Tuesday, 21 November 2017

சாதக அடிப்படையில் கல்விச்செல்வம் நிறைந்தவனாக திகழ. ....

சாதக அடிப்படையில் கல்விச்செல்வம் நிறைந்தவனாக திகழ

                                 
கிரகங்கள் படுத்தும் பாடு-( 182 )

செவ்வாய்பட்டி  ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

    பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு காசு,பணம்,அந்தஸ்து என எதனை கொடுத்தாலும் அது அவனிடம்/அவளிடம் நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லை.ஆனால் கல்வி செல்வத்தை மட்டும் கொடுத்து விட்டால் அது அள்ள அள்ள குறையாது.நீரால் கரைக்க முடியாது,நெருப்பால் எரிக்க முடியாது.கள்வரால் களவாட முடியாது.கல்வி ஒன்றே கற்க கற்க அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும்.
கல்வியே அழியாச் செல்வம் ஆகும். 

இக்கருத்தினை வலியுறுத்தக்கூடிய பாடல்

"வெள்ளத்தால் அழியாது வெந் தழலால்
      வேகாது வேந்த ராலுங்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ
மிகஎளிது கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்
பொருள்தேடி யஉழல்கின் றாரே "

இதனால்தான் வான் புகழ் கொண்ட பெருநாவலார்
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றவை எவை "
   என்கிறார்.

  இங்கு மாடு என்பது செல்வம் ஆகும்.கல்வி செல்வம் ஒன்றே ஏனைய செல்வங்களிலே சிறந்த செல்வம்.கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.கற்றவருக்கு கட்டுணா தேவையில்லை .(கட்டுணா-கட்டுச்சோறு ).

          கல்வியின் சிறப்பை தமிழ் மூதாட்டி ஓளவை பாடிய பாடல்

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
  மன்னனில் கற்றோன் சிறப்புடையோன் மன்னர்க்கு
  தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"

               ஒருவருக்கு வற்றாத வளமான    கல்வி செல்வத்தை தருவதில் எல்லா கிரகங்களுக்கும் பங்கு உண்டு எனினும் அதிலும் குறிப்பாக  குருபகவான் மற்றும் புதன் பகவான் இருவருக்கும் அதீத பங்கு உண்டு.

               இவை சுப ஸ்தானம் வாங்கி பலமடைந்த அமைப்பை பெற்றவர்கள் கல்விமானாக திகழ்வர்.
  கல்வி செல்வத்தினை தனது குழந்தை பெற்று வித்தகனாக மேதினியில் வலம் வருவானா ?  என தெரிந்து கொள்ள விரும்பும் பெற்றோர்கள் அவனது/அவளது சாதக கட்டத்தில் மூன்று கட்டங்களை ஆராய்ந்து அறிவது அவசியம் ஆகிறது.

இரண்டாம் இடம்

         ஒரு குழந்தையானது வாக்குஸ்தானமான இரண்டாம் இட அதிபதியானது பாவர் கலப்பின்றி  பலம் பெற்று (அதாவது நீசம்,பகை,அஸ்தமனம்,மறைவிட அதிபதி தொடர்பு இன்றி ) நின்று வாக்குஸ்தானத்தில் சுப கிரகம் நின்று சுப கிரகங்களால் பார்க்கப்பட சாதகர் ஆரம்ப கல்வி நிலை படிப்பினை சிறப்பாக கற்று தேர்ந்திருப்பான்.

நான்காம் இடம்

           ஒருவரது சாதகத்சில் இரண்டாம் இடத்துடன் நான்காம் இடமும் சேர்ந்து பலப்பட சாதகர் உயர் கல்வியான பத்தாம் வகுப்பு ,பதினோன்று மற்றும் பணிரெண்டாம் வகுப்பு ஆகிய கல்வி நிலைகளில் நன்றாக படித்து அதிக மதிப்பெண்களை பெற்று சிறந்த மாணவனாக திகழ்வான்.

            மாறாக நான்காம் இடத்தில் அரவு குடியேறி நான்காம் இட அதிபதியும் கெட்டு நின்றால் உயர்நிலைக்கல்வியினை சிறப்பாக படிக்க இயலாத சூழல் உருவாகலாம்.

ஓன்பதாம் இடம்

    ஒருவரது சாதகத்தில் இரண்டாம் இடம், நான்காம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் இம்மூன்று ஸ்தானங்களும் பலமடைந்து தன ,லாப ,கேந்திர மற்றும் கோணம் ஏறி பாவர் கலப்பின்றி பலமடைந்து நிற்க கல்லூரி அளவிலான இளநிலை,முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை கற்றறிந்த அறிஞன் ஆவான்.

கற்ற கல்வியால் பலன் பெற

             இரண்டு,நான்கு மற்றும்  ஒன்பதாம் இட அதிபதியானது பலமடைந்து ஜீவன மற்றும் லாப ஸ்தானதிபதிகளுடன் சுப ஸ்தானங்களில் சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை அடைய தாம் கற்ற கல்வியால் பலன் பெறும் யோகம் உண்டு.

தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்று திகழ கற்ற கல்வியால் பலன் பெறும் யோகம் உண்டு.

  அரசாங்க வேலையில் அமர

          ஒருவனது சாதகத்தில் அரசாங்க காரகர் சூரியபகவான் பலமடைந்து இருக்க வேண்டும்.

   தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்று திகழவேண்டும்.

  பத்தாம் அதிபதி எந்த கிரகத்தின் சாரத்தில் அமர்ந்துள்ளார் என்பதை கண்டறியவேண்டும்.

          அரசு கிரகங்களான சூரியன்,சந்திரன் அல்லது செவ்வாய்  இவர்களின் நட்சத்திர சாரத்தில் பத்தாம் அதிபதி இருப்பது .

          சூரியன் அல்லது சந்திரன்  பத்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படுவது.
ஒன்பதாம் இடம் அல்லது பத்தாம் இடத்தில் உச்சம் அல்லது ஆட்சி பெற்ற கிரகங்கள் இருப்பது.

            பத்தாம் அதிபதி சனியின் சாரம் பெறுவது அரசு துறையில் கடைநிலை ஊழியர் வேலை பெற செய்யும்..
கல்வி கற்காத மானிடனை மரமாக ஓப்பிடுகிறார்.

          "கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்கும் அவையெல்லாம் நல்ல மரங்கள் அல்ல
சபைநடுவே நீடோழை வாசியாதவன் மரம் "

               ஒருவரது சாதகத்தில் இரண்டாம் இடத்தில் பாவர் நின்று இரண்டாம்  அதிபதி மறைவிட ஸ்தானமான ஆறு,எட்டு,பணிரெண்டாம் இடத்தில் நின்றாலோ அல்லது இரண்டாம் அதிபதி அஸ்தமனம்,பகை,நீசம் பெற்று நின்றால் சாதகருக்கு ஆரம்ப கல்வியே படிக்க முடியாத சூழல் உருவாகும்.

ஜாதக பாரிஜாதம் " என்ற நூலில்

    "நண்ணிய நாலாங் கோளன் ஆறேட்டில் பணிரெண்டில்
புண்ணியரென்ன வோடிப் புகழ் பாவர் கூட நின்றால்
திண்ணிய பாவம் பார்க்கத் திகழ பாபராசிமீதில்
பண்ணினால் வித்தையில்லான் படிக்க வராது தானே "

பாடல் விளக்கம்; 

          ஒருவரது சாதகத்தில் நான்காம் இட அதிபதி மறைவிட ஸ்தானமான ஆறு, எட்டு மற்றும் பணிரெண்டாம் இடத்தில் நின்று ,நான்காம் இடத்தில் பாவர் கூட அல்லது பார்க்க உயர்நிலை கல்விக்கு செல்ல இயலாத நிலை உருவாகிறது.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  தொடர்புக்கு

வாட்ஸ்அப்
  97 151 89 647

   செல்
     740 257 08 99
         97 151 89 647

                             
அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc ,MA ,BEd.
     சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி சோதிட ஆன்லைன்ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: