Wednesday, 29 November 2017

சாதக பலன் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை --(1)

சாதக பலன் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவை -( 1 )


                               
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 132 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                  ஒரு மனித வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாட்டினை ஆராய்ச்சி முறையில் ஆராய்ந்து பலன் சொல்லும் முறையை சோதிட ஆர்வலர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலான பதிவு.

             ஒருவரது சாதகத்தில் பலன் பார்க்கும் போது முதலில் லக்கனம் மற்றும் அதன் அதிபதியை கவனிக்க வேண்டும். லக்கனாதிபதிதான் ஒருவருடைய சாதகத்தில் ஒரு மனிதனை வழிநடத்தும் கேப்டன் ஆவார்.லக்கனாதிபதியானது உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் ,வர்க்கோத்தமம் மற்றும் நட்பு என்ற வகையில் பலம் பெற்றிருக்கிறதா ? என கவனிக்கப்படவேண்டும்.

                 அவை மட்டுமல்லாது அவை என்ன நட்சத்திர சாரம் வாங்கி உள்ளது.அந்நட்சத்திர சாரத்தின் அதிபதியானது லக்கனாதிபதிக்கு நட்பாக உள்ளதா ? என கவனிக்கப்பட வேண்டும்.

                சார அதிபதி லக்கனாதிபதிக்கு  நட்பாக இருக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும்.மேலும் லக்கனாதிபதியோடு சேர்ந்துள்ள மற்றும் பார்க்கும் கிரகங்களையும் கவனிக்கப்பட வேண்டும்.

             மேலும் லக்கனத்தில் உள்ள கிரகங்களின் தன்மையையும் கவனிக்கப்படவேண்டும்.இந்த லக்கனத்தில் இருக்கும் மற்றும் லக்கனாதிபதியோடு சேர்ந்திருந்த மற்றும்,பார்க்கும் கிரகங்கள் யாவும் லக்கனாதிபதிக்கு நட்பாக இருக்கவேண்டும்.

                  லக்கனாதிபதியானவர் அம்சத்தில் எவ்வாறு இருக்கிறார் என்ற வகையில் லக்கனாதிபதியின் வலிமையானது நிர்ணயிக்கப்படுகிறது.ராசியில் லக்கனாதிபதியானது பலவீனப்பட்டு இருந்தாலும் அம்சத்தில் பலமடைந்து இருந்தால் அந்த லக்கனாதிபதியானது பலமடைந்துள்ளது என பொருள்படும்.
இதேபோல ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பின் வர்கோத்தமம் ஆகும்.இதனால் அக்கிரகமானது உச்ச பலனை பெறும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

                லக்கனாதிபதியானது சில நேரங்களில் நீசமடைந்து இருந்தாலும் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சபலம் பெற்று நின்றால் நீசபங்கம் பெற்றிருக்கும்.மேலும் லக்கனாதிபதியானது சந்திர கேந்திரமடைந்து இருந்தாலும் அவை நீசபங்கமடைந்து பலமடைந்து இருக்கும்.எந்த ராசியில் நீசமடைந்து இருந்தாலும் அந்த வீட்டு அதிபதியானது உச்சமடைந்து இருந்தாலோ அல்லது ராசியில் நீசமடைந்த அதே கிரகம் அம்சத்தில் பலமடைந்து இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் பெற்று பலமடைந்துவிடும்.

           இதுபோன்ற பல விவரங்களை கவனிககப்ப்டவேண்டும்.
லக்கனாதிபதி நிற்கும் ஸ்தானத்தை கவனிக்கப்பட வேண்டும்.லக்கனாதிபதியானது சுபராக இருப்பின் அவை கேந்திரங்களில் நிற்க கூடாது.ஏனேனில் கேந்திராதிபதி சுபராக இருந்து கேந்திரங்களில் நின்றால் "கேந்திராதிபத்தித தோஷத்தை "தந்து அதன் பலனை குறைத்துவிடும்.

                  எனவே கேந்திர சுபர் மறைவிடங்களில் அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது நல்லது எனினும் லக்கனாதிபதி மறைவுஸ்தானமேறுவது நல்லதல்ல.
இதேபோல பல விஷயங்களை கவனித்து லக்கனாதிபதியின் பலம் நிர்ணயிக்கப்படவேண்டும்.இதன்பிறகு நடைபெறும் ஜெனன கால திசையானது லக்கனாதிபதிக்கு நட்பாக இருப்பின் நற்பலனை தரும் .

            இதற்கு அடுத்தப்படியாக சந்திரன் இருக்கும் ஸ்தானமான ராசியையும் லக்கனாதிபதியாகவே கொண்டு பலனறிய முயலவேண்டும்.லக்கனாதிபதிக்கு பார்த்த அதே விதிமுறைகளையே ராசிக்கும் மற்றும் ராசியாதிபதிக்கும் கவனிக்கப்படவேண்டும்.

             ஒருவருக்கு சாதகபலன் கணிக்கும்போது லக்கனம் மற்றும் ராசி இரண்டையையும் அடிப்படையாக வைத்து சாதகபலன் கவனிக்கப்படவேண்டும்.லக்கனம் மற்றும் ராசி இரண்டையும் வெவ்வேறாக கொண்டவர்களுக்கு திசைபலன் பார்க்கும்போது நடைபெறும் திசையானது ராசிக்கட்டத்தில் என்ன ஸ்தானம் ? என்பதையும் மற்றும் நடைபெறும் திசையின் கிரகமானது சாதகத்தில் எவ்வாறு பலமடைந்திருக்கிறார் ? என்பதையும் கவனிக்கபடவேண்டும்.

              மேலும் நடைபெறும் திசைக்குரிய கிரகமானது என்ன நட்சத்திர சாரம் பெற்றுள்ளது ? என்பதையும் நட்சத்திர அதிபதியானது நடைபெறும் திசைக்கும் மற்றும் லக்கன அதிபதிக்கும் நட்பாக உள்ளதா ? என்பதை போன்ற பல விவரங்கள் ஆராய்ச்சி முறையில் கவனிக்கப்படவேண்டும்.

              அடுத்தபடியாக தனம் ,வாக்கு மற்றும் நேத்திர ஸ்தானமான இரண்டாமிடத்தை எவ்வாறு ஆராய்ந்து பலனளிக்கவேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பலனறியும் முறை தொடரும்...

(தங்களது குடும்ப அங்கத்தினருக்கு ஜெனன சாதகம் கணித்தல் , சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் போன்ற சேவைகளை கட்டண முறையில் #போன்வழியாகவே பலன் பெறலாம்.
தாங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )

தொடர்புக்கு

செல்
740 257 08 99
     97 151 89 647

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

                           
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
      M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My website
  AstroRavichandransevvai.blogspot.com

No comments: