Friday, 10 November 2017

கிரக பார்வையினால் உண்டாகும் மாற்றங்கள்-( 1 )

கிரக பார்வையினால் உண்டாகும்  மாற்றங்கள்:-1


                               

"கிரகங்கள் படுத்தும் பாடு - ( 129 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                   ஒரு கிரகம் தரும் பலனை மற்றொரு கிரகம் பார்க்கும் பார்வையின் மூலம் உயர்த்தவோ அல்லது குறைக்கவோ வாய்ப்புக்கள் உண்டு.

             குருபகவான் இருக்கும் இடத்தின் பலத்தை குறைக்கும்.ஆனால் பார்க்கும் இடத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்பது பொதுவான கருத்து ஆகும்.இவற்றில் சில மாறுபாடுகள் உருவாகலாம்.""அந்தனன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும் " என்பார்கள்.

                  இன்னும் சொல்லபோனால் "குரு பார்த்தால் கோடி நன்மை " என்பார்கள்.ஆனால் குருபகவானின் எல்லா பார்வைகளும் நன்மையை செய்துவிடுவதில்லை.உதாரணமாக துலாம் ராசிக்கு முழு பாவியான குருபகவான் மீனத்தில் ஆட்சி பெற்றோ அல்லது கடகத்தில் உச்சம் பெற்றோ பார்க்கும் பார்வைகள் நன்மையை செய்துவிடுவதில்லை.

                  கடகத்தில் உச்சம் பெற்று பார்க்கும் குருபகவான் இரட்டை வேடம்  போடுகின்றன.
அதாவது கடகத்தில் இருந்து பார்க்கும் ஐந்தாம் (விருட்சக வீடு) மற்றும் ஏழாம் (மகரவீடு)  இந்த  இரு வீடுகளுக்கு இதன் பார்வைகள் நன்மையை தருவதில்லை.ஆனால் அதே நேரத்தில் ஒன்பதாம் பார்வையான தனது சொந்த வீடான மீனத்திற்கு இதன் பார்வை நன்மையை தருகிறது.

                                


                  எனவே கிரகங்கள் தனது வீட்டிற்கு எனில் தனது பார்வை ஒருவித நன்மையையையும் அதேநேரத்தில் பிற வீடுகள் (செவ்வாய் மற்றும் சனி வீடு ) எனில் ஒருவித தீமையையும் தந்து இரட்டை வேடம் போடுகின்றது.

                     அதேபோல மிதுன மற்றும் கன்னி வீட்டிற்குரிய  பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியான குருபகவான் பார்க்கும் பார்வைகளால் நன்மைகள் கிடைப்பதில்லை.

              மகர வீட்டில் நீசம் பெற்ற குருவிற்கு பார்வை பலம் குறைவு ஆகும்.

                    சனிபகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்தை அதிகம் கெடுப்பான் .இதனால்தான் சனிபகவானை வழிபடும்போது கூட நேராக நின்று வழிபடக்கூடாது என்பார்.எல்லா கோவில்களுக்கும் மற்றும் கிரகஸ்தலங்களிலும் தேங்காய் உடைத்தால் பிரசாதம் வாங்கிகொள்வார்கள்.ஆனால் சனிக்கு உடைக்கப்படும் தேங்காயை வாங்கி கொள்ளமாட்டார்கள்.தனக்கு பரிகாரம் செய்யவேண்டிய சூழலில் மட்டும் சனிபகவானை வழிபடுவார்கள்.

           கிரகங்கள் அனைத்திற்கும் ஏழாம் பார்வை உண்டு.இதில் சனிபகவானுக்கு மூன்று மற்றும் பத்தாம் பார்வையும் ,செவ்வாய்பகவானுக்கு நான்கு மற்றும் எட்டாம் பார்வையும்,குருபகவானுக்கு ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையும் உண்டு.

                               


               எல்லா கிரகங்களும் clockwise ல் சுற்றினாலும் ,அசயர்களான ராகு மற்றும் கேது பகவானும் anti-clockwise -ல் சுற்றிவருகிறது.எனவே இவற்றிற்கு வக்கிரகதி கிடையாது
     
.இக்ககரகங்கள் மூன்று மற்றும் பதினொன்றூம் பார்வை மற்றும் ஏழாம் பார்வையால்  பின்னோக்கி பார்க்கின்றன்.

             இதில் சனிபகவானும் மற்றும் செவ்வாய்பகவானும் இணைந்தோ அல்லது தனித்தனியாக இருந்து ஆனால் ஒரே இடத்தை பார்க்கும்போது பார்வைபெறும் இடத்தை கெடுத்துவிடும்.
.உதாரணமாக வாக்குஸ்தானத்தை பார்த்தால் அது அவரை பொய் ,புரட்டு நடத்தைகள் மிகுந்தவராக மாற்றிவிடும்.ஒரு சிலரை தவறையே தொழிலாக கொண்டு நடத்துபவராகவும்,வழக்கறிஞராகவும் மாற்றிவிடும்.திருட்டுதனம் மற்றும் பொய்மை மிகுந்து காணப்படும்.

               மற்றவர் நம்புபடி பேசி கழுத்தறுப்பதில் வல்லவர்.
இதே ஏழாம் இடத்தினை இருவரும் இணைந்தோ அல்லது தனிதனியாகவோ அல்லது சமசப்தமாகவோ பார்த்துக்கொண்டால் திருமண தடையை உருவாக்குவதோடு நல்ல மனைவி அமையவிடாமல் தடுப்பார்.
எட்டாம் இடத்தில் பார்வை மேற்கூறியவாரு பார்த்தால் சனி திசை செவ்வாய்புத்தியிலோ அல்லது செவ்வாய் திசை சனிபுத்தியிலோ ஆயுதத்தால் காயம்,வாகனத்தால் விபத்து போன்றவற்றை உருவாக்கலாம்.

               நான்காமிட பார்வை தன் சுகம் ,தாய் சுகம் மற்றும் கற்பு நிலை பாதிப்பை உண்டாக்கும்.ஒன்பதாமிட பார்வை கருமியாகவும் மற்றும் கஞ்சனாகவும் மாற்றும் மற்றும் பத்தாமிட பார்வை அரசு விரோத தொழிலில் ஈடுபடவைக்கும்.

தொடரும்.

(தங்களுக்கோ மற்றும் தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் பார்த்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்தநாட்டில் இருந்தாலும் பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரங்களை பெறவும் )

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

  செல்
740 257 08 99
   97 151 89 647

                                  

அன்புடன்
சோதிடர்ரவித்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராத்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
*******************

No comments: