Monday, 28 October 2024

அதிகாரம் மற்றும் ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் பொளர்ணமி யோகம்

 அதிகாரம் மற்றும் ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் "#பெளர்ணமியோகம்".




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  யோகங்களில் முதன்மையானது என்று சொல்லப்போனால் என்னை பொறுத்தவரை பௌர்ணமி அமைப்பில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் ஆவார். 


 சூரியன் இருக்கும் வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு நேராக வரக்கூடிய காலகட்டத்தில் அதாவது சம சப்தமாக சந்திக்கக்கூடிய காலத்தில் பௌர்ணமி உருவாகிறது. இது நிறை மதி சந்திரன் ஆகும் .இந்த நேரத்தில் பிறக்க கூடியவர்கள் மிகுந்த ஒளி மிகுந்த ஆட்சியாளர் மற்றும் அதிகாரத் தோரணை மிக்கவர்களாகவும் தன்னில் அடங்கிய சித்த புருஷர்களாகவும் பிறக்கக்கூடிய நிலை உண்டு.


   இவ்வாறு பௌர்ணமி அமைப்பில் பிறந்திருந்தாலும் அந்த நேரத்தில் சந்திர கிரகணம் அல்லது சூரியன் அல்லது சந்திரனுடன் சனி அல்லது ராகு சேர்ந்திருக்கக்கூடிய நிலை இல்லாத நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு சேர்த்து இருக்க கூடிய நிலையில் சந்திர கிரகணம் அல்லது பாவ தன்மை அடைந்து இந்த பெளர்ணமி யோகம் சிறப்பாக வேலை செய்யாமல் போய் விடும்.இந்த அமைப்பில் லக்கனாதிபதியும் பலம் இழந்து அல்லது பாவ தன்மை அடைந்தால் பெளர்ணமி யோகம் முழுமையாக வேலை செய்யாமல் போய் விடுகிறது.


இவ்வாறு ‌மேற்கூறிய வகைகளில் பங்கம் அடையாத பெளர்ணமி அமைப்பில் பிறந்தவர்கள் ஜாதகர் அரசாங்க உயரிய பதவி அல்லது அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை அதன் தசை வரக்கூடிய காலங்களில் ஜாதகர் பெறுவார்.


     ஒவ்வொரு மாத பௌர்ணமி அமைப்பும் இந்துக்களின் முக்கிய பக்தி வழிபாட்டுக்கு உகந்த ஒரு முக்கிய தினமாக அந்த மாதத்தில் கருதப்படுகிறது.


    சித்திரை மாதத்தில் பௌர்ணமி அமைப்பில் "#சித்ராபௌர்ணமி" கொண்டாடப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது.


வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரத்தில் #வைகாசிவிசாகம் மிக முக்கியமான பௌர்ணமி அமைப்பாகும்.


ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி அரசு ஆளக்கூடிய பௌர்ணமி ஆகும் . இதனை விளக்கும் உண்மையான பழமொழி ஒன்றை பார்ப்போம். அதாவது"#ஆனிமூலம் அரசாளும் கன்னி மூலம் நிர்மூலம் என்பது தான் உண்மையான பழமொழி ஆகும். இதைத்தான் நாம் கிராமங்களில் "ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர் மூலம்" என்று மறுவி வந்த பழமொழியை கூறி பல பெண்களின் திருமண வாழ்வில் பாதிப்பை உண்டாக்கி உள்ளோம்.இங்கு கன்னி என குறிப்பிடுவது புரட்டாசி மாத மூலம் நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால் அந்த குடும்பத்தை பாதிக்கும் என்பது ஆகும்.எனது அனுபவத்தில் வெறும் நட்சத்திரத்தை மட்டுமே வைத்து கொண்டு ஒரு மனித வாழ்வினை முடிவு செய்து விட இயலாது.


ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிக விசேஷமான பௌர்ணமி ஆகும்.இது #ஆவணிஅவிட்டம் என கொண்டாடப்படுகிறது.


  கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி அன்று #கார்த்திகைதீபம் தரும் நன் நாளாக கொண்டாடப்படுகிறது.இது அண்ணாமலையார்க்கு உகந்த விஷேச தினமாக கொண்டாடப்படுகிறது.


    தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிக சிறந்த பௌர்ணமி ஆகும் அன்று #தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.


பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி விசேஷ பௌர்ணமி ஆகும் இன்று #பங்குனிஉத்திர திருவிழா நடக்கிறது .இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.


மேற்கண்ட வகையிலான பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியவான்கள் இவர்கள் தெய்வ கடாட்சம் மிக்க மகிழ்வாகவும ஆணையிடும் மற்றும் அரசியலில் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை பெற்றவராகவும் திகழ்வார்கள். சில சித்த புருஷர்களாகவும் இருப்பது உண்டு.


பௌர்ணமி அமைப்பில் முழுமையான ஒளி அளவை அடிப்படையாகக் கொண்ட யோகமாகும் .இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் செய்யக் கூடியவர்களாகவும் ஆட்சி புரிந்தவர்களாகவும் ஆட்சி மன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் அரசியலில் உயரிய பதவி அமரக்கூடிய யோகம் படைத்தவராகவும் திகழ்வார்கள்.


பௌர்ணமியை நெருங்குகுகின்ற சந்திரன் அல்லது பௌர்ணமியை விட்டு விலகுகின்ற சந்திரன் ஆகிய இரண்டு சந்திரனின் நிலையும் வளர்பிறை சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை அறிய வேண்டும்.


  விருச்சக லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தவராக இருந்தால் சந்திரன் உங்களுக்கு பாக்கிய அல்லது தர்ம அதிபதியாகவும் சூரியன் உங்களுக்கு கர்ம அல்லது ஜீவன அதிபதியாகவும் வருகிறார். எனவே விருச்சக லக்கினத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி யோக அமைப்பில் பிறந்திருந்தால் அவர்களுக்கு பௌர்ணமி யோகமும் தர்ம கர்மாதிபதி யோகமும் இணைந்து செயல்பட்டு சாதகரை உயரிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்.


இதேபோல வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகமான குரு ,புதன் மற்றும் சுக்கிரன் இருந்தாலும் #சந்திரஅதியோகம் எனப்படும் மிகப்பெரிய யோகத்தை ஜாதகருக்கு அந்த தசை காலங்களில் கொடுக்கிறது. இதே தேய்பிறை சந்திரனாக இருந்தால் இந்த யோகம் வேலை செய்யாது அதேபோல வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் சந்திர அதியோகம் வேலை செய்யாது.


   கடக வீட்டில் ஒரு கிரகம் நிற்க அந்த கிரகம் நல்ல பலனை தர வேண்டும் எனில் அந்த சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும் .அவ்வாறு இருந்தால் அது தசை காலங்களில் மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கும். மாறாக தேய்பிறைச் சந்திரன் சேர்ந்தவனாக இருந்தால் வீடு கொடுத்தல் வலிமை மிகக் குறைவு என்ற வகையில் சராசரி வாழ்க்கை மனிதனுக்கு தரும்.


   ஒரு கிரகத்துடன் வளர்பிறை சந்திரன் சம சப்தமாக பார்த்தாலும் அல்லது வளர்பிறை சந்திரனுடன் சேர்ந்தாலும் அந்த சேர்க்கை அல்லது பார்வை பெற்ற கிரகங்கள் உடைய தசை மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கும். வளர்பிறை சந்திரன் உடனான சேர்க்கை அல்லது பார்வை இன்னொரு குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற சுப தன்மைக்கு சமமாக இருக்கும்.


  ஒருவர் ஜாதகத்தில் பங்கம் அடையாத பௌர்ணமி யோகம் பெற்று லக்கனாதிபதி இயற்கை சுபக்கிரமாக இருந்து லக்கனத்தையோ அல்லது லக்கனாதிபதியையோ இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை செய்தாலும் அந்த ஜாதகர் மிகுந்த யோகம் படைத்த சாதகராக திகழ்வார்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: