கியங்களை படைப்பதற்கும், மற்றும் படிப்பதற்கும் மற்றும் அதன் மீது ஆர்வம் உண்டாவதற்கும் புதன் பகவான் உடைய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.


 ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து செயல்படுவதற்கும் , சிக்கலான புதிர்களை அவிழ்ப்பதற்கும், பிரச்சனைகளை தீர்வு கொடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும் செயல்படக்கூடிய கிரகம் தான் புதன் பகவான் ஆவார்.


 மற்றவர் செல்லும் பாதையில் செல்லாமல் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி சமூகத்தில் தனக்கென ஒரு புதிய இடத்தை உருவாக்கிக் கொள்பவர் புதன் பகவானை வலிமையாக பெற்ற ஜாதகர் ஆவார்.


 விண்வெளியில் ஆராய்ச்சிக்கும் புதிய ஒன்றை கண்டுபிடிக்கும் திறன் படைத்தவராகவும் விளங்க புதன் பகவான் மிகவும் அவசியமான கிரகம் ஆகும்.


 புதன் பகவான் ஆனவர் மிதுனம், கன்னி ரிஷபம், துலாம் ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு லக்கன யோகராக செயல்படக்கூடிய கிரகமாகும்.

சிம்ம அதிபதி சூரியனுக்கு அதி நட்பு கிரகமாகும்.


 புதன் சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்களாக செயல்படுகிறது.


புதன் பகவான் சூரியன் உடன் அல்லது சூரியனுக்கு இருக்கக்கூடிய இடத்திற்கு முன்பின் ஒரு ராசிகளில் இருக்கக்கூடிய கிரகமாகும். எனவே புதன் பகவான் ஒரு உள்வட்ட கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


 வளர்பிறை சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் வலிமை பெற்று நின்ற நிலையிலும் அல்லது இயற்கை சுப கிரகமான குரு பகவானுடைய பார்வையை பெற்ற நிலையிலும் அந்த புதன் பகவான் அதிக சுப தன்மையை பெற்று புதனுடைய காரகத்துவமான படிப்பினை படிக்கக்கூடிய நபராக செயல்படுவார்.


   கணினி பேராசிரியர்,வங்கி ,நிதி துறை வேலை, கணித பேராசிரியராக திகழ்தல், மேடைகளில் ஏறி பேசக்கூடிய தனித்திறன் ,புள்ளி விவரங்களை தரக்கூடிய புள்ளியல் நிபுணத்துவம்,பாடல் ஆசிரியர் ,இசை அமைப்பாளர்,ஆர்ட் டைரக்டர், எடிட்டிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்றவை புதன் சார்ந்த துறைகளாக விளங்குகிறது.


  இனையத்தை பயன்படுத்தி மார்கெட்டிங் துறையில் சிறந்து விளங்குதல்,சமூக ஊடகங்களை பயன்படுத்தி புகழ் பெறுதல் போன்றவை புதன் பகவான் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.


புதன் பகவானை பலமான அமைப்பில் பெற்றவர்கள் ஆடிட்டர்,செய்தியை சேகரிப்பவர், சமூக ஊடகங்களையும் மற்றும் இணையத்தை பயன்படுத்தி மார்கெட்டிங் துறையில் சிறந்து விளங்க கூடிய அமைப்பு அனைத்தும் புதன் பகவானை தனது ஜாதகத்தில் வலிமையாக பெற்றவர்கள் ஆவார்.


மேஷம் மற்றும் விருச்சக லக்னங்களுக்கு புதன் பகவான் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் புதன் பகவான் இருக்கக்கூடிய இடத்தை பொறுத்து நல்ல பலனை தரக்கூடிய நிலையிலும் விளங்குகிறது.


மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் ஆறாம் இடத்தில் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று நிற்பதை விட மூன்றாம் இடத்தில் நின்று ஆட்சி பெற்று இருக்க கூடிய நிலையில் அதன் தசை வர கூடிய காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது. இதே போல விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் இருப்பதைவிட பதினொன்றாம் இடத்தில் லாப ஸ்தானத்தில் இருந்தால் அதன் தசை வர கூடிய காலங்களில் ஜாதகருக்கு மிகுந்த யோக பலனை தருகிறது.


  மேற்கண்ட வகையில் இந்த யோகத்தை தருவதற்கு கீழ்க்கண்ட விதி அடிப்படையிலே புதன் பகவான் ஆனவர் ஜாதகருக்கு மேஷம் , விருச்சிகம் லக்னத்திற்கு அதன் தசையில் நல்ல பலனை தருகிறது. பாவத் பாவக அமைப்பின் படி ஒரு கிரகம் இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகமாக இருந்தால் எந்த ஆதிபத்தியத்தோடு அதிகமாக தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த பலனை அதிகமாக தரும் அமைப்பை பெறுகிறது.


புதன் பகவான் உங்கள் அறிவுக்கும் மற்றும் உணர்வுக்கும் மூளையாக செயல்படக்கூடிய கிரகமாக விளங்குகிறது.புதன் வலிமை பெற்று பாவத்துவம் அடையாமல் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட நிலையில் மனிதனை அறிவாளியாக மாற்றி அழகு பார்க்கிறது.


 புதன் பகவான் தனது சுபத்துவ படிநிலை க்கு ஏற்ப ஒரு மனிதனை அறிவாற்றலால் அகிலத்தை ஆளக்கூடிய மனிதனாக ஒருவரை மாற்றுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: