Friday, 10 November 2017

சக்தியா (பெண்தன்மை ) , சிவனா (ஆண்தன்மை ) ?

சக்தியா (பெண்தன்மை) ,சிவனா (ஆண் தன்மை) ?


                                  

கிரகங்கள் படுத்தும் பாடு


செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                  சாதகத்தில் உள்ள எல்லா கிரகங்கள் தனது உச்ச ஸ்தானத்திலிருந்து 180 பாகை தாண்டி வரும்போது நீசமாகி விடுகிறது.

                    ஒவ்வொரு  கிரகத்தின் உச்ச வீட்டை தனது லக்கனமாக கொண்டால் அது தன் குணத்தை அல்லது ஆற்றலை தனது மனைவி ஸ்தானமான ஏழாம் வீடு வரும்போது கிரகங்கள் கூட நீசமாகி விடுகிறது.
"வெளியிலே புலி ,வீட்டிலே எலி"
உண்மைதான்.எவ்வளவு வலிமை பொருந்திய வீரத்திற்கு காரணமான செவ்வாயை பாருங்கள் ஏழாம வீட்டில் நீசமாகி பொட்டி பாம்பாய் கிடக்கிறார்.

                      ஆமங்க அறிவாளி மற்றும் வேத விற்பன்னர் குரு மனைவி ஸ்தானத்திற்கு வரும்போது மனைவி சொல்வது சரின்னு நீசமாகி இருக்கிறார்.

                  சக்தி பெரியதா (பெண் தன்மை)? சிவன் பெரியதா (ஆண் தன்மை)?
ஒவ்வொறு மனிதருக்குள்ளும் இரு தன்மையும் கலந்து உருவாக்கப்பட்டதே இந்த பிண்டம்.ஆம் ஆணின் விந்து செல்லும்,பெண்ணின் அண்ட செல்லும் இணைந்து  உருவான முழுமையாக கருவுற்ற சைகோடே இந்த பிண்டம்
தம்பதிகள் கலவியில் கூடி கரு உருவாகும் போதே வான வீதியில் உள்ள கிரக கதிர்களே இம்மனிதனை ஆட்சி புரிகிறது.

                              


                   உண்மையில் ஒரு மனிதனுக்கு பிறந்த நேரத்தில் சாதகம் கணிப்பதை விட கரு உருவான நேரமே சரியான துல்லியமான நேரமாகும்.நம்மால் அவற்றை கணிக்க முடியாது.

                 எனவே ஒரு மனித கருவில் இரண்டு தன்மையும் கலந்தே உள்ளது.எந்த தன்மை விஞ்சுகிறது என்பது கருவின் உட்கருவில் உள்ள ஜீன்கள் முடிவு செய்வதாக அறிவியலும்,கிரகங்கள் முடிவு செய்வதாக சோதிடமும்,கடவுள் முடிவு செய்வதாக ஆன்மீகமும் தனது கருத்தை வெளியிட்டாலும் ஆனால் இந்த மூன்றின் பங்கும் மிகவும் முக்கியமானது.

                 அன்பால் இரு பாலருக்கும் ஒருவர் மீது ஒருவர் கவர்ச்சியும்,புணர்ச்சி கொள்வதும்,
அறிவால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீ பெரியவனா ?,நான் பெரியவனா ? ஈகோவால் யுத்தம் கொள்வதுமாக காலம் காலமாக நடப்பதும் மேற்கண்ட மூன்றின் முக்கிய பங்காகும்.

                               


             இதனால்தான் இவ்வுலக மக்கள் புரிந்து கொள்ளவே சிவனுக்கும்,சக்திக்கும் இடையே யுத்தம் நடத்தி கடைசியில் சிவனுக்குள் சக்தி அடக்கம்,சக்திக்குள் திருமண பந்தத்தால் சிவன் அடக்கும் என்பதை புரிந்து கொள்ள உமையவளை சரிபாதியாக கொண்ட அர்த்த நாரீஸ்வரர் ஆனார்.

                ஒவ்வொறு  தனிப்பட்ட ஆடவருக்குள் பெண் தன்மை மிகுந்தால் கேழையாவதும்,ஒரு பெண்ணிற்குள் ஆண் தன்மை மிகுந்தால் வீர மிக்கவளாவதும் ஆகும்.

           நமக்குள்ளும் அர்த்த நாரீஸ்வரராய் சிவ,சக்தி எனும் இரு குணங்கள் நிறைந்து உள்ளது.ஒரு ஆடவர் அறிவால் வெளியில் ஆண் தன்மையாக இருந்தாலும்,அன்பால் வீட்டில் மனைவி  முன் நீசமாகி விடவேண்டும் என்ற சூட்சும உண்மை ராசி கட்டத்தில் கிரகங்கள் காட்டும் நிலை என்ற தகவலோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

                                  

அன்புடன்

சோதிடர் ரவிச்சந்திரன்
         M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட ஆய்வாளர்

     தொடர்புக்கு

செல் ; 97 151 89 647
செல் ; 740 257 08 99

  வாட்ஸ்அப் : 97 151 89 647

(சாதகம் தொடர்பான ஆலோசனைக்கு அலைபேசியில் தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

No comments: