Monday, 13 November 2017

கிரகங்கள் படுத்தும் பாடு - ( 2 )

கிரகங்கள் படுத்தும் பாடு -( 2)


                                  
ஸ்ரீபத்ரகாளியம்மன்  அருளாசியுடன்...
              மானிட வாழ்வின் குணநலன்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கிரகங்களே என்ற கருத்தின் அடைப்படையில் "கிரகங்கள் படுத்தும் பாடு "என்ற தலைப்பின் கீழ் சென்ற பதிவின் தொடர்ச்சி.

             சிலர் ஆன்மீகத்தின் மீது நாட்டமின்றி பகுத்தறிவை நம்புவர்களாகவும்,சிலருக்கு ஆன்மீக நாட்டம் மிக்கவராகவும் இருவேறு முரண்பட்ட நிலைக்கு காரணம் ஆன்மீகத்தின் காரகங்களாக உள்ள கிரகங்கள் குரு,கேது,சனி இம்மூன்று கிரகங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.

         இதில் குரு பகவான் வேத விற்பன்னர்,கேது பகவான் ஞானக்காரகர்.சனி என்பவர் நாம் செய்யும் கர்மத்தின் காரகர்.ஒருவருடைய ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் பலமிழந்த நிலையிலோ அல்லது பாவராகிய ராகு சாரம் வாங்கிய நிலையிலோ அல்லது இம்மூன்று கிரகங்களில் குரு மற்றும் சனியுடன் ராகு பகவான் சேர்ந்த  நிலையிலே
ஆன்மீக நாட்டம் அற்றவராக கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்டவராக உள்ளார்.


                            

            ஆனால் அதே நேரத்தில் இம்மூன்று கிரகங்களும்(குரு,சனி மற்றும் கேது)  பலமான நிலையில் குருவின் பார்வை சனி மற்றும் கேது பகவான்களின் மீது விழும்போது ஆன்மீக நாட்டம் மிக்கவராகிவிடுகின்றனர்.இவர்களோடு மனதிற்காரகராகிய சந்திரன் பலம் பெற்றிருப்பின் மனதை அடக்கியாளும் ஞானியாக இருப்பர்.

                   சிலர் வீம்பு பிடித்தவர்களாக விட்டுக்கொடுக்கும் மனமின்றி கடைசியில் கெட்டு போகும் பல மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம்.இதற்கு அசயர்களான வீம்புக்காரன் எனப்படும் செவ்வாயின் பங்கு முக்கியமானது.செவ்வாய் பகவானோடு இதற்கு மேலும் உறுதுணையாக இருந்து வழி நடத்திச்செல்வதில் ராகு பகவான் மற்றும் சனி பகவான்
                  இம்முக்கூட்டு கிரகங்களும் ஆகும்.இக்கிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி இருவரும் இணைந்து வாக்கு ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது வாக்கு ஸ்தானத்தை பார்த்தாலோ அவர்களது பேச்சில் விட்டுக்கொடுக்காத தன்மை மிகுந்து காணப்படும்.

                                 

             இம்மூன்று கிரகங்களும் வாக்கு ஸ்தானத்தின் அதிபதியாகவோ அல்லது வாக்கு ஸ்தானத்தில்
இருந்தாலும்  மேற்கண்ட தன்மை மிகுந்திருக்கும்.
.ஜாதக கட்டத்தில் 3,6 க்குடையவர்களாக இம்மூன்று கிரகங்களும் பலமான நிலையில் இருப்பினும் வீம்பு பிடித்தவர்களாக இருப்பார்கள்.

                 சிலருக்கு ஜோதிட ஞானம் மிக்கவராக இருப்பதற்கு காரணமான மூன்று முக்கிய கிரகங்களைப்பற்றி பார்ப்போம்.

                இதில் முதன்மையான பங்கு வகிப்பது கணிதன் என போற்றப்படும் புதன் ஆகும்.இதனை தொடர்ந்து வாக்கு பலிக்க செய்யக்கூடிய கேது ,அடுத்து ஆன்மீக அதிபதி குரு ஆகிய மூன்று கிரகங்களின் முக்கியமானது.

                              

                  இதில் புதன் ஆட்சி,உச்சம் பெற்று சுப சாரம் வாங்கி குருவின் பார்வைப்பெற்று முக்கியமாக இரண்டாமிடத்திலோ கேந்திர கோணங்களில் இருக்கும்போது புகழ் பெற்ற ஜோதிடராக மாற்றிவிடுகிறார்.மேலும் வாக்கு ஸ்தானத்தோடு கேது தொடர்பு பெறுவதும் அவர் கூறுவதெல்லாம் பலிக்கும் தன்மையை உண்டாக்கிவிடுகிறது.

                    சிலர் திருமண நாட்டமின்றியும்,மீறியே திருமணம் நடந்தாலும் தனது இணையோடு ஒத்து போகாத நிலையை தருவதற்கும் இக்கிரக நிலைகள் படுத்தும் பாடே ஆகும்.

               ஒரு மனிதரின் ஜாதக கட்டத்தில் இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடங்களில் பாவ கிரகங்களாகிய ராகு,கேது,சனி மற்றும் செவ்வாய் அமர்ந்திருந்து குடும்பாதியாக உளள கிரகமும்,ஏழாம் அதிபதியாக வரும் கிரகங்கள் நீசமடைந்தோ அல்லது பகை மற்றும் மறைவு வீடுகளில் இருந்தோ அல்லது அவர்கள் இவர்களோடு சேர்ந்தோ இருந்து பாவ கிரக பார்வை பெறுவதும் ஒரு காரணமாகும்.

                 ஆண்களுக்கு களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் மற்றும் பெண்களுக்கு களஸ்திரகாரகன் எனப்படும் செவ்வாய் ஆகிய இக்கிரகங்கள் பாவிகள் சூழ்வதோ மற்றும் பலமிழப்பதோ கூடாது.

                              

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
ஆசிரியர் & சோதிடர்
புதுக்கோட்டை மாவட்டம்


வாட்ஸ் ஆ ப் ; 97 151 89 647
செல் :
        740 257 08 99
                97 151 89 647


(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம்,மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற , தங்களது பிறந்ததேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

My email
masterastroravi@gmail.com


My blogspot
  AstroRavichandransevvai.blogspot.com


....................................................................

No comments: