கிரகங்களின் சேர்க்கையினால் மாறுபபபடும் பலன்கள்-2
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 128 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
கிரகங்கள் தனித்த நிலையில் ஒரு பலனையும் மற்ற கிரகங்களோடு சேரும்போது வேறு மாதிரியான பலன்களையும் தருகிறது என்பதை தொடர் பதிவாக பார்ப்போம்.
குருபகவான் சந்திரபகவானோடு இணைந்து " குருசந்திர யோகத்தையும் மற்றும் செவ்வாய் பகவானோடு இணைந்து "குருமங்கள யோகத்தையும் வழங்குகிறது.
குருவும் மற்றும் சந்திரபகவானும் இணைந்து தரும் குருசந்திரயோகமானது ஒருவருக்கு பொன்,பொருள் மற்றும் நல்ல மனை போன்றவற்றை சிறப்பாக தருவதோடு வீட்டில் தெய்வம் நின்று காக்கும் .மனைவி வழியில் பொருள் சேரும் .இதுபோன்ற யோகங்களை தரும் என்றாலும் எல்லா குரு-சந்திர இணைவும் நன்மையை செய்துவிடுவதில்லை.
குருவும் -சந்திரன் ஒருவரது சாதகத்தில் ஏழாமிடத்தில் இருந்தால் பாலகன் பிறந்த வீடு பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகும்.
"பால்மதியும் பரமகுருவும்
ஏழில் நின்றால் பாலகன் பிறந்த வீடு நாசமாகும்"
இதேபோல துலா ராசிக்கு குருபகவான் மூன்று மற்றும் ஆறுக்குடைய முழுப்பாவி என்பதால் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்ற குருவோடு சந்திரபகவான் இணைவதோ அல்லது பத்தாமிடத்தில் உச்சம் பெற்ற குருவுடன் சந்திரபகவான் இணைவு குரு-சந்தகரயோகத்தை தருவது கிடையாது.
குருவுடன் மங்களகாரகன் செவ்வாய் பகவான் இணைவு குரு-மங்கள யோகம் ஆகும்.குருபகவானும் மற்றும் செவ்வாய் பகவானும் நண்பர்கள் என்றாலும் கன்னி ராசிக்கு செவ்வாய்பகவான் (3,8 ) க்குடையவராக வந்து முழு பாவியாக இருப்பாக இவ்வித இணைவு கன்னிராசிக்கு சிறப்பாக செயல்படுவதில்லை.
ஒரு சாதகத்தில் சுக்கிரன்-செவ்வாய் இணைவு "பிருகு மங்கள யோகம் ஆகும.மீன ராசிக்கு சுக்கிரன் -செவ்வாய் இணைவு சிறப்பாக யோகத்தை தருவதில்லை.ஏனெனில் மீனராசிக்கு சுக்கிரன் பகவான் மூன்று மட்டும் எட்டுக்குடையவனாக வருவதால் இவ்வித 6/8 சம்பந்தம் யோகத்தை தருவதில்லை.
சூரியனுடன் இணைந்த குருபகவானோ அல்லது கேது பகவானோ ஞான நிலையை ஒருவருக்கு அளிக்க தவறுவதில்லை.
சந்திரன் பகவான் மற்றும் சுக்கிரபகவான் இணைவு அதிலும் குறிப்பாக பெண்ணின் சாதகத்தில் ஏழாமிடத்தில் இணைவு ஏற்படக்கூடாது.அவ்வாறு கூடின் கிழப்புருஷனை மணந்து மதனத்தால் பலரை கூடி யாருக்கோ பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாக கணவனுக்கு காட்டி தொட்டில் கட்டி ஆட்டுவாள் என புலிப்பானி சித்தர் தனது புலிப்பானி சோதிட நூலில் குறிப்பிட்டிருப்பார்.
சூரியபகவானோடு ராகுபகவானோ அல்லது சனிபகவானோ இணைவது தந்தை-மகன் உறவுநிலையோ சிறப்பாக அமைவதில்லை.
மனதுக்காரன் சந்திரனோடு இணையும் கேதுபகவான் ஞானத்தையும் ,ராகுபகவான் மனக்குழப்பத்தையும் தருவார்.
களஸ்திரகாரகன் சுக்கிரன் மற்றும் காமகாரகன் செவ்வாய்பகவனோடு இணையும் ராகுபகவான் மிகுந்த காம உணர்வை தூண்டி விட்டு மானம் கெட வைக்கிறார்.
குருபகவானோடு இணைந்த கேதுபகவான் ஞானநிலையை அளிக்கிறார்.அதேநேரத்தில் ராகுபகவான் மற்றும் சனிபகவான் இணைய குருசண்டாளயோகத்தை தந்து ஆன்மீகநிலையை விரும்பாதவராக மாற்றிவிடுகிறார்.மேலும் ஒருவருக்கு புத்திரதோஷத்தையும் தந்துவிடுகிறார்.
இரு கிரகங்களின் இணைவு சில நேரங்களில் பலனை அதிகப்படுத்தியும் மற்றும் சில நேரங்களில் பலனை குறைக்கவும் செய்துவிடுகிறது.
சிலநேரங்களில் சுப இணைவுகூட அந்த கிரகங்களின் ஸ்தான வலுவால் ( 6,8 )
பலனில் குறைவை உண்டாக்கிவிடுகிறது என்பதை சோதிட ஆர்வலர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இப்பதிவை உங்களோடு பகிர்கிறேன்.
பலனில் குறைவை உண்டாக்கிவிடுகிறது என்பதை சோதிட ஆர்வலர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இப்பதிவை உங்களோடு பகிர்கிறேன்.
நன்றி!
(தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் தங்களுக்கும் சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.நீங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம்.)
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
MY EMAIL
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
---------------------------------------
No comments:
Post a Comment