Monday, 13 November 2017

கிரகங்கள் படுத்தும் பாடு--( 3 )

        கிரகங்கள் படுத்தும் பாடு -(3)


                                    
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணையொடு...
             மனித வாழ்வில் கிரகங்கள் உண்டாக்கும் விளைவினை "கிரகங்கள் படுத்தும்பாடு "என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து எழுதி வருகிறேன்.இவை நான் படித்த மற்றும் அனுபவத்தாலும்,தெய்வீக ஞானத்தாலும் பெற்ற விஸயங்களை "தாய் பறவை தான் பெற்ற உணவை வாயில் மென்று திண்பதற்கு எளிதாக குஞ்சுகளுக்கு கொடுப்பது போல கடவுளின் அருளால் நான் பெற்ற மற்றும் கற்ற சோதிட ஞானத்தை எனக்கு தெரிந்த வகையில் எளிதாக்கி உங்களோடு பகிர்கிறேன் படித்து தானும் பயன்பட்டு மற்றவர்கள் பயன்பெற பகிருங்கள்.

           சிலரைப் பார்த்தவுடன் பகைவர்கள் அஞ்சி நடுங்கி அடங்கிப்போவர்கள்.அவர்கள் இல்லாதபோது அவர்களைப்பற்றி பேசினாலும் இருக்கும் போது பயப்படும் அளவிற்கு அவர்கள் இருப்பதற்கு காரணம் அவனது சாதக கட்டத்தில் சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஆறாம் இடத்தில் அசயர்களான சூரி,செவ்வாய்,ராகு மற்றும் சனி ஆகிய கிரகங்களில் ஆட்சி,உச்சம் போன்ற பலம் பெற்றிருப்பின் பகைவர்கள் அடங்கிபோவார்கள்.

        இதே போல செவ்வாய் 6,8,12 போன்ற ஸ்தானங்களிலிருந்து சுக்கிரன் பலம்பெற்றாலும் எதிரிகள் பயப்படும் அளவுக்கு உருவாக்கிவிடும்.
                                                                                                                                                              ஒரு சிலர் வீரனாகவும்,கோழையாகவும் காட்சி தருவதற்கு காரணம் அவனது சாதக கட்டத்தில் வீரிய ஸ்தானம் எனப்படும் மூன்றாம் அதிபதியும்,சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் ஆதிபதியான கிரகங்களோடு மற்றும் வலிமைக்காரன் எனப்படும் செவ்வாய் பலம் பெற அவன் வீரனாக இருப்பான்.அதே நேரத்தில் மேற்கண்ட ஸ்தான அதிபதியான கிரகங்களும்,செவ்வாயும் பலமிழந்தால் யாருக்கும் அஞ்சும் கோழையாகவும் இருப்பான்.

                             

            சிலர் எப்பொழுது பார்த்தாலும் மனக்கவலை உடையவராகவும், ஒரு முடிவு எடுக்க தெரியாமல் குழப்பிக்கொள்பவனாக,
கபடதாரியாகவும்,குடும்பங்களில் தங்காமல் சுற்றி திரிவதற்கு காரனம் அவனது சாதகத்தில் மனதை ஆட்சி புரியும் சந்திரன் பலமிழப்பதும் ,குடும்பாதிபதியான கிரகங்கள் பலமிழப்பதும்,புத்தி ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தில் அசயர்களான அரவுடன்,சனியின் மைந்தன் மாந்தி கூடியிருப்பதும் ஆகும்.

              சிலர் நன்கு பேசக்கூடிய பேச்சாற்றலை பெற்று வித்வானாக பிரசங்கியாக அவனது சாதகத்தில் புதன் மற்றும் சந்திரன் பலம் பெற்று இருக்கவேண்டும்.மேலும் இவர்கள் ஒன்றுக்கொன்று பார்வை,இரண்டாமிட தொடர்பு பெறின் வேடிக்கை விநோதமாக பேசக்கூடியவராக இருப்பர்.மேலும் இரண்டாம் இடத்தில் அரவுடன் அதன் அதிபதியும் கூடி இரண்டாமிடத்திலே இருப்பின் சிறந்த மக்கள் போற்றும்  பிரசங்கியாக திகழ்வான்.

              சிலர் மந்திரவாதியாக மாறிவிடுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்து நோக்கும்போது இதில் அரவாகிய ராகுவின் பங்கு முக்கியமானது.இவற்றுடன் ராசிக்கு நான்காமிட கிரகமும் மற்றும் சுக்கிரனும் கூடி சாதகத்தின் எந்த கட்டத்தில் இருந்தாலும் மாய மந்திரம் செய்பவராக மாறிவிடுவார்.

                         

              சிலர் ஆகாசத்தில் கம்பி கட்டி செப்படி வித்தைகள் செய்பவராக இருப்பதற்கு காரணம் அவனது சாதகத்தில் 5-12 க்குடைய கிரகாதிபதிகளுடன் மனதிற்காரன் சந்திரன் சேர நீர் மற்றும் ஆகாச மீது கம்பம் கட்டி செப்படி வித்தை நடத்தி பிழைப்பு நடத்துபவனாக ஆகிவிடுவான்.

           சிலருக்கு மட்டும் கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யும் யோகம் அமையப்பெறும்.அவரது ஜாதகங்களில் பார்த்தோமென்றால் சுகதிபதி எனப்படும் நான்காம் அதிபதியான கிரகமும்,கர்மாதிபதியான பத்தாம் அதிபதியின் கிரகமும் சேர்ந்து இருப்பதை பார்க்கிறோம்.இதேபோல் தர்மாதிபதி எனப்படும் ஒன்பதாமிட அதிபதியும்,கர்மாதிபதயான பத்தாம் அதிபதி சேர்ந்து மற்றும் ஒருவருக்கொருவர் பார்வை மற்றும் பரிவர்தனை (ஒரு சில ராசிகளுககு விதிவிலக்கு உண்டு) பெற்று தர்ம-கர்மாதிபதி யோகம் பெறுவர்களுக்கு மேற்கண்ட யோகம் அடைய வாய்ப்பு ஏற்படுகிறது.

                                
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
Teacher & Astrologer
Om sakthi jothida nillayam
Pudukkottai Dist
              Cell :
      97 151 89 64
        740 257 08 99
       Whats up no :
              97 151 89 647
(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற , தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

No comments: