Tuesday, 7 November 2017

புத்திர பாக்கியம் வேண்டி செய்யவேண்டிய வழிபாட்டு முறை

புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படும் வழிபாட்டு முறை :-


                               
                புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு அருகில் உள்ள எங்கள் ஊர்  செவ்வாய்பட்டி கிராமத்திலிருந்து  என்னையும் எங்கள் ஊரை சுற்றியுள்ள எல்லா கிராம மக்களையும் அன்புடன் காத்து அருள்பாலிக்கும் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர தினத்தன்று பங்குனி உத்திர திருவிழா அதி விமர்சையாக நடைபெறும்.

                 பங்குனி உத்திர திருவிழாவன்று புதிதாக திருமணம் ஆனவர்களும்,திருமணமாகியும் பல வருடங்களாகியும் புத்திரபாக்கியம்
கால தாமதமாகிக்கொண்டு செல்பவர்களும் ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளைவேண்டி அங்குள்ள பேச்சி அம்பாள்  தெய்வத்திற்கு மதலை(பேச்சிமுத்து)  வாங்கி வைப்பதாக வேண்டிக்கொள்வார்கள்
அம்பாளின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று மறு ஆண்டு நடைபெறும் பங்குனி உத்திர விழாவன்று தம்பதி சகிதமாக குடும்பத்தோடு வந்து பிறந்த குழந்தையின் தலையில் அந்த மதலையை வைத்து மதலையில் மல்லிகை பூ சூட்டி கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் முன்பாக வைப்பார்கள்.

                    இதேபோல் ஒரு  சிலர் அம்பாளின் அருளால் குழந்தை வரம் பெற்றவர்கள் திருவிழாவிற்கு பத்து நாட்களுக்கு முன்பாக விரதமிருந்து பால்குடம் சுமத்தல்,காவடி எடுத்தல் மற்றும் கரும்பால் தொட்டிகட்டி அதில் மஞ்சளில் நனைத்த வேட்டி கட்டி அதில் குழந்தையை இட்டு தம்பதிகள் இருவரும் அவர்களுடைய வீட்டிலிருந்து சுற்றம் சூழ தூக்கி கொண்டு வருவார்கள் .

                          

                      அப்பொழுது அம்மன் பாட்டு பாடி மேள தாள முழங்க உலா வருவார்கள்.அப்பொழுது சரியான வெயில் காலம் என்பதால் ஊரே வாசல்களில் காத்திருந்து தண்ணீர் குடத்துடன் வந்து காலில் தண்ணீர் ஊற்றி பாத சூட்டை தணிப்பார்கள்.

                    ஒருவருடைய வேண்டுதலை ஏற்று குழந்தைபாக்கியம் தந்ததை புகழ்ந்து ஊரே உற்றார் உறவினரோடு கொண்டாடும் உன்னதம் பங்குனி உத்திர திருவிழாவன்று நடைபெறும்.அந்த அற்புதம் நடைபெற காரணம் அம்பாளின் மீது வைக்கும் பரிபூரண நம்பிக்கையே காரணம் ஆகும்.வாய்ப்பு கிடைப்போர்கள் வந்து தரிசித்து செல்லுங்கள்.வரவாய்ப்பில்லாதவர் அருகில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் வழிபடுங்கள்.

என்றும் அன்புடன்

     சோதிடர் ரவிச்சந்திரன்
                   M.SC,MA,BEd
Teacher & Astrogy Researcher
ஓம்சக்தி ஜோதிடநிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
    WhatsApp
   97 151 89 647
செல் : 97 151 89 647
              740 257 08 99
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் ஆப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

No comments: