கிரகங்கள் படுத்தும் பாடு- (7)
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
ஒரு மனிதனை கிரகங்கள் எவ்வாறு வழிநடத்துகிறது என்ற கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து பதிந்து வருகிறேன்.படித்து பயன் பெறவும்.
ஒரு சிலர் நன்கு படிப்பதற்கும் ,நல்ல கல்வியாளர்களாக மாறுவதற்கான காரணத்தை ஆய்ந்து பார்க்கும் போது அவர்களது ஜாதகத்தில் கல்விக்காரகர்களான வித்தைக்காரன் புதன் ,பதவி மற்றும் பட்டங்களை தரக்கூடிய குரு பகவான் ,மற்றும் மனதை அரசாட்சி புரியும் சந்திரன் போன்ற கிரகங்கள் வலுப்பெற்று இருந்தால் சிறந்த கல்வியாளர்களாக உள்ளார்கள்.
ஒரு மனிதனை கற்றவர்களாக மாற்றுவதில் எல்லா கிரகங்களுக்கும் முழு பங்கு உண்டு ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் வலுப்பெற்றிருக்கிறதோ அது சார்ந்த கல்வியைத் தந்து அவனை அந்த துறையில் சிறந்தவனாக மாற்றுகிறது .இப்பதிவில் எந்த கிரகங்கள் வலுப்பெற்றால் எந்த மாதிரியான கல்வி நிலைகளை மற்றும் புலமையை தரும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
முதலில் வித்தைக்காரன் புதன் பகவான் பலம் பெற்றிருந்தால் அவர்கள் சகல துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
புதன் பலம் பெற்றிருந்தால் நல்ல கணித அறிவு மேலோங்கி இருக்கும்.கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கூறியது போல "ஒருவன் கணிதத்தில் சிறந்து விளங்கினால் எல்லா துறையிலும் சிறந்து விளங்குவான் " என்பார்.
எனவே புதன் பகவான் மட்டும் ஒருவர் சாதக கட்டத்தில் பாவியோடு சேராமல் சுப புதனாகி பலம் பெற்று நின்றால் சமூகத்தில் சிறந்த ஜோதிடனாக உலா வருவான்.புதனை சந்திரன் பார்க்கும் போது கற்பனை சக்தி மிகுந்து கதை ,கவிதை மற்றும் பாடல்கள் இயற்றுவதில் வல்லவனாக மாறுவான்.
சித்திரம் வரைதல் ,சிலை அமைத்தல் போன்றவற்றில் கைதேர்ந்த நிபுணனாக திகழ்வான்.
இசை கிரகங்களான சந்திரன் ,செவ்வாய் புதனுடன் சம்பந்தப்படும்போது அழகை ஆராதிக்கும் தன்மையும் ,இசையை ரசிக்கும் தன்மையும் மொத்தத்தில் கலை ஆர்வமும் ஏற்படும்.
சிலர் சிறந்த எழுத்தராக உலா வருவதற்கு காரணம் புத பகவானே ஆகும்.
ஒருவனுக்கு நல்ல கல்வியையும்,திறமையான பேச்சையும் தருவதில் புதன் பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு.
கதை,கவிதை,கட்டுரை மற்றும் பாடல்கள் புனையும் திறனை வழங்குவதும் இவரே.
இதேபோல ஓவியம்,சிற்பவேலைப்பாடு மற்றும் சிலைவடித்தல் போன்ற நுண்கலைகளை தருபவரும் இவரே ஆவார்.
ஒருவரை சிறந்த ஆடிட்டராக ,புள்ளியல் நிபுணராக ,மருத்துவ வல்லுணராக மற்றும் கணிப்பொறியினை திறம்பட இயக்கும் நிபுணராக மாற்றுபவரும் புதன் பகவானே ஆகும்.
விஞ்ஞான அறிவு ,வாதம் செய்தல் மற்றும் வேதசாஸ்திரங்கள் படிப்பதற்கும் புதனே காரகர் ஆவார்.
இதே போல குரு பகவான் ஒருவருடைய சாதகத்தில் பலம்பெற்றிருந்தால் பெரும்பாலனோர்கள் ஆசிரியர்களாக இருப்பர்.ஒருவர் சிறந்த சொற்பொழிவாளர்களாக மாற்றி சமூக அந்தஸ்தை தருவதில் குரு பகவானின் பங்கு முக்கியமானது.
சிலர் வேத நூல்கள் ,ஆன்மீக விசாரனை மற்றும் தத்துவம் சார்ந்த நூல்களில் புலமை பெறுவதற்கும் குரு பகவானே முக்கிய காரணமாகும்.
குரு பகவான் நீதிமான் என்பதால் நீதித்துறையை சார்ந்த வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக மாற்றி அழகு பார்ப்பார்.
இதனைத்தொடர்ந்து சுக்கிரபகவான் தரும் கல்வி நிலைகளைப்பற்றி பார்ப்போம்.
ஒரு சிலர் நடனம் ,நடிப்பு போன்ற சினிமா சார்ந்த விஷயங்களில் புலமை மிக்கவர்களாகவும்,தன்னை அழகு படுத்துவதை முக்கியமாக கொண்டாதால் அழகுபடுத்துவது தொடர்பான (பேஷன் டெக்னாலஜி) துறைகளிலும் ஒருவரை ஈடுபட செய்வதில் சுக்கிர பகவானின் முக்கியமானது.
பிறரை திருப்தி படுத்தக்கூடிய ,அழகுபடுத்தக்கூடிய சார்ந்த படிப்பையும் தருவதில் சுக்கிர பகவான் முதன்மையானவர் ஹோட்டல் சம்பந்தப்பட்ட கல்வியை தேர்ந்தெடுத்து படிப்பதிலும்,வண்டி வாகனம் தொடர்பான பொறியியல் துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க செய்வதிலும் சுக்கிரபகவானின் பங்கு முக்கியமானது.இவை சித்திரம் ,சிலை மற்றும் கை வேலைப்பாடு போன்ற துறைகளில் நாட்டத்தை ஏற்படுத்தும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
Tescher & Astrologer
Om sakthi jothida nillayam
Pudukkottai Dt.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
Tescher & Astrologer
Om sakthi jothida nillayam
Pudukkottai Dt.
Cell : 97 151 89 647
Cell : 740 257 08 99
Cell : 740 257 08 99
Whatsup : 97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)
No comments:
Post a Comment