Saturday, 18 November 2017

கிரகங்கள் படுத்தும் பாடு --( 6 )

கிரகங்கள் படுத்தும் பாடு -(6)

                                   
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

             மனிதநலனில் கிரகங்களின் பங்கு   முக்கியமானது.முட்டாள் வெற்றி பெறுவதும்,அறிவாளி தோற்றுவிடுவதும்,அழகானவனுக்கு அழகற்ற மனைவி அமைவதும்,புற அழகில்லாதவனுக்கு அருமையான அழகான மனைவி அமைவதும்....இதுபோல முரணாக வாழ்வு ஒரு சிலருக்கு அமைவதற்கும் கோள்களின் கோளாட்டாம்தான் காரணமாகும்..இதனை அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் "கிரகங்கள் படுத்தும் பாடு'' என்ற தலைப்பில் ஆறாம் பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

            ஒரு சிலருக்கு மட்டும் வாகன யோகம் இருப்பதால் எளிதாக வாகனங்கள் சேருவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களை ஒட்டுவதை தொழிலாகவும்,வாகனங்களை வைத்து நிர்வாகிக்கும் முதலாளியாகவும் ஆகிவிடுகிறார்.வாகனம் என்றால் சைக்கிள் கூட ஒரு வாகனம் தான்.இந்த வாகன யோகத்தினை காலத்திற்கு ஏற்றார்போல நாம் எடுத்துக்கொண்டு பலனளிக்க வேண்டும்.

             ஆரம்ப காலத்தில் வாகன யோகம் என்பது குதிரை வண்டி,மாட்டு வண்டி பிறகு சைக்கிள்,மோட்டர் பைக் வைத்திருப்பதை கருதினோம்.நவீன காலத்தில் இரு சக்கர வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என இருப்பதால் நான்கு சக்கர வாகனமான மகிழ்வுந்து ,பேருந்து முதலியவற்றை வைத்திருப்போரை வாகனயோகம் உள்ளவறாக கருதி பலனளிக்க வேண்டும்.

           எனவே வாகன யோகத்தை தரும் கிரகங்களில் முதன்மை வகிப்பவர்.இவர்தான் மனைக்கும்,மனைவிக்கும்,ஆடம்பர வாழ்வு தருவதற்கும் மற்றும் சிற்றின்ப விஷயங்களான காம களியாட்டங்களில் ஈடுபடுவதற்கும் காரகமாக திகழ்பவர்.இப்ப நான் கொடுத்த குறிப்புகளிலிருந்து வாகனத்திற்கு காரகர் யார் ? என உங்களால் யூகிக் முடிகிறதா ? ஆம் உங்களை காக்க வைக்க விரும்பவில்லை.அவர்தாங்க சுக்கிர பகவான்.இவர் ஒருவருடைய சாதகத்தில் ஆட்சி உச்சம் போன்ற தன்மையைப்பெற்று பலம் பெற்று நான்காமிடத்திலோ அல்லது நான்காமிட அதிபதியாகவோ திகழவேண்டும்.மேலும் இவர் ஒன்பது மற்றும் பத்தாமிடத்திலோ அல்லது அதன் அதிபதியாகவோ இருக்கவேண்டும்.இல்லையெனில் 4,9,10 போன்ற இட தொடர்பு பெற வேண்டும்.


                             

             அதனை தொடர்ந்து இரும்புக்காரன் எனப்படும் கனரக வாகனங்களை தரும் சனி பகவானும் பலம் பெற வேண்டும்.வாகனக்காரகனாகிய சுக்கிரன் சனி சாரம் வாங்கப்படுதல் மிகுந்த யோகத்தை தரும்.

              பணிரெண்டு ராசிகள் இருந்தாலும் வாகன யோகத்தை தரும் ஸ்தானம் நான்காமிடம் மற்றும் அதன் அதிபதியான கிரகம் இவைகள் முதலில் பலம் பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல என்னதான் வாகன யோகம் இருந்தாலும் அதை பராமரித்து அனுபவிக்கும் யோகம் பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாமிடம்.எனவே இந்த ஸ்தானம் மற்றும் அதன் அதிபதியான கிரகங்களும்  பலம் பெற்றிருக்க வேண்டும்.

            அடுத்து ஜீவன ஸ்தானம் எனும் பத்தாமிடம்.ஒருவர் வாகனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் யோகத்தை பெற பத்தாமிட அதிபதியாக சுக்கிரன் வந்து அவை இரும்பு காரன் எனும் சனி சாரம் பெற்று அவை பாக்கிய,தன மற்றும் லாப ஸ்தான தொடர்பை பெறும்போது அதிக பேருந்து போன்ற வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளியாக மாற்றி விடும்.

            எனவே சாதக கட்டங்களில் நான்காம் அதிபதி தன ,பாக்கிய,ஜீவன மற்றும் லாப ஸ்தானங்களில் தொடர்பு பெற்று அந்த நான்காம் அதிபதியும் சுக்கிரன் ஆகில் வாகன யோகத்தை அள்ளிதரும்.

             மேலும் வாகன காரராகிய சுக்கிரபகவான் அணியைச் சேர்ந்த
புதன்,சனி மற்றும் ராகு போன்றவை ஆகும்.இவர்களோடு சுக்கிர பகவான் தொடர்புபெறல் நலம்.

            மாறாக மேற்கூறிய ஸ்தானங்களும் அதன் அதிபதியான கிரகங்களும் பலமின்றி வாகன யோகத்தை அள்ளி தரும் சுக்கிர பகவானும் வலுவிழந்தால் வாகன யோகத்தை தராது.

மீண்டும் வேறு ஒரு தகவலோடு அடுத்த பதிவில் சந்திப்போம்.
படித்து பயன்பெறுங்கள்.மற்றவருக்கும் பகிருங்கள்.

                                
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
ஆசிரியர் & சோதிடர்
ஓம்சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ; 97 151 89 647
Cell: 740 257 08 99

Whatsup; 97 151 89 647

My Email : masterastroravi@gmail.com

My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
******************************************
(போனின் மூலம் சாதகம் பார்க்க விரும்புவோர் தொடர்புகொள்க.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸா செய்து கட்டணம் செலுத்தும் தகவல்களை பெறவும் )

No comments: